2 வாரம் ஆனாலும் கொத்தமல்லி புதியதாக பச்சை பசேலென இருக்க இப்படியும் ஒரு வழி இருக்கிறதா? இது தெரியாம போச்சே!

kothamalli
- Advertisement -

சமையல் செய்ய காய்கறி வாங்கப் போகும் பொழுது இனாமாக கொடுக்கும் கொசுறு தான் கொத்தமல்லி. ஆனால் இப்போது அதைக் கூட அதிக விலை கொடுத்து தான் வாங்க வேண்டிய நிலை இருக்கிறது! அது என்னவோ வேறு விஷயம். கொசுறாக கொடுக்கும் இந்த கொத்தமல்லியை ஒரு கட்டு வாங்கி வைத்தால் இரண்டு நாளில் அதை பயன்படுத்த முடியாத படி அழுகி நாசமாக போய்விடும். ரெண்டு வாரம் ஆனாலும் அப்படியே பச்சை பசேலென செழிப்பாக கொத்தமல்லி இருக்க நாம் என்ன செய்யலாம்? என்கிற ரகசியத்தை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

kothamalli 2-compressed

கொத்தமல்லி கொசுறாக கிடைத்தாலும் கொத்தமல்லி தழை தூவி இறக்கும் பொழுது தான் அந்த சமையலே மணமணக்கும். சமையலை அலங்கரித்து நிறைவு செய்யும் இந்த கொத்தமல்லியில் இருக்கும் சத்துக்கள் என்னவோ ஏராளம். கொத்தமல்லியில் நியாசின், தயமின், வைட்டமின் சி, பாஸ்பரஸ், கால்சியம், சோடியம், பொட்டாசியம், ஆக்சாலிக் ஆசிட், ரிபோஃப்ளோவின் மற்றும் கனிம சத்துக்களும், நிறைய வைட்டமின்களும் நிறைந்துள்ளன.

- Advertisement -

மேலும் இதில் புரதச்சத்து, கொழுப்பு சத்து, நார்ச் சத்து, நீர்ச் சத்து, மாவுச்சத்து என்று அத்தனை சத்துகளும் அடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. கொத்தமல்லி சாற்றினை முகத்தில் தடவி உலர விட்டால் முகச்சுருக்கம் நீங்கி, முகக் கருமை நாளடைவில் மறையத் துவங்கும். மிக எளிமையாக கிடைக்கும் கொத்தமல்லியில் இருக்கும் பயன்கள் என்னவோ நமக்கு வியப்பை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளன.

kothamalli 4-compressed

கண் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும், கருவளையம் மறையும். முதிர்ச்சியான தோற்றம் நீங்கி, இளமை திரும்பவும் கொத்தமல்லியை அரைத்து கண்களுக்கு பற்று போடுவது மற்றும் முகத்திற்கு பேக் போடுவது போன்றவற்றை செய்யலாம். அழகு குறிப்பு மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் வலு சேர்க்கும் இந்த கொத்தமல்லி நம்முடைய ஈரலை பலப்படுத்துகிறது. அஜீரணம் நீங்கி வயிற்று தொடர்பான பிரச்சனைகளையும் தீர்க்கிறது.

- Advertisement -

இதில் இருக்கும் பொட்டாசியம் சத்து ரத்தக் குழாய்களை சுத்தம் செய்யும் தன்மை கொண்டுள்ளது. உயர் ரத்த அழுத்தத்தையும் குறைக்கும். கொத்தமல்லி விதைகளை கொண்டு தேநீர் தயார் செய்து குடித்து வந்தால் நீர் கடுப்பு, நெஞ்செரிச்சல், வாய்வு தொல்லை, கை, கால் வீக்கம் போன்ற பிரச்சனைகள் தீரும். தினமும் கொத்தமல்லி ஜூஸ் குடித்து வந்தால் நாளமில்லா சுரப்பிகள் நன்கு இயங்கும், மாதவிலக்கு சீராகும், உடல் வலி குறையும்.

இத்தகைய மகத்துவம் வாய்ந்த கொத்தமல்லி அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியத்துக்கு குறைவிருக்காது. அதை எப்படி நீண்ட நாள் வைத்து பராமரிப்பது? என்று இனி பார்ப்போம். கொத்தமல்லியை ஃப்ரெஷ்ஷாக வாங்கி வந்தவுடன் அதனை ஒரு டீஸ்பூன் அளவிற்கு மஞ்சள் கலந்த தண்ணீரில் மூழ்கும்படி அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு நன்கு தண்ணீரில் கழுவி ஈரப்பதம் போக சுத்தமாக உலர வைக்க வேண்டும். நன்கு உணர்ந்து உள்ளதா? என்பதை டிஷ்யூ பேப்பர் அல்லது காட்டன் துணி கொண்டு சுற்றி உறுதி செய்து கொள்ளுங்கள்.

பின்னர் நன்கு கொஞ்சம் கூட ஈரம் இல்லாமல் உலர்ந்த கொத்தமல்லியை பேப்பர் டவலில் வைத்து நன்கு சுற்றி அதனை காற்று புகாத டப்பாக்களில் அடைத்து வைக்க வேண்டும். கொத்தமல்லியின் வேர்ப்பகுதியை முன்பே நீக்கி விடுங்கள். தண்டு மற்றும் இலைகளை மட்டும் இவ்வாறு பத்திரப்படுத்தி வைத்தால் இரண்டு வாரத்திற்கு மேலும் கொத்தமல்லி ஆனது நிறம் மாறாமல், அழுகிப் போகாமல் பிரஷ்ஷாக அப்படியே இருக்கும்.

- Advertisement -