முடி கொட்டிய இடத்தில் மீண்டும் முளைக்க, இளநரையை போக்க அரிசியும், சின்ன வெங்காயமும் இருந்தால் போதுமே!

onion-rice-hair-fall
- Advertisement -

தலை முடி கொட்டுவது என்பது மிகப்பெரிய பிரச்சினையாக இன்று விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம் நம் உணவு முறை மாற்றமும், நம் பழக்க வழக்கங்களும் தான். மெஷின் போல ஓடிக் கொண்டிருக்கும் இந்த உலகத்தில் நமக்கென தனியாக ஒரு நேரத்தை ஒதுக்கி வைக்க முடியாமல் போய் விடுகிறது. அப்படி இருக்க தலை முடியை மட்டும் கவனித்து விடுவோமா என்ன? இப்படி தலைமுடியை பற்றிய அக்கறை இல்லாமலும், சாப்பிடும் உணவில் சத்துக்கள் இல்லாமலும் போவதால் தலைமுடியின் வளர்ச்சி வெகுவாக குறைகிறது.

hair-fall

சுற்றுப்புற சூழலில் இருக்கும் மாசு மேலும் முடி வளர்ச்சியை தடை செய்து இளம் வயதிலேயே வழுக்கை விழ செய்து விடுகிறது என்பது தான் நிதர்சனமான உண்மை. இதற்கு மிக மிக எளிமையான முறையில் நம் பாட்டி காலத்து வைத்திய முறையில் தீர்வு காண முடியும்! அதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

- Advertisement -

தலை முடியின் வேர் கால்களுக்கு வலு கூட்டவும், இழந்த இடத்திலிருந்து மீண்டும் முடி முளைக்க செய்யவும், நம் வீட்டில் இருக்கும் இந்த இரண்டு பொருட்கள் போதும். ஒரு கைப்பிடி அரிசி மற்றும் ஒரு கைப்பிடி அளவிற்கு சின்ன வெங்காயம் இந்த இரண்டு மட்டும் இருந்தால் போதும். இதை வைத்தே தீராத இந்த முடி பிரச்சனைக்கு எளிமையாக தீர்வு காண முடியும். இதற்காக மெனக்கெட்டு பல இடங்களுக்கு சென்று கண்ட கண்ட எண்ணெய்களை வாங்கி தடவ வேண்டிய அவசியமும் இல்லை. அதிக செலவு செய்து ஷாம்பூக்கள், மருத்துவ ரீதியான முயற்சிகள் கூட மேற்கொள்ள வேண்டியது இல்லை.

narai-mudi-2

இளம் வயதிலேயே நரைமுடி அதிகம் இருப்பவர்கள் தொடர்ந்து இதை பயன்படுத்தி வரும் பொழுது ஒரு நரை முடி கூட இல்லாமல் அனைத்து முடியும் கருப்பாக சூப்பராக மாறிவிடும். எவ்வளவு நவீனம் வந்தாலும், நம் பாட்டி காலத்து கைப்பக்குவம் மட்டும் என்றும் மாறுவதில்லை என்கிற நம்பிக்கை இருப்பவர்கள் இதனை தொடர்ந்து முயற்சி செய்து பார்க்கலாம். இதனால் எந்த விதமான பக்க விளைவுகளும் வரப் போவது இல்லை. முடியின் வளர்ச்சி வெகுவாக வேகமாக வளர்வதை நீங்களே ஆச்சரியப்படும் வகையில் பார்க்கலாம்.

- Advertisement -

ஒரு கைப்பிடி அளவிற்கு பச்சை அரிசி, ரேஷன் அரிசி அல்லது புழுங்கல் அரிசி, இட்லி அரிசி என்று எதுவாக இருந்தாலும் சரி அரிசி மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். அதை நன்கு தண்ணீரில் அலசி ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் சின்ன வெங்காயத்தை தோல் உரித்து சிறுசிறு துண்டுகளாக வெட்டி அதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை அப்படியே ஒரு இரவு முழுவதும் ஊற விட்டு விடுங்கள். மூடி போட்டு பாத்திரத்தை மூடி வைத்து விடுங்கள்.

onion

பின்னர் காலையில் எழுந்து பார்த்தால் அரிசி மற்றும் சின்ன வெங்காயத்தின் சாறு முழுவதும் அந்த தண்ணீரில் இறங்கி இருக்கும். அதனை நன்கு கைகளால் பிசைந்து கொள்ளுங்கள். அதன் பிறகு வடிகட்டி ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். அந்த தண்ணீரை தினமும் தலைக்கு வேர்க்கால்களில் படும்படி தடவி 15 நிமிடத்திற்கு ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின் சாதாரண தண்ணீரில் ஷாம்பு போட்டு தலை முடியை அலசினால் போதும், முடி நாளடைவில் நன்கு வளர்ச்சி அடைய செய்யும்.

- Advertisement -