குழந்தைகளின் வளர்ச்சியில் அக்கறையுள்ள பெற்றோர்கள் காம்ப்ளான் பூஸ்டிற்க்கு பதிலாக இதனை மட்டும் கொடுத்தால் போதும். குழந்தைகளின் ஆரோக்கியமும், உடல் வளர்ச்சியும் நன்றாக இருக்கும்

lotus-seed
- Advertisement -

ஒவ்வொரு தாய்மார்களும் குழந்தைகள் பள்ளி முடிந்து வந்ததும் அவர்கள் குடிப்பதற்கு பூஸ்ட், காம்ப்ளான், ஹார்லிக்ஸ் இது போன்ற திரவ உணவுகளை கொடுப்பதுண்டு. இதில் சேர்க்கப்படும் பொருட்கள் அனைத்தும் நாம் கடைகளில் வாங்கி பயன்படுத்துபவைகளாகும். இவை வெகு நாட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக இவற்றில் சில வேதியல் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இவற்றில் என்ன தான் ஆரோக்கியம் இருந்தாலும் அதனுடன் தேவையற்ற மூலப்பொருட்கள் சேர்ந்திருப்பதால் இதனை குடித்து வளரும் குழந்தைகளுக்கு பிற்காலத்தில் தேவையற்ற உடல் உபாதைகள் வந்து சேர்கிறது. இவ்வாறு குழந்தைகளின் ஆரோக்கியத்தில் ரிஸ்க் எடுக்காமல் அவர்களில் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்துள்ள இந்த புரத உணவை வீட்டிலேயே செய்து கொடுங்கள். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
பால் – ஒரு டம்ளர், தாமரை விதை – ஒரு கைப்பிடி, பனகற்கண்டு – 2 ஸ்பூன், கசகசா – ஒன்றரை ஸ்பூன், நெய் அரை ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் பாலை நன்றாகக் காய்ச்சி கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கிண்ணத்தை அடுப்பில் வைத்து, அதில் அரை ஸ்பூன் நெய் சேர்க்க வேண்டும். பிறகு ஒன்றரை ஸ்பூன் கசகசா சேர்த்து நன்றாக வறுத்து கொள்ள வேண்டும். அதன் பின் ஒரு கைப்பிடி தாமரை விதைகளை சேர்த்து வறுக்க வேண்டும்.

பிறகு இதனுடன் ஒரு கப் பாலைச் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும் பின்னர் இதனை ஒரு கிண்ணத்தில் மாற்றி அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் கற்கண்டை பொடி செய்து சேர்த்துக் கொள்ளலாம் ஆனால் நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்தால் இவை திரிந்து விடும்.

- Advertisement -

இவ்வாறு இனிப்பு சேர்த்து கலந்துவிட்டு கொஞ்சம் ஆறிய பிறகு குழந்தைகளுக்கு குடிக்க கொடுக்க வேண்டும். இதனை தொடர்ந்து குடித்து வர குழந்தைகள் வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதுமட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு கால்சியம் அதிகமாக கிடைப்பதால் எலும்பு வளர்ச்சியும் ஆரோக்கியமாக இருக்கும்.

பயன்கள்:
இந்தத் தாமரை விதை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. அல்லது இதனை ஆன்லைனில் புக் செய்தும் வாங்கிக் கொள்ளலாம். இதில் உடம்பிற்கு தேவையான கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு போன்ற அபரிமிதமான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. இது உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இரத்தத்தில் ஆக்சிஜன் அளவை சீராக்குகிறது.

அது மட்டும் அல்லாமல் மலச்சிக்கல் பிரச்சனை இருந்தாலும் அவற்றை சரி செய்கிறது. எலும்பு வலி, மூட்டுவலி, தசைப்பிடிப்பு போன்ற அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்கிறது. முகத்தை என்றும் பொலிவுடன் வைக்கிறது. இவ்வாறு இது பல விதமான நன்மைகளை கொடுக்க வல்லது. எனவே இதனை வாரத்திற்கு ஒரு முறையாவது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடித்து வந்தால் உடல் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்கும்.

- Advertisement -