எவ்வளவு அடிபட்டாலும் உங்கள் உடம்பில் இருக்கும் எலும்புகள் உடைந்து போகாமல் வலுவாக இருக்க, கால்சியம் சத்து நிறைந்துள்ள இந்த உணவை வாரத்திற்கு ஒரு முறை எடுத்துக் கொண்டால் போதும்

calcium
- Advertisement -

இப்பொழுதெல்லாம் கால் தவறி கீழே விழுந்தாலும் உடம்பில் உள்ள எலும்புகள் உடைந்து விடுகின்றன. அந்த அளவிற்கு கால்சியம் சத்து குறைவாக இருக்கிறது. சிலருக்கு தங்கள் உடம்பில் கால்சியம் குறைபாடு இருக்கின்றது என்பதே தெரிவதில்லை. இவ்வாறு ஆண், பெண் இருவருக்குமே இந்த கால்சியம் குறைபாடு பிரச்சினை இருப்பதினால் எந்த ஒரு சிறு அடியாக இருந்தாலும் அது எலும்பு முறிவை ஏற்படுத்துவதாக இருக்கிறது. எனவே உங்கள் உடம்பில் உள்ள எலும்புகள் வலுப்பட இந்த கால்சியம் ட்ரிங்க்கை மட்டும் தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். இதனைத் தொடர்ந்து குடித்துவர உங்களுக்குத் தேவையான கால்சியம் சத்து நிறைவாக கிடைக்கிறது. வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்

அதிக நேரம் உட்கார்ந்து இருக்கும்பொழுது கை, கால்கள் மரத்துப் போவது, முதுகு வலி உண்டாவது, ஞாபக மறதி, மன அழுத்தம் இது போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் அதற்கு காரணம் கால்சியம் குறைபாடாக இருக்கலாம். எனவே உடனடியாக உங்கள் உடலில் உள்ள கால்சியம் அளவை சரிபார்க்க வேண்டும். அதுபோல பெண்களின் மாதவிடாய் காரணமாக அவர்களுக்கு கால்சியம் குறைபாடு ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல் உடலில் அயன் குறைபாடு பிரச்சனையும் உண்டாகிறது.

- Advertisement -

இவ்வாறான குறைபாடுகள் அனைத்தையும் சரி செய்ய மருத்துவமனைக்கு செல்லாமல், நாம் உண்ணும் உணவின் மூலமே இவை அனைத்தையும் சரிப்படுத்த முடியும். அதற்காக நமக்குத் தேவைப்படும் ஒரு முக்கிய பொருள் என்னவென்றால் நமது மூதாதையர்கள் தங்கள் உணவாக எடுத்துக் கொண்ட கேழ்வரகு மாவு தான்.

இதில் ஒரு நாளைக்குத் நமது உடலிற்கு தேவையான கால்சியத்தின் அளவில் 13 சதவீத கால்சியம் கிடைக்கிறது. இது பாலில் இருக்கும் கால்சியம் அளவை விட அதிக அளவில் இருக்கிறது. அடுத்ததாக இரண்டு ஸ்பூன் கருப்பு எள் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் நமது உடம்பிற்கு தேவையான கால்சியத்தின் அளவில் 9 சதவீதம் கால்சியம் கிடைக்கிறது.

- Advertisement -

முதலில் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, கடாய் சூடேறியதும் ஒரு கப் கேழ்வரகு மாவை சேர்த்து வறுக்க வேண்டும். பின்னர் இதனை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு கடாயில் கருப்பு எள்ளை சேர்த்து வறுக்க வேண்டும். பிறகு இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக்கொள்ளவேண்டும். பிறகு இதனுடன் ஒரு ஸ்பூன் சோம்பு மற்றும் 15 பாதாம் பருப்புகளை சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் இந்த பொடியை கேழ்வரகு மாவுடன் சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். அதனை ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு மூடி போட்டு வைத்துக்கொண்டால், மூன்று மாதங்கள் ஆனாலும் கெட்டுப் போகாது. ஒரு டம்ளர் பாலுடன் 2 ஸ்பூன் கேழ்வரகு பவுடரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இதனை வடிகட்டி, அதனுடன் ஒரு ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து கலந்து குடித்தால் போதும். இதனைத் தொடர்ந்து எடுத்து வர உடலில் கால்சியம் சத்து அதிகரிக்க ஆரம்பிக்கும்.

- Advertisement -