சாபங்களிலேயே உங்களை முன்னேறவே விடாமல் கீழே தள்ளும் இந்த ஒரு சாபத்தை மட்டும் அடையவே கூடாதாம் தெரியுமா? அது என்ன சாபம்? ஏன்?

pen-sabam
- Advertisement -

சாபங்கள் பல வகையாக இருப்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது, அதிலும் குறிப்பாக 13 வகையான சாபங்கள் ஒரு மனிதனை பாடாய்படுத்தி எடுக்கும் என்றும் கூறுகிறது. அந்த வகையில் இந்த ஒரு சாபத்தை மட்டும் நாம் வாங்கி கட்டிக் கொள்ளவே கூடாது. இதனால் அடுத்தடுத்த சந்ததியினரையும் இந்த பாவமானது தொடருமாம். இந்த சாபங்கள் நம்மளை வாழ்க்கையில் முன்னேறவே செய்ய விடாதாம்! அப்படியான சாபம் என்ன சாபம்? என்பதைத் தான் இந்த ஜோதிடம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

13 வகையான சாபங்களில் மிகவும் முக்கியமான இந்த சாபம், ‘பெண் சாபம்’ ஆகும். ஒரு பெண்ணினுடைய சாபம் ஒரு மனிதன் பெற்று விட்டால், அதை அவனுடைய சந்ததியினரையும் தொடர்ந்து பாதிக்கும் என்று கூறப்படுகிறது. பெண்கள் மூலமாகவே இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. சிவன் இல்லாமல் சக்தி இல்லை, சக்தி இல்லாமல் சிவன் இல்லை என்பது போலவே, பெண் இல்லாமல் ஆண் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

- Advertisement -

இத்தகைய பெண்ணினுடைய சாபங்கள் மிகவும் பொல்லாத பாதிப்புகளை ஏற்படுத்துமாம். ஒரு வம்சத்தையே நாசம் செய்யக்கூடிய அளவிற்கு இதன் தாக்கம் இருக்கும். கர்ம வினை பயன்களில் மிகவும் கொடூரமான சாபமாக பெண் சாபம் இருக்கிறது. பெண்களுக்கு செய்யும் துரோகம், கொடுமை, பெண்களை ஏமாற்றுவது, இழிவு படுத்துவது போன்ற விஷயங்களால் பாதிக்கப்பட்ட பெண் உண்மையிலேயே வயிறு எரிந்து சாபம் கொடுத்தால் அந்த சாபம் பலிக்கும் என்று நம்பப்படுகிறது.

ஒரு மனிதனுடைய ஜாதகத்தில் ஆறு, எட்டு, பன்னிரண்டு ஆகிய இடங்களில் சந்திரன் நீசம் பெற்று இருந்தாலும் அல்லது மறைவுற்று இருந்தாலும் பெண் சாபம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். இந்த பெண்களுடைய சாபம் இப்பிறவியில் பெரும் அவமானங்களை பெற்று தரும். வாழ்க்கையில் முன்னேறவே விடாது, வாய்ப்புகளை தட்டிப் பறிக்கும், பெண்களால் தொல்லைகள் அதிகரித்து காணப்படும், குலம் விருத்தி அடைவதில் தடைகள் ஏற்படலாம். இப்படி பல பிரச்சனைகளை உண்டாக்கக் கூடிய பெண் சாபம் உங்களை மட்டும் அல்லாது உங்களுடைய வாரிசுகளையும் பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதிலிருந்து விடுபடுவதற்கு என்ன செய்யலாம்?

- Advertisement -

அறிந்தும் அறியாமலும் ஸ்திரீ சாபம் பெற்று இருந்தால், நீங்கள் பட்டுக்கோட்டை அருகில் இருக்கும் அத்திக்கோட்டை என்னும் ஊரில் உள்ள சப்த கன்னி கோவிலுக்கு செல்ல வேண்டும். அங்கு சென்று வழிபட்டு விட்டு வரலாம். இதனால் பெண் சாபம் நீங்குவதாக நம்பிக்கை நிலவுகிறது. மேலும் ஏழு வயதிற்கு குறைவாக இருக்கும் பெண் குழந்தைகளுக்கு வஸ்திர தானம் செய்து வந்தால் பெண்களுடைய சாபம் நீங்குவதாக ஐதீகம் உண்டு, எனவே உங்களால் முடிந்த பொழுது ஏழை சிறுமிகளுக்கு வஸ்திர தானம் செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே:
இந்த வார ராசிபலன் 19/06/2023 முதல் 25/06/2023 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

மேலும் அருகில் இருக்கும் கோவிலில் உள்ள சப்த கன்னிகளுக்கு சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும். சப்த கன்னிமார்களுக்கு பாவாடை வாங்கி கொடுத்து அதனை சாற்றி உங்களுடைய பெண் சாபம் தீர மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இப்படி செய்து வந்தாலும் ஸ்திரீ சாபங்கள் நீங்குவதாக ஜோதிடங்கள் குறிப்பிடுகிறது.

- Advertisement -