வெற்றி மேல் வெற்றியை குவிக்கும் வெற்றிலை. இந்த திலகத்தை நெற்றியில் வைத்துக் கொண்டால் காரிய தடை உங்கள் பக்கம் நெருங்கவே நெருங்காது.

hanuman
- Advertisement -

முயற்சிகளில் தோல்வி கிடைப்பது என்பது எல்லா மனிதர்களுக்கும் சாதாரணமாக நடக்கக்கூடிய இயல்பான ஒரு விஷயம் தான். ஆனால் தோல்வியை கண்டு மனிதர்கள் பயப்படக்கூடாது. மீண்டும் மீண்டும் விடா முயற்சியை மேற்கொண்டால் தான் வெற்றி கிடைக்கும். சில பேருக்கு என்னதான் முயற்சி செய்து, எவ்வளவு தான் கஷ்டப்பட்டாலும் அந்த வெற்றி என்பதை அடையவே முடியாது. காரணம் அவர்களை சுற்றி இருக்கும் ஏதோ ஒரு எதிர்மறை ஆற்றலும், எதிர்மறை எண்ணங்களும் தான். உங்களுக்கு இந்த வெற்றியை கிடைக்காமல் தடுத்து நிறுத்தும், அந்த கெட்ட சக்தியை தகர்த்தெறிய, ஆன்மீகம் சொல்லும் ஒரு பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

வெற்றி திலகம் தயார் செய்யும் முறை:
இதற்கு நமக்கு ஒரு வெற்றிலை தேவை. இந்த பரிகாரத்தை சனிக்கிழமையில் செய்ய வேண்டும். கிழிசல் இல்லாத கொஞ்சம் பெருசாக இருக்கக்கூடிய வெற்றிலையை வாங்கிக் கொள்ளுங்கள். அதைக் கொண்டு போய் அனுமன் கோவிலில் அர்ச்சகரிடம் கொடுக்க வேண்டும். அந்த வெற்றிலையை அனுமன் பாதங்களில் வைத்து உங்கள் பெயர் நட்சத்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்து திரும்பி வாங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அனுமன் பாதங்களில் வைத்த வெற்றிலையை வீட்டிற்கு எடுத்து வந்து, வீட்டிலேயே ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு அனுமனையும் குலதெய்வத்தையும் மனதார வேண்டிக் கொள்ளுங்கள். வெற்றிலைக்கு உள்பக்கம் கொஞ்சமாக விளக்கெண்ணெய் தடவி விடுங்கள். ஏற்றி வைத்திருக்கும் விளக்கில், இந்த வெற்றிலையை சூடு செய்தால் அந்த வெற்றிலை கருப்பாகி கொஞ்சமாக மை போல நமக்கு கிடைக்கும். இந்த தயார் செய்த வெற்றிலையை அப்படியே பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குத் தான் இதை பயன்படுத்த முடியும். அதன் பிறகு வெற்றிலை வாடி விடும். உங்களுக்கு எப்போது முக்கியமான வேலைகளில் வெற்றி கிடைக்க வேண்டுமோ, எப்போது புதிய முயற்சிகளில் ஈடுபட போகிறீர்களோ, அந்த சமயத்தில் இந்த பரிகாரத்தை செய்து கொள்ளுங்கள். முயற்சிகளை மேற்கொள்ளும் சமயத்தில் காலையில் சுத்தபத்தமாக குளித்துவிட்டு, அனுமனை நினைத்து இந்த வெற்றிலையில் கருப்பாக இருக்கக்கூடிய அந்த புகை இருக்கிறது அல்லவா, அந்த திலகத்தை விரலில் தொட்டு நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இது உங்களுக்கு நீங்களே வைத்துக் கொள்ளக்கூடிய வெற்றி திலகம். இந்த திலகத்தை இட்டுக்கொண்டு நீங்கள் எந்த முயற்சிகளை மேற்கொண்டாலும் அது உங்களுக்கு முழு வெற்றியை கொடுக்கும். காரிய தடை இருக்காது.

இதையும் படிக்கலாமே: தீய சக்திகள் துர் தேவதைகள், எதிர்கள் என எதுவும் நீங்கள் இருக்கும் திசை பக்கம் கூட அருகில் கூட வராமல் தடுக்க சரபேஸ்வருக்கு இந்த தீபம் ஏற்றி வழிபட்டாலே போதும்.

புதிய வேலை தேடுபவர்கள், பெரிய இன்டர்வியூக்கு போறவங்க, பொண்ணு பாக்க போறவங்க, மாப்பிள்ளை பார்க்க போறவங்க,  நீங்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது, இப்படி நிறைய நல்ல காரியத்திற்கு இதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். சில பேர் சில சமயம் மன தைரியத்தை இழந்து கோழையாக செயல்படுவார்கள். மனக்குழப்பத்தில் இருக்கும் சமயத்தில், இப்படி ஒரு பரிகாரத்தை செய்து இந்த திலகத்தை மூன்று நாட்கள் நெற்றியில் இட்டு வர குழப்பங்கள் தெளிந்து, மனது தெளிவு பெறும். அனுமன் உங்களுக்கு தேவையான தைரியத்தை கொடுத்து விடுவார். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த எளிமையான பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -