இப்போது இருக்கும் முடியை விட 2 மடங்கு முடி அதிகமாக வளர வாரம் 1 முறை போட வேண்டிய சுலபமான ஹேர் பேக் எது? இது தெரிஞ்சா இனி முடி கொட்டுதுன்னு கவலைப்படவே மாட்டீங்க!

long-hair
- Advertisement -

நாம் உண்ணும் உணவு மற்றும் சுற்றுச்சூழல் காரணமாக வேகமாக நம்முடைய முடியை இழந்து வருகிறோம். குறைந்த வயதிலேயே அதிக அளவிற்கு முடியை இழந்து விடக்கூடிய சூழ்நிலை அதிகரித்து வருகிறது. இதிலிருந்து எளிதாக தப்பிக்க இயற்கையான முறையில் நம் வீட்டிலேயே கொஞ்சம் மெனக்கெட்டு இந்த விஷயங்களை எல்லாம் நாம் செய்ய வேண்டும். சுலபமான முறையில் வாரம் ஒரு முறை இப்படி ஹேர் பேக் போட்டு வாருங்கள், இப்போது இருப்பதை விட ரெண்டு மடங்கு முடி நிச்சயம் வளரும். முடி உதிர்வது நிற்கும், மீண்டும் புதிய முடி வளரத் தூண்டும் ஆற்றல் இதற்கு உண்டு. அப்படியான ஒரு அழகு குறிப்பு பதிவை தான் இனி தொடர்ந்து படிக்க இருக்கிறோம்.

இயற்கையாக நம்மை சுற்றி இருக்கும் சில மூலிகை பொருட்கள் நம்முடைய தலைமுடியின் வளர்ச்சிக்கு அதிக அளவு பயனுள்ளதாக இருக்கிறது ஆனால் இதை விடுத்து கண்ட கண்ட எண்ணெய்களையும், ஷாம்பு போன்ற செயற்கை பொருட்களையும் பயன்படுத்தி நம்முடைய வலுவான கூந்தலை வலுவிழக்க செய்து கடைசியில் மண்டை தெரியும் அளவிற்கு முடி கொட்டி விடுகிறது. அதன் பிறகு தான் கொஞ்சம் சுதாரித்து என்ன செய்தால் நம்முடைய பிரச்சினை தீரும்? என்று யோசிக்க ஆரம்பிக்கிறோம். இதை முதலிலேயே செய்திருந்தால் இந்த பிரச்சனை ஏற்படுமா? என்று சிந்திக்க வேண்டும்.

- Advertisement -

நம் வீட்டை சுற்றிலும் அல்லது நமக்கு எளிதாக கிடைக்கக்கூடிய இந்த சில பொருட்களை பயன்படுத்தி வாரம் ஒரு முறை கொஞ்சம் உங்களுடைய தலைமுடிக்காக நேரத்தை ஒதுக்கி ஹேர் பேக் போடுங்கள். கண்டிப்பாக முப்பதே நாட்களில் உங்களுடைய இழந்த முடி மீண்டும் வளர துவங்குவதை பார்த்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அந்த அளவிற்கு எஃபெக்டிவாக இருக்கக்கூடிய இந்த ஹேர் பேக் செய்ய முதலில் இரண்டு அல்லது மூன்று செம்பருத்தி பூக்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

எல்லோருமே தலைமுடி வளர்ச்சிக்கு முதலில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு மூலிகை பொருள் செம்பருத்தி மட்டுமே ஆகும். எனவே செம்பருத்தி பூக்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு கைப்பிடி அளவிற்கு கறிவேப்பிலை போட்டுக் கொள்ளுங்கள். இதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு கற்றாழை ஜெல்லை நன்கு அலசி சுத்தம் செய்து போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் முதல் நாள் இரவே ஊற வைத்து எடுத்த பச்சைபயிறு அரை கப் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். இதை நன்கு பேஸ்ட் போல அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அரைத்து எடுத்த இந்த விழுதை ஒரு மெல்லிய காட்டன் துணியில் போட்டு நன்கு அழுத்தி பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் ஆலிவ் ஆயில் அல்லது விளக்கெண்ணெய் ஒரு ஸ்பூன் மட்டும் கலந்து கொள்ளுங்கள். இதை நன்கு கலந்த பின்பு உங்களுடைய தலைமுடியின் வேர்க்கால்களில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தபடி தடவி விடுங்கள். அதன் பிறகு முடி முழுவதும் தடவி ஒரு பத்து நிமிடம் நன்கு கொண்டை போல கட்டிக் கொண்டு ஊற விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
சன் டேன் ஆன இடங்களை உடனடியாக வெள்ளையாக மாற்றவும், கருத்து போன கழுத்து, கை, கால், முட்டி பகுதிகளை வெள்ளையாக மாற்றவும், இது ஒரு சூப்பரான ஐடியா. இன்ஸ்டன்டா ரிசல்ட்டை கண்முன்னே காணலாம்.

அதன் பிறகு நீங்கள் தலை முடியை எப்போதும் போல சீயக்காய் அல்லது மைல்டான ஷாம்பூ போட்டு அலசி விடுங்கள். அவ்வளவுதான், அவ்வளவு சூப்பரான எஃபெக்டிவ் ஆனா பலன்களை கொடுக்கக் கூடிய இந்த ஹேர் பேக் நீங்கள் நான்கு முறை ஒரு மாதத்தில் போட்டு பாருங்கள். ஒரு முடி கூட உதிராது, உதிர்ந்த இடத்திலும் மீண்டும் முடி முளைக்கும் அற்புதம் நடக்கும்.

- Advertisement -