கைவிட்டுப் போன பணம் தானாக திரும்பி வர பரிகாரம்

hanuman3
- Advertisement -

மகாலட்சுமி நிலையாக ஒரே இடத்தில் தங்க மாட்டாள். இன்று நம் கையில் இருக்கும் மகாலட்சுமி, நாளை ஏதோ ஒரு காரணத்திற்காக அடுத்தவர்கள் கையை சென்று தான் ஆக வேண்டும். நம்மிடம் வந்து சேர்ந்த பணத்தை, நாமே பெட்டியில் வைத்து பூட்டி வைத்தால் எந்த பிரயோஜனமும் இல்லை.

அந்த பணம் வெறும் காகிதத்திற்கு சமமானது. பணத்தை எடுத்து செலவு செய்தாலோ அல்லது அடுத்தவர்களுக்கு அந்த பணத்தை பயன்படும்படி செய்தாலோ தான் அதற்கு உண்டான மதிப்பு இருக்கும். சரி, உங்க கையில் இருந்த பணம் எல்லாம் ஏதோ ஒரு காரணத்தால் உங்களை விட்டு சென்று விட்டதா.

- Advertisement -

அடுத்தவர்களிடம் நம்பி கடனாக கொடுத்த பணம் மீண்டும் வசூலாகவில்லையா, அல்லது ஏதோ ஒரு வகையில் வரக்கூடிய வருமானம் எல்லாம் வீண் விரைய செலவுகளாகவே கையை விட்டு நழுவி செல்கிறதா, இப்படி உங்கள் கையை விட்டு செல்கின்ற பணத்தை எல்லாம் மீண்டும் ஒரு வருமானமாக உங்களிடமே வர வைக்க செய்ய வேண்டிய ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.

பணம் தரும் அரச இலை பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருள் 21 அரச இலை. அந்த இலையை சுத்தமாகக் கழுவி நிழலிலேயே சிறிது நேரம் காய வைத்து விடுங்கள். அந்த இலைக்கு மேலே ‘ராம் ராம்’ என்று எழுத வேண்டும். செந்தூரத்தை தண்ணீரில் கலந்து அதை குச்சியில் தொட்டு இந்த இலையில் ராம் ராம் என்று எழுதினால் சிறப்பு. முடியாதவர்கள் பேனாவிலேயே ராம் ராம் என்று எழுதி விடுங்கள்.

- Advertisement -

எழுதிய இந்த இலைகளை அப்படியே சுருட்டி மாலையாக கட்ட வேண்டும். கட்டிய மாலையை அப்படியே கொண்டு போய் ஆஞ்சநேயர் கழுத்தில் போட வேண்டும். நான் இழந்த பணமெல்லாம் மீண்டும் என் கைக்கு திரும்ப வரவேண்டும் ஆஞ்சநேயா என்று அவருடைய பாதங்களை பற்றிக்கொள்ளுங்கள்.

வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமையில் இந்த பரிகாரத்தை செய்து அனுமனை வழிபாடு செய்தால் எந்த வழியில் உங்கள் கையை விட்டு போன பணமும், நல்ல வழியில் மீண்டும் உங்களை வந்து சேரும் என்பது நம்பிக்கை. 21 வாரம் சனிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்வது சிறப்பு. தொடர்ந்து செய்ய முடியவில்லை என்பவர்கள் ஒரு 3 வாரம் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: பண வசியம் ஏற்பட பௌர்ணமி வழிபாடு

பிறகு நேரம் கிடைக்கும் போது பரிகாரத்தை செய்வது மூலம் பணம் சம்பந்தப்பட்ட நஷ்டம் உங்களுக்கு ஏற்படாமல் இருக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறவும்.

- Advertisement -