எப்போதும் அடிதடி சண்டை சச்சரவு என வெறுப்பாய் வாழ்ந்து கொண்டிருக்கும் கணவன் மனைவி கூட அன்னோன்யமாக மாற இந்த ஐந்து பவளமல்லி பூ இருந்தால் போதும்.

husband wife pavalamalli
- Advertisement -

கணவன் மனைவி உறவு என்பது மிகவும் ஒரு அற்புதமான ஒன்று. வேறு எந்த உறவுகளும் இல்லாத புரிதலும் அன்பும் இந்த உறவுக்கு கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். அப்படியான இந்த உறவு பலருக்கும் சரியான முறையில் அமைவது கிடையாது. இதற்கு அவர்களின் கருத்து வேறுபாடு ஒரு காரணமாக இருந்தாலும், நேரம் சரியில்லாமல் போவது, பிறரின் கண் திருஷ்டி போன்ற காரணங்களாலும் இது போன்ற பிரச்சனைகள் எழும். இந்த பரிகாரத்தை செய்யும் போது அனைத்துமே சரியாகும் என்று சொல்லப்படுகிறது. ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் கணவன் மனைவி ஒற்றுமை குறித்து இந்த பரிகாரத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ பரிகாரம்
இந்த பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு பவளமல்லி மலர் தேவை. இந்த மலரை நாம் காசு கொடுத்து வாங்க கூடாது. இந்த மலர் பூக்கும் மரம் எங்கு இருக்கிறதோ அதை தேடி சென்று மலரை மரத்தில் இருந்து பறித்து எடுக்க வேண்டும். இந்த மலர் மிகவும் சிறியதாக தொட்ட உடனே உதிர்ந்து விடக் கூடியதாக இருக்கும். இதனால் மரத்தில் இருந்து கீழே பூக்கள் உதிர்ந்து இருக்கும். ஆனால் பரிகாரத்திற்கு அப்படியான மலரை எடுக்கக் கூடாது. மரத்திலிருந்து பறித்து தான் கொண்டு வர வேண்டும். அதே போல் இந்த பரிகாரத்திற்கு வெள்ளியிலான தாயத்து இரண்டு வாங்க வேண்டும்.

- Advertisement -

நீங்கள் கொண்டு வந்த இந்த மலரை கணவன் மனைவி இருவரும் ஒன்றாக சேர்ந்து சிவாலயத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அங்கு சிவன் பார்வதியை மனதார வேண்டிக் கொண்டு இந்த மலரை வைத்து வணங்கிய பிறகு அந்த மலரை வீட்டிற்கு கொண்டு வந்து பூஜை அறையில் வைத்து விடுங்கள். அதன் பிறகு இந்த மலரை நீங்கள் வாங்கி வைத்திருக்கும் தாயத்தின் உள்ளே போட வேண்டும். இதில் ஒரு தாயத்தில் குறைந்தது ஐந்து மலராது கட்டாயமாக இருக்க வேண்டும். அதற்கு மேலும் போடலாம். அதே போல் இரண்டு தாயத்திலும் இந்த மலர்களை போட்டு ஒரு கயிறு போட்டு கட்டிக் கொள்ளுங்கள்.

இந்த தாயத்தை கணவன் மனைவி இருவருமே கட்டிக் கொள்ள வேண்டும். இது கழுத்து, கை, இடுப்பு என உங்களுக்கு எப்படி கட்ட முடியுமோ அப்படி கட்டிக் கொள்ளலாம். ஆனால் இருவரும் கட்ட வேண்டியது அவசியம். இந்த தாயத்தை கட்டிய 5 வாரத்திற்குள்ளாகவே உங்களின் உறவுக்குள் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் சரியாகி அன்னோன்யம் கூட ஆரம்பிக்கும். இதை நீங்கள் கண் கூடாக உணர முடியும்.

- Advertisement -

கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ வேண்டுமென்றால் இது போன்ற பரிகாரங்களை தான் செய்ய வேண்டுமா? ஒருவர் ஒருவர் மனம் விட்டு சிறிது நேரம் அமர்ந்து பேசினாலே பிரச்சனைகள் சரியாகி விடும் தானே என தோன்றலாம். இது முற்றிலும் உண்மை தான் ஆனால் அவர்கள் இருவரும் அப்படி அமர்ந்து பேசுவதற்கான மனநிலை முதலில் அமைய வேண்டும். அதற்கான சூழ்நிலை மாற வேண்டும். அப்போது தான் இது சாத்தியமாகும்.

இதையும் படிக்கலாமே: சாபங்களிலேயே உங்களை முன்னேறவே விடாமல் கீழே தள்ளும் இந்த ஒரு சாபத்தை மட்டும் அடையவே கூடாதாம் தெரியுமா? அது என்ன சாபம்? ஏன்?

இந்த பரிகாரம் அதற்கான சூழ்நிலையை உருவாக்கி இருவரின் மனநிலையும் மாற்றி இருவருக்குள் இருக்கும் கசப்பை நீக்கி அன்னோனியத்தை உருவாக்கக் கூடிய அற்புதமான பரிகாரம். இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்து சிவபெருமான் பார்வதி தேவியின் ஆசிர்வாதத்தை பெற்று அவர்களை போன்றதொரு தம்பதியாராய் நீங்களும் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொண்டு இல்லறத்தில் நிம்மதியாக வாழுங்கள்.

- Advertisement -