கணவன் மனைவி பிரச்சனை தீர்ந்து அவர்களின் உறவு பலப்பட இந்த செவ்வரளி தீபத்தை ஏற்றி வழிபட நல்ல பலன் கிடைத்துவிடும்

husband
- Advertisement -

திருமணமான தம்பதிகள் அனைவரையும் பார்த்திருப்போம். ஒரு சில தம்பதிகள் திருமணமாகி ஒரு மாதம் முதல் மூன்று மாதங்கள் வரை மிகவும் சந்தோசமாக இருப்பார்கள். ஒரு சிலர் ஒரு வருடம் வரை மிகவும் சந்தோஷமாக இருப்பார்கள். மற்றும் ஒரு சிலர் ஏழு, எட்டு வருடம் நன்றாக இருந்த பின்னரும் அவர்களுக்குள் சண்டை வர ஆரம்பிக்கும். ஒருவர் மற்றொருவரை பற்றி குறை கூற ஆரம்பித்து விடுவார்கள். இருவரும் ஒருவர் சொல் மற்றொருவர் கேட்காமல் எதிர்மாறாக நடந்து கொள்வார்கள். இந்த பிரச்சனை பெரியதாக வளர்ந்து கொண்டே செல்லும். இப்படி கணவன் மனைவி இடையே பிரச்சினைகள் வருவதென்பது எந்த காலத்தில் வேண்டுமானாலும் தோன்றும். அவற்றை சரிசெய்து அவர்களின் வாழ்கையை சுமூகமாக மாற்றி அமைக்க இந்த தீபத்தை ஏற்றி வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும். வாருங்கள் இந்த தீபம் ஏற்றும் முறையைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

husbund-and-wife3

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்று நமது முன்னோர்கள் சொல்வதுண்டு. அப்படி இன்று வரையிலும் ஒரு திருமணம் செய்வதாக இருந்தால் திருமணம் செய்யப்போகும் ஆண் மற்றும் பெண் இருவரின் சம்மதமும், இருவர் வீட்டாரின் சம்மதம் தெரிவித்த பின்னர் தான் அவர்களுக்கு திருமணம் பேசி நிச்சயிக்கப்படுகிறது. அதன் பின்னர் பல சாஸ்திர சம்பிரதாயங்கள் பின்பற்றப்பட்டு ஜாதகம் பார்த்து நல்ல நாள் குறிக்கப்பட்டு திருமண தேதி நிச்சயம் செய்யப்படுகிறது.

- Advertisement -

இப்படி திருமணம் செய்யப்போகும் இருவர் மட்டும் அல்லாமல் இரு குடும்பத்தாரும் ஒன்று சேர்ந்து பல விஷயங்களை யோசித்து, திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து, அந்தத் திருமணம் குறிப்பிட்ட நாளில் உறவினர் அனைவரும் மகிழும் வகையில் சிறப்பாக நடந்து முடிகிறது. இப்படி தொடங்கப்படும் ஒருவரின் வாழ்க்கை சிறப்பாக அமைந்தது என்றால் அந்தத் திருமணத்தில் பங்கேற்ற அனைவருமே ஆனந்தம் கொள்வார்கள்.

marraige

ஆனால் ஒரு சில தம்பதிகள் சில காலங்களிலேயே சண்டையிட்டு பிரிந்து விடுகிறார்கள். ஒரு சிலர் பத்து, பதினைந்து வருடங்களுக்கு பின்னரும் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்கின்றனர். இப்படி கணவன் மனைவி பிரச்சனை என்பது தீராத பிரச்சனை ஒன்றும் கிடையாது. அவர்கள் சற்று விட்டுக் கொடுத்து ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்பட்டார்கள் என்றால் இந்த பிரச்சனை இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம். ஆனால் அப்படியும் இல்லாமல் பிரச்சனை வந்து கொண்டே இருந்தால் மன அமைதிக்காகவும், பிரச்சனைகள் தீரவும் இந்த தீபத்தை ஏற்றி வழிபடலாம்.

- Advertisement -

கணவன் மனைவியின் படுக்கை அறையில் இந்த பூஜையை செய்ய வேண்டும். ஒரு வெற்றிலையை எடுத்துக்கொண்டு சிறிதளவு மஞ்சளை தண்ணீரில் குழைத்து உருண்டையாக பிடித்து வைத்துக்கொண்டு, ஒரு அகல் விளக்கிற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து அதன் மீது இந்த விளக்கை வைத்து விடவேண்டும். பின்னர் அகல் விளக்கில் தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து திரி போட்டு தீபம் ஏற்றி, அந்த தீபத்தை தென்மேற்கு திசையை நோக்கி வைத்துவிட வேண்டும்.

vetrilai-deepam

பிறகு கண்களை மூடி எங்கள் இருவருக்குள் இருக்கும் பிரச்சனை விரைவில் சரியாகி சமாதானம் ஆக வேண்டும் என்று மனதார உங்கள் இஷ்ட தெய்வத்தை நினைத்து வேண்டிக் கொள்ள வேண்டும். இந்த தீபம் குறைந்தது 15 நிமிடமாவது தொடர்ந்து எரிய வேண்டும். இதனை தொடர்ந்து 16 நாட்கள் அல்லது நாற்பத்தி எட்டு நாட்கள் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

- Advertisement -