மகாலட்சுமி தாயார் அருள் கிடைக்க

mahalakshmi thanner cash
- Advertisement -

ஒரு வீட்டில் பண வரவானது தங்கு தடை இல்லாமல் வந்து கொண்டே இருக்க வேண்டும். வீட்டு சுபிட்சமாக இருக்க வேண்டும் எனில் மகாலட்சுமி தாயார் சுக்கிர பகவான் இருவரின் அருளும் பரிபூரணமாக வேண்டும். இந்த இருவரின் அருளும் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் இவர்களுக்கான பூஜைகள் புனஸ்காரங்களை நாம் முறைப்படி செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி வீட்டில் எப்பொழுதும் நேர்மறை எண்ணங்கள் தோன்றும்படியான விஷயங்களை செய்ய வேண்டும்.

அதற்கு தீபம் ஏற்றுவது, சாம்பிராணி தூபம் போடுவது வீட்டை சுத்தமாக வைத்திருப்பது, நல்ல சிந்தனைகளுடன் இருப்பது, நல்லவற்றை பேசுவது இவையெல்லாம் கட்டாயமாக செய்ய வேண்டும். இவற்றையெல்லாம் செய்வதோடு இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்யும் பொழுது இருவரின் அருளும் பரிபூரணமாக நமக்கு கிடைக்கும் அது என்னவென்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

வீட்டில் பண மழை பொழிய செய்ய வேண்டியது

பணம் தொடர்பான எந்த ஒரு வழிபாட்டு அல்லது பரிகாரத்தை செய்வதாக இருந்தால் வெள்ளிக்கிழமையில் செய்யும் போது அதன் பலன் அதிகமாக கிடைக்கும். ஏனெனில் வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாருக்கு உகந்த நாள். அன்றைய தினத்தில் சுக்கிர ஓரையும் உண்டு இவை நல்ல பலனை தரக்கூடியவை.

இந்த வழிபாட்டையும் நீங்கள் வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரை நேரத்திலே செய்தால் இரட்டிப்பு பலனை உடனே பெற்று தரும். இதற்கு வெள்ளிக்கிழமை காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து முதலில் பூஜை அறையில் தீபம் ஏற்றி மகாலட்சுமி தாயாரை முறைப்படி வணங்கி விடுங்கள். அந்த நேரத்தில் வீட்டில் கட்டாயமாக சாம்பிராணி தூபம் வாசனை மிக்க ஊதுபத்தி போன்றவற்றை ஏற்றி வைத்து விடுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு ஒரு சொம்பு சுத்தமான தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு பன்னீரையும் ஊற்றி விடுங்கள். அதன் பிறகு அந்த தண்ணீரில் எட்டு நாணயங்களை போடுங்கள். அது ஒரு ரூபாய் ஐந்து ரூபாய் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதன் பிறகு இரண்டு ஏலக்காய் சிறிதளவு பச்சை கற்பூரம் இரண்டு மல்லிகை பூ அனைத்தையும் போட வேண்டும்.

அடுத்து பூஜை அறையில் தாயாரின் முன்பு அமர்ந்து இந்த சொம்பை உங்களுடைய இடது கையில் வைத்துக் கொண்டு வலது கையால் சோம்பு மூடி கண்களை மூடி ஓம் மகாலட்சுமியே நமஹ, ஓம் அஷ்டலட்சுமியே நமஹ என்ற இந்த இரண்டு நாமத்தை 16 முறை சொல்ல வேண்டும். அதாவது ஒவ்வொரு நாமத்தையும் 16 முறை சொல்ல வேண்டும் இரண்டும் சேர்ந்து 32 வரை சொல்ல வேண்டும்.

- Advertisement -

இப்படி வேண்டிய பிறகு பூஜையறையில் கற்பூர தீபாராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.அதன் பிறகு இந்த தண்ணீரை உங்கள் வீடு முழுவதும் தெளித்து விடுங்கள். இந்த வழிபாட்டை வெள்ளிக்கிழமை தோறும் சித்திர குறையும் தொடர்ந்து செய்து வரும் போது உங்களுடைய செல்வ நிலை பல மடங்கு உயரம் என்பதில் சந்தேகமே இல்லை.

இதையும் படிக்கலாமே: வறுமை நீங்க தீபம்

அது மட்டும் இன்றி தினமும் இந்த முறையில் பூஜை செய்ய முடிந்தால் அது இன்னும் விசேஷமானதாக அமையும். எந்த ஒரு வழிபாட்டையும் பரிகாரத்தையும் முழு நம்பிக்கையுடனும் செய்யும்போது அதற்கான பல நிச்சயமாக கிடைக்கும் உங்களுடைய உழைப்புடன் சேர்த்து இந்த வழி பாடு செய்து பாருங்கள் நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றம் நிகழும்.

- Advertisement -