பணப் பிரச்சனை தீர கடம்ப மலர்

money attraction vasthu tips
- Advertisement -

வாஸ்து சாஸ்திரத்தின் படி சில பொருட்களையும் சில செடி வகைகளையும் வீட்டில் வளர்ப்பதனால் பணவரவு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் நாம் பல்வேறு செடி வகைகளை பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் வருடத்திற்கு 15 நாட்கள் மட்டுமே பூக்கக் கூடிய ஒரு பூவை பற்றியும் அந்த செடியை வீட்டில் கொண்டு வந்து வைப்பதனால் ஏற்படக் கூடிய நன்மைகள் பற்றியும் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

கடன் தீர்ந்து பணவரவை அதிகரித்து தரும் செடி

நம்முடைய பணப்பிரச்சனைகளை தீர்த்து பண வரவை அதிகரித்து தரக்கூடிய அந்த அதிசய அற்புதமான பூ கடம்ப மலர். எழில் மிகுந்த பழனியில் வருடத்திற்கு 15 நாட்கள் மட்டுமே பூக்கும் அதிசய மலர் தான் இது. இதன் மணம் பல்வேறு மருத்துவ குணங்களை உடையதாகவும், இந்த மலருக்கு ஆன்மீகத் தன்மை அதிகம் உள்ளதாகவும் சொல்கிறார்கள்.

- Advertisement -

இந்த பூக்கள் பூப்பதாலயே மதுரையையும் பழனியையும் கடம்பவனம் என்றும் இந்த மலரின் காற்று வீசுவதால் அந்த காற்றினையே சஞ்சீவி காற்று என்றும் கூறுகிறார்கள். இந்த காற்றை சுவாசிக்கவே சித்திரை மாதத்தில் பக்தர்கள் பழனிக்கு வந்து முருகரை வழிபட்டு அவருக்கு இந்த பூக்களை மாலையாக சாற்றி வழிபடுகிறார்கள்.

இந்த மலர் குறித்து கடம்பர் நெடுவேல் என்ற பெரும் பானாற்றுப்படையிலும், கடம்பின் சீர்மிகு நெடுவேல் என்று மதுரை காஞ்சியிலும் இடம் பெற்றுள்ளதே இதன் சிறப்பு. அது மட்டும் இன்றி முருகனுக்கு அணிவிக்கப்படுவதால் இது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது குறித்தான செய்தி சங்க இலக்கியத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

- Advertisement -

இந்தப் பூக்களின் வாசத்தை நுகர்வதால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதோடு நோய்கள் தீருவதாகவும் நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த மலர் முருகனுக்கு மட்டுமின்றி பெருமாளுக்கும் பூஜைக்கு உகந்ததாக சொல்லப்படுகிறது.

இத்தகைய சிறப்பம்சங்கள் மிக்க இந்த செடிகள் இப்பொழுது அனேக இடங்களில் கிடைக்கிறது. இதை நாம் வீட்டில் வாங்கி வைத்து வளர்க்கும் பொழுது நம்முடைய வீட்டில் பொருளாதார நிலை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. அது மட்டும் இன்றி இதன் மீது பட்டு வீசும் காற்றே நம்முடைய வீட்டிலும் நமக்கும் நேர்மறை ஆற்றலை ஏற்படுத்தி நோய் நொடி இல்லாத வாழ்க்கையும் தரும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: அஷ்டலட்சுமிகளும் நம் இல்லம் தேடி வர செல்ல வேண்டிய ஆலயம்

இத்தகைய ஆற்றலும் சக்தியும் மிகுந்த இந்த கடம்ப மலர் செடியை நீங்களும் வாங்கி வந்து வைத்து உங்களின் பணத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம். இந்த தகவலில் நம்பிக்கை இருப்பவர்கள் நம்பிக்கையுடன் இதை பின்பற்றி பலன் அடையலாம்.

- Advertisement -