சூரிய பகவானை வணங்கும் முறை

suriyan pray
- Advertisement -

சூரிய பகவானை ஆத்மகாரகன் பித்ரு காரகன் என்றெல்லாம் அழைப்பார்கள். ஒருவருடைய ஜாதகத்தில் ஆத்ம பலத்தை கொண்டு சூரியனின் இருப்பை அறியலாம். சூரிய பகவானின் அனுகிரகம் இருந்தால் அரசியல் வாழ்க்கை, அரசாங்க உத்தியோகம், தலைமை பதவி போன்ற வேலை தொடர்பான அனைத்து இன்னல்களும் சரியாகும். நினைத்த வேலை கைகூடும்.

அதுமட்டுமின்றி இவர் மனோகாரகன் என்பதால் நம்முடைய மனதை ஒரு நிலைப் படுத்தக் கூடியவர். ஆகையால் தான் காலையில் எழுந்தவுடன் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இது நம்முடைய மனதையும் செயலையும் செம்மைப்படுத்தக் கூடியதாக அமையும். இந்த சூரிய பகவானை எப்படி வணங்கினால் நம்முடைய வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை பெறலாம் என்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

சூரிய பகவானை வணங்கும் முறை

இந்த சூரிய பகவானின் முழுமுதற் கடவுளாக வணங்கும் பழக்கம் நம் முன் காலம் தொட்டு பின்பற்றி வருகிறோம். சூரிய கதிர்களானது நம் மீது பட்டால் லட்சுமி கடாட்ஷமும் சேர்ந்து கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. காலையில் செய்யப்படும் இந்த சூரிய நமஸ்காரம் ஆன்மீக பலனை பெறுவதோடு மட்டுமின்றி, ஆரோக்கிய பலனையும் பெறலாம்.

காலையில் சூரியன் உதிக்கும் திசையை பார்த்து நம்முடைய இரண்டு கைகளின் உள்ளங்கையை காட்ட வேண்டும். நம்முடைய உள்ளங்கையில் சூரியனுடைய ஒளிக்கதிர்கள் பட வேண்டும். அதன் பிறகு அந்த கையை நம்முடைய உச்சந் தலையில் வைக்க வேண்டும். இதே போல் மூன்று முறை செய்ய வேண்டும். இது காலையில் செய்ய வேண்டிய வழிபாடு முறை. இந்த வழிபாட்டை நாம் காலையில் வெறும் வயிற்றில் தான் செய்ய வேண்டும்.

- Advertisement -

இது சூரிய வழிபாடு மாலையிலும் செய்யலாம் மாலையில் செய்யப்படும் வழிபாடு நமக்கு லட்சுமி கடாட்சத்தை பெற்று தரும் என்று சொல்லப்படுகிறது. மாலையிலும் இதே போல இரு கைகளையும் சூரிய பகவானுக்கு பார்த்தவாறு நீட்ட வேண்டும். இப்போது இந்த கைகளானது நம்முடைய வயிற்றின் தொப்புள் அருகே இருக்க வேண்டும். சூரியக்கதிர்கள் பட்ட நம்முடைய கைகளை தொப்புளில் வைக்க வேண்டும் இதே போல் மூன்று முறை செய்ய வேண்டும்.

ஓம் பாஸ்கராய வித்மஹே திவாகராய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

என்ற இந்த சூரியனாரின் மந்திரத்தை நீங்கள் வழிபாடு செய்யும் நேரத்தில் சொல்வது கூடுதல் பலனை பெற்றுத் தரும். காலையில் இந்த மந்திர வழிபாட்டை செய்யும் போது சூரியன் உதிக்கும் திசையான கிழக்கு முகமும் மாலையில் சூரியன் மறையும் திசையான மேற்கு திசையும் பார்த்து செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: மகாலட்சுமி தாயார் அருள் கிடைக்க

இந்த சூரிய வழிபாட்டையும் மந்திரத்தையும் தினம்தோறும் சொல்லி வரும் ஒருவரின் வாழ்க்கையில் எதிர்பார்க்க முடியாத அதிர்ஷ்டங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக வரும். நல்ல வேலை குடும்பம் அனைத்தும் அமையும் யோகம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த சூரிய வழிபாட்டை செய்து பலன் பெறுங்கள்.

- Advertisement -