தேனுடன் இந்த 1 பொருளை சேர்த்து தினமும் முகத்தில் தடவி வந்தால் போதும். முகம் கண்ணாடி போல ஜொலிக்க தொடங்கும்.

face18
- Advertisement -

தேனை வைத்து மிக மிக சுலபமான முறையில் மூன்று குறிப்புகளை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இயற்கையான முறையில் இயற்கையான பொருட்களை வைத்து பின் சொல்லக்கூடிய குறிப்புகளை பின்பற்றி வருவதன் மூலம், கண்ணுக்கு கீழே இருக்கும் கருவளையம், வாய் சுற்றி இருக்கும் கருவளையம் கழுத்தில் இருக்கக்கூடிய கருவளையம் குறையும். இரண்டாவதாக உடல் முழுவதும் வெள்ளையாக ஒரு குறிப்பு சொல்லப்பட்டுள்ளது. மூன்றாவதாக முகத்தை பொலிவாக்க ஒரு குறிப்பு சொல்லப்பட்டுள்ளது. இந்த மூன்றுமே அழகுக்கு அழகு சேர்க்க கூடிய குறிப்புகள்தான். அழகின் மீது ஆர்வம் உள்ளவர்கள் குறிப்பைப் படித்து பலன் பெறலாம்.

கண் கருவளையம் மறைய:
உருளைக்கிழங்கு சாறு 1 டேபிள் ஸ்பூன், சுத்தமான தேன் – 1 டேபிள் ஸ்பூன், இந்த இரண்டு பொருட்களையும் நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும். கண்ணுக்கு கீழே இருக்கக்கூடிய கருவளைதில், வாயை சுற்றி இருக்கும் கருப்பில், இந்த கலவையை தடவி நன்றாக மசாஜ் செய்து இரவு முழுவதும் அப்படியே விட்டு விட்டு காலையில் கழுவிவிட வேண்டும். தினமும் இதை செய்து வந்தால் கருவளையம் படிப்படியாக குறைவதை உணர்வீர்கள்.

- Advertisement -

உருளைக்கிழங்கைத் துருவி பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளலாம். அல்லது உருளைக்கிழங்கை தோல் சீவி சிறிய துண்டுகளாக வெட்டி மிக்சியில் போட்டு அரைத்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ளலாம்.

உடல் முழுவதும் வெள்ளையாக:
பாதாம் பொடி – 2 டேபிள்ஸ்பூன், அரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன், இந்த இரண்டு பொருட்களையும் கலக்க தேவையான அளவு சுத்தமான தேன். அவ்வளவு தான். இந்த 3 பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கலந்து பேஸ்ட் போல தயார் செய்து கொள்ள வேண்டும். குளிக்கும் போது சோப்பு போட்டு முதலில் குளித்து விடுங்கள். அதன் பின்பு இந்த கலவையை உடல் முழுவதும் தடவி மசாஜ் செய்து குளித்தால் மேனி பளபளப்பாக மாறும். தேவைப்பட்டால் இதை முகத்திற்கு ஃபேஸ் பேக் போட்டுக் கொள்ளலாம்.

- Advertisement -

முகம் பொலிவு பெற:
ஓட்ஸ் பவுடர் – 1 டேபிள்ஸ்பூன், தேன் – 2 டேபிள்ஸ்பூன், தேவையான அளவு மோர் ஊற்றி, இதை பேக்காக கலந்து அப்படியே முகத்தில் பேக் போட்டு 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் முகம் பொலிவு பெறும். ஓட்ஸை மிக்ஸியில் போட்டு அரைத்தால் ஓட்ஸ் பொடி கிடைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த குறிப்புகள் எல்லாம் இயற்கையான பொருட்களை வைத்து நமக்கு சொல்லப்பட்டுள்ள குறிப்புகள். ஆகையால் தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது நிச்சயமாக நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

- Advertisement -