நரை முடி கருப்பாகி அடர்த்தியாக வளர்வதற்கு உதவும் தேங்காய் எண்ணெய்.

hair oil
- Advertisement -

அன்றைய காலகட்டத்தில் 40 வயதை கடந்தவர்களுக்கு தான் நரை முடி என்பது ஆரம்பிக்கும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் படிக்கும் சிறு குழந்தைகள் முதற்கொண்டு அனைவருக்கும் நரைமுடி பிரச்சனை ஏற்படுகிறது. இதை ஆரம்பத்திலேயே தடுத்து விட்டால் அதிகமாக பரவுவதை நம்மால் கட்டுப்படுத்த முடியும். இல்லையேல் சிறிய வயதிலேயே அனைத்து முடிகளும் நரைத்து விடும். இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நரை முடியை கருமையாக்குவதற்கும் அதே சமயம் முடியை அடர்த்தியாக வளர வைக்கவும் உதவக்கூடிய எண்ணெயை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

முடியின் ஆரோக்கியம் என்று பார்க்கும் பொழுது பல வகையான எண்ணெய்கள், ஷாம்புகள், ஹேர் பேக், ஹேர் மாஸ்க் என்று பல இருக்கிறது. அவை அனைத்தையும் முயற்சி செய்யாமல் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் தான் அதன் பலனை நம்மால் உணர முடியும். சரி இப்பொழுது எண்ணெய் தயாரிக்கும் முறையை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

இந்த எண்ணெயை தயாரிப்பதற்கு செம்பருத்தி பொடி, கருப்பு எள், கரிசலாங்கண்ணி பொடி, நெல்லிக்காய் பொடி, தேங்காய் எண்ணெய் இவை அனைத்தும் தேவைப்படும். இப்பொழுது ஒரு இரும்பு கடாயை எடுத்துக் கொள்வோம். அதில் 250 மில்லி தேங்காய் எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் கொதிக்க ஆரம்பித்தவுடன் செம்பருத்தி பொடி 4 டேபிள் ஸ்பூன், கரிசலாங்கண்ணி 1 டேபிள் ஸ்பூன், நெல்லிக்காய் 1/2 டேபிள்ஸ்பூன் மூன்றையும் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

ஐந்து நிமிடம் கழித்து கருப்பு எள் 3 டேபிள் ஸ்பூனை அதில் சேர்த்து பத்து நிமிடம் குறைந்த தீயில் வைத்து கொதிக்க விட வேண்டும். 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விட வேண்டும். இந்த எண்ணெய் இதே கடாயில் இரண்டு நாட்கள் அப்படியே இருக்கட்டும். இரண்டு நாட்கள் கழித்து ஒரு வடிகட்டியை பயன்படுத்தி கண்ணாடி பாட்டிலில் வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அன்றாடம் தலைக்கு எண்ணெய் வைப்பவர்கள் இந்த எண்ணெயை பயன்படுத்தலாம். அவ்வாறு எண்ணெய் வைக்கும் பழக்கம் இல்லாதவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் ஆவது தலையில் இந்த எண்ணையை லேசாக சூடு செய்து தேய்த்து மசாஜ் செய்து 1/2 மணி நேரம் கழித்து ஷாம்பு அல்லது சீவக்காய் போட்டு தலையை அலச வேண்டும்.

கருப்பு எள் மற்றும் செம்பருத்திப் பூவில் மெலனின் அதிகமாக இருப்பதால் அது நம்முடைய நரைமுடியை கருப்பாக்க உதவுகிறது. இந்த எண்ணெயை நாம் பயன்படுத்துவதால் நரைமுடி மற்றும் மட்டும் சரியாவதோடு இல்லாமல் தலைமுடி என்பது மிகவும் அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.

இதையும் படிக்கலாமே: முடி அடர்த்தியாக வளர ஹேர் பேக்.

ஆறு மாதத்திற்கு ஒருமுறை நாமே நமக்கு தேவையான எண்ணெயை தயாரித்து உபயோகப்படுத்துவதால் நம் தலைமுடியின் ஆரோக்கியத்தை நம்மால் பாதுகாக்க முடியும்.

- Advertisement -