எவ்வளவு கருப்பா இருந்தாலும் டக்குனு 10 நிமிடத்தில் செம கலரா மாற இதை செஞ்சு பாருங்க.

face
- Advertisement -

ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி பார்ப்பதற்கு கொஞ்சம் கலராக அழகான தோற்றத்தில் இருப்பது தன்னம்பிக்கையை கொடுக்கும். தைரியத்தை கொடுக்கும். அதற்காக கருப்பாக இருப்பவர்கள் எல்லாம் வாழ்க்கையில் தன்னம்பிக்கையோடு தைரியத்தோடு வாழ்ந்து சாதிப்பது இல்லையா என்ற கேள்வியை எழுப்ப வேண்டாம்.

நம்முடைய தோற்றத்தை அழகாக வெளிப்படுத்துவதில் எந்த தவறும் கிடையாது. ஆள் பாதி ஆடை பாதி என்று சொல்லுவார்கள் அல்லவா. அந்த அடிப்படையில் இன்று கூடுதலான அழகைப் பெற வீட்டில் இருந்தபடியே எளிமையான பொருட்களை வைத்து ஒரு அழகு குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். தேவை என்பவர்கள் பதிவை முழுமையாக படித்து பலன் பெறலாம்.

- Advertisement -

வெள்ளையாக எளிமையான அழகு குறிப்பு

இந்த அழகு குறிப்புக்கு முதலில் நமக்கு மைசூர் டால் 25 கிராம், பாதாம் பருப்பு 15 கிராம் தேவை. இந்த இரண்டு பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்து பொடித்து சலித்து எடுத்துக் கொள்ளுங்கள். பொடி கொரகொரப்பாக இருக்கக் கூடாது. நைசாக இருக்க வேண்டும்.

அரைத்த இந்த பொடியை ஒரு பாட்டிலில் போட்டு ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும் போது இதை ஸ்பூனில் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போது இந்த பவுடரை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்வோம். 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவலை மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அடித்து பிழிந்து தேங்காய் பால் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த தேங்காய் பாலோடு ஆலிவ் ஆயில் 1/2 ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் 1/2 ஸ்பூன், தக்காளி பழச்சாறு 2 டேபிள் ஸ்பூன், லெமன் சாறு 4 லிருந்து 5 சொட்டுக்கள் விட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு லெமன் சாறு அலர்ஜியை கொடுக்கும் என்றால் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

இப்போது தயாராக இருக்கும் இந்த லிக்விடில் நாம் ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் பொடியை தேவையான அளவு போட்டு கலந்தால் சூப்பரான பேக் தயாராகி இருக்கும். இதை சருமத்தில் எப்போது அப்ளை செய்வது. நீங்கள் சோப்பு போட்டு குளித்து முடித்த பிறகு ஈர உடம்பில் இந்த பேக்கை எடுத்து முகம் கழுத்து கைகால் பகுதிகளில் அப்ளை செய்து நன்றாக ஐந்து நிமிடம் வட்ட வடிவில் மசாஜ் செய்து தேய்த்து பிறகு வெறும் தண்ணீரில் குளித்து விட வேண்டும்.

- Advertisement -

தினமும் இந்த பேக்கை போட்டு குளித்தால் சருமம் பொலிவு பெறும். ஒரு சில நாட்களிலேயே நல்ல வெள்ளையான சருமத்தை பெற்று விடுவீர்கள். குளிக்கும்போது இதை உங்களால் பயன்படுத்த முடியவில்லை என்றால் இரவு நேரத்தில் கூட முகம் கைகளை சுத்தமாக கழுவி விட்டு இதை பேக் போல முகத்திலும் கைகளிலும் போட்டுக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: 50 வயதிலும் 20 வயது போல் இளமையான சருமத்தை பெற இந்த ஃபேஸ் பேக்கை உபயோகப்படுத்தி பாருங்கள்.

10 நிமிடம் கழித்து குளிர்ந்த தண்ணீரில் முகம் கைகளை கழுவி விட்டு தூங்க செல்லலாம். இதை செய்தாலும் பொலிவான சருமம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குறிப்பை தொடர்ந்து ஒரு மாதம் பின்பற்றும்போது நல்ல வித்தியாசம் தெரியும். மேலே சொன்ன அழகு குறிப்பு ஆர்வம் உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறுங்கள்.

- Advertisement -