ஹைப்பர் பிக்மெண்டேஷனை பற்றிய கவலையே இனி வேண்டாம். இந்த பொடியை போட்டு முகத்தை கழுவி வந்தால், 7 நாட்களில் பிக்மெண்டேகஷனை பின்னுக்கு தள்ளி விடலாம்.

face8
- Advertisement -

நிறைய பேருக்கு இரண்டு கன்னத்திலும் இந்த கருந்திட்டுகள் பார்ப்பதற்கு அடர்த்தியாக இருக்கும்‌. இதை போக்குவது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. ஆனால் கொஞ்சம் முயற்சி செய்து சரியான இயற்கையான பொருட்களை தொடர்ந்து முகத்தில் போட்டு வந்தால் சீக்கிரத்தில் இந்த பிரச்சனையை சரி செய்துவிடமுடியும். எல்லா வகையான முக சருமத்திற்கு ஏற்றவாறு சூப்பரான ஒரு குறிப்பை தான் இன்று நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம். உங்களுக்கு முகத்தில் கரும்புள்ளிகள் கருந்திட்டுகள் இருந்தால் யோசிக்காமல் இந்த குறிப்பை முயற்சி செய்து பாருங்கள். மூன்றே நாட்களில் நல்ல வித்தியாசம் தெரியும்.

ஒரு சிறிய பவுல் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கடலைமாவு 2 டேபிள்ஸ்பூன், ஆரஞ்சு பழத்தோல் பொடி – 1/2 ஸ்பூன், பெரிய நெல்லிக்காய் பொடி – 1/2 ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் – 1 ஸ்பூன், இந்த எல்லா பொருட்களையும் போட்டு ஒரு ஸ்பூனில் நன்றாக கலந்தால் நமக்கு தேவையான பொடி தயாராகிவிட்டது. இந்தப் பொடியை காற்றுப்புகாத பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக்கொண்டால் இரண்டு வாரம் கெட்டுப் போகாது.

- Advertisement -

நாம் தயார் செய்து வைத்திருக்கும் இந்தப் பொடியில் இருந்து 1 ஸ்பூன் அளவு தனியாக ஒரு பௌலில் போட்டுக் கொள்ளுங்கள். இப்போது இதை ஃபேஸ் பேக்காக தயார் செய்ய வேண்டும். உங்களுக்கு ஆயில் ஸ்கின் ஆக இருந்தால் ரோஸ் வாட்டர் அல்லது தண்ணீர் ஊற்றி இந்த பொடியை பேக்காக கலந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு ரொம்பவும் ட்ரை ஸ்கின் ஆக இருந்தால் பால் அல்லது மோர் சேர்த்து இந்த கலவையை தயார் செய்து கொள்ளலாம். இதில் எதுவுமே உங்கள் முகத்திற்கு செட்டாகாது என்றால் அரிசி வடித்த கஞ்சி தண்ணீரை ஊற்றி கூட இந்த கலவையை நாம் கலந்து கொள்ளலாம்.

- Advertisement -

தயாரான பேக்கை முகத்தில் அப்ளை செய்து ஜென்டிலாக மசாஜ் செய்து 5 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். கழுத்து பகுதியிலும் இந்த பேக் போடலாம். அதன் பின்பு மீண்டும் 5 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுவி வாருங்கள். ஒருநாள் விட்டு ஒருநாள் இந்த பேக்கை பயன்படுத்தலாம்.

இப்படி செய்து வர நிச்சயமாக சருமத்தில் இருக்கும் கருந்திட்டுக்கள் குறைவதை பார்க்க முடியும். இப்போது கடைகளில் சுத்தமான நெல்லிக்காய்பொடி, ஆரஞ்சு தோல் பொடி கிடைக்கின்றது. தேவைப்பட்டால் நாட்டு மருந்து கடைகளில் இருந்து பொடி ஆகவே வாங்கிக்கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் பெரிய நெல்லிக்காயைத் துருவி வெயிலில் காய வைத்து மிக்ஸியில் பொடி செய்து சலித்து எடுத்துக் கொள்ளலாம். இதேபோலத்தான் ஆரஞ்சு பழத் தோலையும் நன்றாக வெயிலில் காய வைத்து அரைத்து சலித்து பொடியை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சில பேருக்கு கடலை மாவு சருமத்தில் ஒத்துவராது. கடலை மாவுக்கு பதில் பாசிப்பயறு மாவை பயன்படுத்தலாம். அரிசி மாவு மட்டும் பயன்படுத்தக் கூடாது. அரிசி மாவு கொர கொரப்பாக ஸ்க்ரப்பர் போல இருப்பதால் உங்களுடைய முகம் இன்னும் டேமேஜ் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உங்களுக்கு இந்த பேக் பிடித்திருந்த ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமாக சில நாட்களிலேயே நல்ல ரிசல்டை உணர்வீர்கள்.

- Advertisement -