தலை முடிக்கு தேவையான ஒட்டுமொத்த சத்தும் இந்த 1 ஸ்ப்ரேவில் அடங்கிவிடும். இந்த ஸ்ப்ரே அடிச்சா, டை கூட அடிக்க வேண்டாம்.

hair4
- Advertisement -

தலையில் வரும் இளநரையை போக்க, முதுநறையை தள்ளி போட, தலைமுடி ஆரோக்கியமாக வளர, தலைமுடிக்கு தேவையான அத்தனை சத்துகளும் கிடைக்க, புதிய முடி வளர்ச்சியை தூண்ட, இந்த ஒரு ஸ்பிரே போதும். அந்த அளவுக்கு ஊட்டச்சத்து நிறைந்த இந்த ஸ்பிரேவை சுலபமான முறையில் குறைந்த செலவில் எப்படி தயார் செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மிக மிக எளிமையான குறிப்பு இது. தொடர்ந்து நீங்கள் இதை பயன்படுத்தி வந்தால் எதிர்காலத்தில் டை அடிக்க வேண்டிய அவசியமே இருக்காது.

இந்த ஸ்பிரே தயார் செய்ய நமக்கு தேவையான பொருட்கள். கருவேப்பிலை ஒரு கைப்பிடி, காய்ந்த ரோஜா இதழ் ஒரு கைப்பிடி, நெல்லிக்காய் பொடி 1 ஸ்பூன், கிராம்பு பொடி 1/4 ஸ்பூன், துளசி இலை பொடி 1 ஸ்பூன், கடுக்காய் பொடி 1 ஸ்பூன், அவ்வளவுதான். இந்த பொடிகள் எல்லாம் நாட்டு மருந்து கடைகளில் நமக்கு கிடைக்கின்றது. (இந்த பொருட்கள் எல்லாம் பொடியாக இல்லாமல், முழு பொருட்களாக வாங்கி இருந்தாலும் அதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்தும் குறிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.)

- Advertisement -

முதலில் கருவாப்பிலையை நன்றாக கழுவி விட்டு எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் கருவேப்பிலையை முதலில் போட்டுக் கொள்ள வேண்டும். அதன் பின்பு ரோஜா இதழ்களை போட்டுக் கொள்ள வேண்டும். கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதை விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். நெல்லிக்காய் பொடி, கிராம்பு பொடி, துளசி பொடி, கடுக்காய் பொடி, எல்லாவற்றையும் மேல் சொன்ன அளவுகளில் இதோடு சேர்த்து மீண்டும் ஒரு ஓட்டு ஓட்டுங்கள். 1/4 கப் தண்ணீரையும் ஊற்றிக் கொள்ளுங்கள்.

அவ்வளவு தான். இதை அப்படியே வடிகட்டி அந்த தண்ணீரை மட்டும் ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி தலைக்கு ஸ்பிரே செய்து வர வேண்டும். (இதை ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்தால் பத்து நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.) நம் சேர்த்திருக்கக் கூடிய பொருட்களில் ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் அந்த ஸ்ப்ரேவில் இறங்கி இருக்கும். (இந்த ஸ்பிரே வை தயாரிக்க நம் அடுப்பு கூட பற்ற வைக்கவில்லை. காய்ச்சவே வேண்டாம். எல்லா பொருட்களையும் ஒன்றாக போட்டு நன்றாக அரைத்து அந்த தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொண்டாலே போதும்.)

- Advertisement -

சுத்தமாக தலைக்கு குளித்து விடுங்கள். தலை லேசாக காய்ந்து வரும் போது, உங்களுடைய முடியை ஒவ்வொரு பாகங்களாகப் பிரித்து, இதை அப்படியே உங்களுடைய தலைமுடியில் ஸ்பிரே செய்து வந்தாலே போதும். சூப்பரான ரிசல்ட் கிடைக்கும். மீண்டும் தலைக்கு குளிக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது.

வாரத்தில் இரண்டு நாள் தலைக்கு குளித்தால், இரண்டு நாளுமே இந்த ஸ்ப்ரேவை அடித்துக் கொள்ளலாம். இந்த குறிப்பை தொடர்ந்து பயன்படுத்தி வரலாம். ஆனால் நரை முடி வந்து விட்டது எனக்கு, என்பவர்கள் இந்த குறிப்பை இன்று பயன்படுத்தினால், நாளை ரிசல்ட் நிச்சயம் எதிர்பார்க்க முடியாது. மூன்றில் இருந்து நான்கு மாதங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது புதிய முடிகள் நரைமுடியாக வளராமல் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: அழகே உங்கள் அழகை பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு பேரழகியாக மாற, 10 ரூபாய் செலவில் சூப்பர் ரோஜா பூ கிரீம் வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?

நரைமுடி படிப்படியாகத்தான் கருப்பு முடியாக மாறும். இயற்கையாக நாம் பின்பற்றக்கூடிய குறிப்புகளில் ரிசல்ட் தெரிய கொஞ்சம் நேரம் எடுத்தாலும், அந்த ரிசல்ட் நிரந்தரமாக பக்க விளைவுகள் இல்லாத ரிசல்ட் ஆக இருக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயம் நரை முடி தொல்லையிலிருந்து விடுபட இந்த குறிப்பு உங்களுக்கு உதவி செய்யும்.

- Advertisement -