ஒரே வாரத்தில் உங்க கலரை இரு மடங்கு அதிகரிக்க இந்த இரண்டு பொருள் இருந்தா போதும்.

bath powder beauty tips
- Advertisement -

முகம் நல்ல அழகுடன் பார்க்க வசீகரமான தோற்றத்துடன் இருக்க வேண்டும் என நினைப்பது எல்லோருடைய இயல்பு தான். ஆனால் முகம் மட்டும் அப்படி இருந்து கை கால் கழுத்து உடல் போன்ற பாகங்கள் அனைத்தும் கறுத்து இருந்தால் அதுவுமே பார்க்க நன்றாக இருக்காது. அப்படியானால் முழு உடம்பும் கலராக மாற வேண்டும் அல்லவா

இந்த அழகு குறிப்பு பதிவில் முழு உடலையும் கலராக மாற்றக் கூடிய ஒரு அற்புதமான அதே நேரத்தில் எளிமையான குளியல் பொடியை எப்படி தயார் செய்வது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த குளியல் பொடி உங்களிடம் இருந்தால் போதும் இரண்டே வாரத்தில் உங்க முழு உடம்பும் ஜொலிக்க ஆரம்பிக்கும்.

- Advertisement -

முழு உடம்பும் ஜொலிக்க குளியல் பொடி

இந்தப் பொடி தயாரிக்க நமக்கு முக்கியமான இரண்டு பொருள் மட்டும் தான் தேவை. அதில் ஒன்று பச்சை பயிறு, மற்றொன்று வெந்தயம் இப்போது இதை வைத்து இந்த பொடியை எப்படி தயார் செய்வது என்று பார்க்கலாம்.

இந்த பொடி தயாரிக்க ஒரு கப் பச்சைப்பயிறு எடுத்துக் கொள்ளுங்கள். இதை காய வைக்க தேவையில்லை அப்படியே கடையில் வாங்கியதை எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு வெந்தயம் இரண்டையும் சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்து விடுங்கள். இது லேசான கொரகொரப்பு தன்மையுடன் தான் இருக்கும்.

- Advertisement -

இத்துடன் இரண்டு டேபிள் ஸ்பூன் கஸ்தூரி மஞ்சளை சேர்த்துக் கொள்ளுங்கள். கஸ்தூரி மஞ்சள் ஒத்துக் கொள்ளாது அல்லது வேண்டாம் என நினைப்பவர்கள் இதை தவிர்த்து விடலாம். இப்படி கலந்த இந்த பொடியை ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து இந்தப் பொடியை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

உங்களுடைய சருமம் வறண்டதாக இருந்தால் தேவையான அளவு இந்த பொடியை எடுத்து இத்துடன் காய்ச்சிய அல்லது காய்ச்சாத பாலை சேர்த்து நன்றாக குழைத்துக் கொள்ளுங்கள். இதை குளிக்கும் பொழுது சோப்பிற்கு பதிலாக முழு உடம்பிற்கு இந்த பொடியை தேய்த்து குளிக்கலாம். உங்களின் சருமம் ஆயிலாக இருந்தால் பாலுக்கு பதிலாக தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

முழு உடலிலும் இதை தேய்த்து குளிப்பது உங்களுக்கு விருப்பமில்லை எனில் வெளியில் எங்கு சென்று வந்தாலும் உடனே இதை உங்கள் முகத்தில் பேக்காக போட்டுக் கொள்ளுங்கள். அதே போல் வாரத்திற்கு இரண்டு முறை இந்த பவுடரை ஃபேஸ் பேக்காக பயன்படுத்தும் பொழுது முகம் நல்ல நிறமாக மாறும்.

இதையும் படிக்கலாமே: பொடுகு மற்றும் முடி உதிர்தல் பிரச்சினை இருப்பவர்கள் முருங்கைக் கீரை வைத்து வாரத்திற்கு ஒரு முறை ஹேர் பேக் பயன்படுத்தினால் போதும்.

உங்க முழு உடம்பையும் கலரா மாற்றக் கூடிய இந்த குளியல் பொடிய நீங்களும் ஒரு முறை பயன் படுத்தினா போதும். இனி சோப்பு ஃபேஸ் க்ரீம் எல்லாத்தையும் தூக்கி தூர போட்டுட்டு இந்த பொடியை மட்டும் தான் பயன்படுத்துவீங்க.

- Advertisement -