சங்கடங்கள் தீர சங்கடஹர சதுர்த்தி மந்திரம்

pillaiyar4
- Advertisement -

எவர் ஒருவர் சங்கடஹர சதுர்த்தி அன்று இந்த ஹேரம்ப விநாயகர் மந்திரத்தை சொல்கிறார்களோ, அவர்களுக்கு இருக்கும் நீண்ட நாள் கஷ்டங்கள், நீண்ட நாள் சங்கடங்கள், உடனடியாக சரியாகிவிடும். ரொம்ப நாளா இந்த கஷ்டம் என் மனதில் இருக்கு. ஆனால் அந்த கஷ்டத்தை வெளியில் சகமனிதர்களிடம் சொல்லவும் முடியவில்லை, அந்த கஷ்டத்தை மறக்கவும் முடியவில்லை என்பவர்கள், இன்று இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.

இதோடு விட்டுவிடாமல் தொடர்ந்து ஐந்து சங்கடஹர சதுர்த்திக்கு இந்த பிள்ளையார் மந்திரத்தை சொன்னால் உங்கள் சங்கடங்கள் நிரந்தரமாக தீரும். இன்று மாலை இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். கொஞ்சமாக ஒரு கிண்ணத்தில் மஞ்சள் தூள் போட்டு, தண்ணீர் ஊற்றி கலந்து மஞ்சள் பிள்ளையார் பிடித்துக் கொள்ளுங்கள். ஒரு வெற்றிலையின் மீது அந்த மஞ்சள் பிள்ளையாரை வைத்து குங்குமப்பொட்டு வைத்து, அதற்கு அருகம்புல் வைக்கவும்.

- Advertisement -

இந்த மஞ்சள் பிள்ளையாருக்கு குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும். வழக்கம்போல பிள்ளையாருக்கு பூ போட்டு பூஜையறையில் விளக்கு ஏற்றி வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். குங்கும அர்ச்சனையின் போது விநாயகரது இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.

ஹேரம்ப கணபதி மந்திரம்

ஓம் நமோ ஹேரம்ப
மதமோதித, மம சர்வ சங்கடம்
நிவாராய நிவாராய ஹும் ஃபட் ஸ்வாஹா.

- Advertisement -

108 முறை இந்த மந்திரத்தை சொல்லி விநாயகருக்கு குங்கும அர்ச்சனை செய்து, இந்த பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். உங்களுடைய தீராத துன்பம், தீராத கஷ்டம் இருக்கும் அல்லவா. அதை விநாயகப் பெருமானிடம் சொல்லி மனமுருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பிறகு தீப தூப ஆராதனை காண்பித்து இந்த பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும். மறுநாள் காலை எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, இந்த மஞ்சள் பிள்ளையாரை ஒரு சொம்பு நல்ல தண்ணீரில் கரைத்து விடலாம்.

இல்லை உங்கள் வீட்டில் தொட்டியில் செடி இருக்கிறது என்றால் அந்த செடியில் இந்த பிள்ளையாரையும் வெற்றிலையையும் எடுத்து போடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஐந்து வாரம் சங்கடஹர சதுர்த்தி அன்று மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து இந்த மந்திரத்தை சொல்பவர்களுடைய சங்கடம் சொல்லாமலேயே காணாமல் போகும்.

- Advertisement -

அது மட்டும் இல்லாமல் ஜாதகத்தில் ராகு கேது தோஷம் இருக்குது. சனி பகவானால் பிரச்சனை, வாழ்க்கையில் முன்னேற முடியவில்லை, திருமண வாழ்க்கையில் கஷ்டம், என்று இன்னல்களில் அவதிப்பட்டு கொண்டிருப்பவர்களும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். அந்த விநாயகப் பெருமான் உங்களுடைய சங்கடங்களை எல்லாம் தீர்த்து வைக்க ஓடோடி வந்து விடுவார்.

இதையும் படிக்கலாமே: சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகர் கோவிலுக்கு செய்ய வேண்டிய தானம்

அதிலும் இது தை மாதம் வந்திருக்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தி இந்த நாளில் வழிபாட்டை தொடங்கியவர்களுக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -