இந்த 2 பருப்பு உங்கள் வீட்டில் இருந்தால் இனி தலைமுடி உதிர்கிறதே என்கிற கவலையே நீங்கள் பட வேண்டாம்! ஒரே மாதத்தில் தலை முடியை நன்கு அடர்த்தியாக நீளமாக வளர வைப்பது எப்படி?

paruppu-hair-pack
- Advertisement -

வாரத்திற்கு இரண்டு முறையாவது தலை முடியை நன்கு அலசி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அது போல வாரம் முழுவதும் அல்லாவிட்டாலும், ஒரு முறையாவது சுத்தமான செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயை தடவி வர வேண்டும் என்பது நம் முன்னோர்களுடைய கருத்து. இப்படி செய்து வருபவர்களுக்கு அவ்வளவு சீக்கிரம் முடி எளிதாக கொட்டி‌விடாது என்பது நம்பிக்கையாக இருந்து வந்தது. ஆனால் இன்று இதற்கெல்லாம் நேரமில்லாமல் போய்விட்ட காரணத்தினால் நிறைய பேருக்கு முடி கொட்டுதல் பிரச்சனை அதிகரித்து வருகிறது. அப்படியான பிரச்சனைகளை ஒரே மாதத்தில் சரி செய்ய நம் வீட்டில் இருக்கும் இந்த ரெண்டு பருப்பு நல்ல ஒரு ரிசல்ட் கொடுக்கும். தலைமுடி உதிர்வதை தடுத்து நிறுத்தி ஒரே மாதத்தில் அடர்த்தியாக தலைமுடியை வளர செய்யக்கூடிய இந்த ரகசியத்தை இனி இந்த அழகு குறிப்பு பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாங்க.

நாம் சமையலுக்கு பயன்படுத்தும் இந்த பருப்பு வகைகள் ஏராளமான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. இந்த சத்துக்கள் அனைத்தும் நமக்கு தலைமுடி வளர ஊக்குவிப்பாக இருக்கக்கூடும் என்பதால் இதை நாம் இப்படி பயன்படுத்தி பார்க்க இருக்கிறோம். முதலில் ஒரு பவுலில் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதில் மூன்று டீஸ்பூன் அளவிற்கு பச்சை பயறை கழுவி சுத்தம் செய்து போட்டுக் கொள்ளுங்கள். இதனுடன் ரெண்டு டீஸ்பூன் அளவிற்கு வெள்ளை முழு உளுந்தையும் கழுவி சுத்தம் செய்து சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இரவு முழுவதும் நன்கு ஊறவிட்டு மறுநாள் காலையில் இதை எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தோசை மாவு போல அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்து எடுத்த இந்த விழுதுடன் இரண்டு டீஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் இதை தலைமுடியின் வேர்க்கால் முதல் நுனி வரை எல்லா இடங்களிலும் படும்படி நன்கு தடவி ஒரு பாலிதீன் கவரால் கட்டிக் கொள்ள வேண்டும். 30 நிமிடம் கழித்து சாதாரணமாக நீங்கள் எப்பொழுதும் போல தலைக்கு அலசி விடலாம்.

- Advertisement -

இப்படி தொடர்ந்து வாரத்திற்கு இரண்டு நாள் செய்து வர ஒரே மாதத்தில் உங்களுடைய தலைமுடி உதிர்வானது சட்டுனு நிற்கும். பின்பு புதிய முடி வளர துவங்கும். வேர்கால்களில் இருக்கக்கூடிய பாக்டீரியா தொற்றுகள் முழுமையாக நீங்கி பொடுகு தொல்லையிலிருந்து விடுபடலாம். ஈறு, பேன் போன்ற பிரச்சனைகளும் வராது. தலை முடி நன்கு செழித்து புசுபுசுன்னு அடர்த்தியாகவும், நீளமாகவும், சில்க்கியாகவும் வளரும். இந்த அற்புத ஹேர் பேக்கை இப்படி பயன்படுத்த நல்ல ஒரு பலனை நீங்கள் நிச்சயம் காணலாம்.

இதையும் படிக்கலாமே:
ஷாம்புவை இந்த தண்ணீரில் கலந்து தலைக்கு போட்டு குளிச்சு பாருங்க. வருட கணக்கில் வழுக்கையாகவே இருக்கும் இடத்தில் கூட, வளமாக முடி வளர தொடங்கிடும்.

ஏராளமான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ள இந்த பருப்பு வகைகளுடன் எண்ணெய் சேர்த்து நீங்கள் தலைக்கு பேக் போடும் போது உங்களுடைய தலைமுடி வறண்டு போகாமல் இருக்கும். நீங்கள் இந்த பேக் போடும் பொழுது ஷாம்பூவை தண்ணீரில் கரைத்து பின் தலையை அலசுங்கள் அல்லது சிகைக்காயும் பயன்படுத்தலாம்.

- Advertisement -