கெட்ட கண் திருஷ்டி நீங்க பரிகாரம்

maa ilai kan thirusti
- Advertisement -

இன்று பலரும் அவதிப்படுவது இந்த கண் திருஷ்டியாலும் பிறரின் தீய எண்ணங்களால் ஏற்படக் கூடிய செயல்களாலும் தான். ஒருவர் நன்றாக வாழ்ந்தால் அவரை பார்த்து மனதார வாழ்த்த கூடிய மனங்கள் என்று குறுகி விட்டது. அவர் மட்டும் நன்றாக இருக்கிறாரே என்று கெட்ட பார்வையும், அது அவர் மட்டும் எப்படி நன்றாக இருக்கலாம் என்கிற கெட்ட எண்ணங்களும் தான் என்று பெருமளவில் காணப்படுகிறது.

இதனால் தேவையில்லாத தீய செயல்கள் செய்து அவர்களின் முன்னேற்றத்தையும் வாழ்க்கையும் அழித்து விடுகிறார்கள். இவை எல்லாம் நிச்சயமாக பாவம் செயல் தான். ஆனால் நாம் இதை யார் செய்கிறார்கள் எப்படி செய்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருப்பதை விட, இவற்றிலிருந்து நாம் எப்படி தப்பிப்பது என்று தான் யோசிக்க வேண்டும். அதற்கான ஒரு எளிய பரிகாரம் முறையைத்தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

கெட்ட சக்திகள் நீங்க பரிகாரம்

முதலில் கெட்ட சக்திகளின் தாக்கம் நமக்கு இருக்கிறது என்பதை எப்படிஅறிந்து கொள்வது என்பதை தெரிந்து கொள்வோம். வீட்டில் எந்நேரமும் சண்டை சச்சரவுமாக இருக்கும். குடும்பத்தில் யாரும் மனம் விட்டு பேசிக் கொள்ள கூட மாட்டார்கள். நல்ல விஷயங்கள் தள்ளிக் போகும். பண பற்றாக்குறை ஏற்படும் இத்துடன் நன்றாக நடந்து கொண்டிருந்த வியாபாரத்தில் சரிவு ஏற்படும் ஆரோக்கிய சீர்கேடு வரும்.

இப்படி தொடர்ந்து பிரச்சினைகளும் பாதிப்புகளும் இருந்தாலே நமக்கு இந்த பிரச்சனை தொடர்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். அதற்கான ஒரு எளிய பரிகார முறையை தான் இப்போது பார்க்க போகிறோம். இந்த முறையை பௌர்ணமி அமாவாசை தினங்களில் செய்யலாம் அல்லது அஷ்டமி திதி வெள்ளிக்கிழமை இந்த நான்கு நாட்களில் செய்ய வேண்டும் மாதத்தில் ஒரு நாள் செய்தால் போதும்.

- Advertisement -

இதற்கு ஒரே ஒரு மாவிளை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த இலையில் முழுவதுமாக விளக்கெண்ணெய் தேய்த்து விடுங்கள். இத்துடன் ஒரு கற்பூரம் தீப்பெட்டி இரண்டையும் எடுத்துக் கொண்டு மாவிலையுடன் வீட்டின் நிலை வாசலுக்கு வெளியே சென்று விடுங்கள்.

அது கோலம் போடும் இடமாகவும் இருக்கலாம் அல்லது கேட்டின் அருகேவும் இருக்கலாம். அது உங்களின் வீட்டின் இட வசதியை பொறுத்து. இப்போது இந்த கற்பூரத்தை விளக்கெண்ணெய் தேய்த்த மா இலை மீது வைத்து கொளுத்துங்கள். கொளுத்தி அதை அப்படியே வாசலில் வைத்து விடுங்கள். இலை முழுவதுமாக எரிந்து விட வேண்டும்.

- Advertisement -

அதன் பிறகு அதை பெருக்கி கால் படாத இடத்தில் போட்டு விட்டு அந்த இடத்தை சுத்தம் செய்து விடுங்கள். நம்மை சுற்றியும் நம் வீட்டில் சுற்றியும் இருக்கும் எதிர்மறை ஆற்றலை அளிக்கக் கூடியது கண் திருஷ்டி தீய சக்திகளின் தாக்கம் எதுவும் நம்மை அண்டாது காக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: வேண்டுதல் நிறைவேற பெருமாள் வழிபாடு

மாயிலையானது மங்களங்களை மட்டுமே நமக்கு தரக்கூடியது. அதை கொண்டு செய்யக் கூடிய இந்த பரிகாரம் நம்மை மங்களகரமாக நல்ல முறையில் வாழ வைக்கும் என்று நம்ப படுகிறது. இந்த பரிகார முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இதை செய்து நல்ல பலனை பெறலாம்.

- Advertisement -