உங்கள் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருக்கிறது என்பதை ஜோதிடரிடம் போய் பார்க்க வேண்டிய அவசியமில்லை! நீங்களே எப்படி பார்ப்பது தெரியுமா?

pithru-rameshwaram
- Advertisement -

ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிகப் பெரிய இன்னல்களை ஏற்படுத்தும் தோஷம் என்றால் அது பித்ரு தோஷம் ஆகும். இது குல தெய்வ சாபத்திற்கு இணையாக கருதப்படுகிறது. எப்படி குலதெய்வத்தை கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டால் அடுத்தடுத்த சந்ததியினர் வரை பிரச்சனைகளை கொடுத்து குலதெய்வம் நம்மை தன்பக்கம் திசை திருப்ப செய்கிறாரோ! அதே போல நம் முன்னோர்களாகிய பித்ருக்களும் அவர்களை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால் நமக்கு நிறைய கஷ்டங்களையும், துன்பங்களையும் கொடுப்பார்கள்.

இதன் மூலம் பித்ருதோஷம் இருப்பதையும், அதை எப்படி நிவர்த்தி செய்வது? என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுடைய ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருக்கிறதா? இல்லையா? என்பதை ஜோதிடரிடம் சென்று தான் பார்க்க வேண்டிய அவசியமில்லை! நம் ஜாதகத்தை எடுத்து நாமே பார்த்துக் கொள்ளலாம். அது எப்படி? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

- Advertisement -

உங்கள் ஜாதகத்தில் /லா என்று போடப்பட்டிருக்கும் இடம் தான் உங்களுடைய முதல் வீடாக நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலிருந்து இரண்டு, மூன்று, நான்கு என்று பன்னிரெண்டு வீடுகள் வரை ஒரு ஜாதக கட்டத்தில் அமையப் பெற்றிருக்கும். இதில் முதல் வீடான லக்னத்தில் அதாவது உங்கள் ஜாதகத்தின் ஒன்றாவது வீட்டில் ராகு இருந்து, அதிலிருந்து ஏழாவது வீட்டில் கேது அமையப் பெற்றிருந்தால் அந்த ஜாதகருக்கு பித்ரு தோஷம் இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

அதே போல 1வது வீட்டில் கேது அமையப் பெற்று, 7வது வீட்டில் ராகு பகவான் இடம் பெற்றிருந்தாலும், அந்த ஜாதகர் பித்ரு தோஷம் உடையவர் ஆவார். பூர்வ புண்ணிய அடிப்படையில் கணிக்கப்படுவது தான் இந்த பித்ரு தோஷம். பெற்ற தாய் தந்தையரைப் பேணிக் காப்பாற்றாமல் விட்டுவிடுவது, அவர்களுக்கு செய்ய வேண்டிய ஈம காரியங்களை செய்யாமல் விடுவது போன்றவை தோஷத்தை ஏற்படுத்துகிறது. அது போல் மாதா மாதம் வரும் அமாவாசை அன்று பித்ரு பூஜைகள் செய்து வருபவர்களுக்கு எவ்விதமான இன்னல்களும் நேர்வதில்லை. அப்படி செய்ய முடியாத பட்சத்தில் அவர்களுக்கு நிறையவே கஷ்டங்கள் வரும் என்கிறது ஜோதிடம்.

- Advertisement -

உங்கள் ஜாதக கட்டத்தில் மூன்றாவது இடம் மற்றும் ஒன்பதாவது இடத்தில் முறையே ராகு, கேது அமையப் பெற்றிருந்தாலும் நீங்கள் பித்ரு தோஷம் உடையவராக கருதப்படுவீர்கள். அதே போல ஐந்து மற்றும் பதினோராம் இடங்களில் முறையே ராகு, கேது இருந்தால் அதுவும் பித்ரு தோஷ ஜாதகம் ஆகும். இதே போல் உங்கள் ராசி கட்டத்தில் சூரியன் எங்கு இருக்கிறார்? என்று பாருங்கள்! அவருடன் சேர்ந்து ராகுவோ அல்லது கேதுவோ இடம் பெற்றிருந்தால் அதுவும் பித்ரு தோஷம் உடைய ஜாதக அம்சம் தான். சூரியன் மட்டுமல்ல சந்திரனுடன் ராகு அல்லது கேது இணைந்திருந்தாலும் பித்ரு தோஷம் தான்.

நீங்கள் செய்த பாவம் மட்டுமல்ல உங்களுடைய தாய், தந்தையர் செய்த பாவங்களையும் கூட நீங்கள் அனுபவிக்க வேண்டியதாக சில சமயங்களில் அமைந்துவிடும். வம்சா வழியாக வரும் இந்த தோஷம் உங்களுடைய முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையாமல் இருந்திருந்தாலும், முற்பிறவியில் யாராவது வம்சத்தில் கருசிதைவு செய்திருந்தாலும், ஒன்றாக பிறந்த சகோதர, சகோதரிகளுக்கு துரோகம் செய்திருந்தாலும் உண்டாகக்கூடிய தோஷம் தான் பித்ரு தோஷம் ஆகும். இது வழி வழியாக தொடரக்கூடிய ஒன்று. எனவே தான் ஒருவர் பிறக்கும் பொழுதே ஜாதக கட்டத்தில் இந்த ஜாதகர் பித்ரு தோஷம் உடையவர் என்று முத்திரை குத்தப்பட்டு விடுகிறது.

இந்த பித்ரு தோஷத்தால் ஏற்படும் இன்னல்கள் என்றால் அதில் முதன்மையாக இருப்பது திருமண தடை ஆகும். பித்ரு தோஷம் உடையவர்களுக்கு திருமணம் நடைபெற்றாலும், திருமண உறவில் திருப்திகரமாக இருக்க முடியாது. கணவன்-மனைவிக்குள் சண்டை ஏற்பட்டு விவாகரத்து வரை செல்லும். ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள், ரகசிய உறவுகள், கலப்புத் திருமணம் பெற்றோர்களுக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக திருமணம் செய்து கொண்டு ரகசியமாக வாழ்தல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால் உங்களுக்கு வெற்றி கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். பக்தி இருந்தாலும் இறையருள் தடைபடும். முன்னேற்றம் என்பதே இருக்காது. இதற்கு பரிகாரமாக நீங்கள் ராமேஸ்வரம் கடலுக்கு சென்று அக்னி தீர்த்தத்தில் நீராடி இறைவனை தரிசித்து வர வேண்டும் பின் தனுஷ்கோடியில் முன்னோர்களுக்கு பிண்டத்தை கரைத்து திதி கொடுக்க வேண்டும். இப்படி செய்து வந்தால் பித்ரு தோஷம் நிவர்த்தி அடைந்து எல்லா தடைகளும் விலகும் என்பது ஐதீகம்.

- Advertisement -