வெறும் 4 பொருட்களில் 10 நிமிடத்தில் இன்ஸ்டன்ட் இட்லி பொடி தயாரிப்பது எப்படி?

podi
- Advertisement -

பல நேரங்களில் காலையில் இட்லிக்கு தொட்டுக்கொள்ள என்ன செய்வது என்று தவிப்பதுண்டு. அது போன்ற சமயங்களில் பலருக்கும் கை கொடுப்பது இட்லி பொடி தான். வெறும் 4 பொருட்களை கொண்டு அற்புதமான இட்லி பொடியை எப்படி தயார் செய்வது என்பது பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

podi

இட்லி பொடி அரைக்க தேவையான பொருட்கள்:
கடலை பருப்பு – 1 கை(1/2 ஆழாக்கு), உளுத்தம் பருப்பு – 2 கை(1 ஆழாக்கு), காய்ந்த மிளகாய் – 10, பெருங்காய தூள் – 1 டீ ஸ்பூன், கல் உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

செய்முறை:
அடுப்பில் கடாயை வைத்து அதில் கடலை பருப்பை சேர்த்து, பருப்பு நன்கு சிவக்கும் வரை வறுக்க வேண்டும். வறுத்த கடலைப்பருப்பை வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றிக்கொண்டு, கடாயில் உளுத்தம் பருப்பை சேர்த்து நன்கு சிவக்கும் வரை வறுக்க வேண்டும். உளுத்தம் பருப்பை சற்று நேரம் வறுத்த பிறகு அதில் பெருங்காய தூளை சேர்த்து வதக்க வேண்டும். உளத்தம்பருப்பு செந்நிறம் ஆன பிறகு அதை கடலை பருப்பு இருக்கும் பாத்திரத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

paruppu

இப்போது கடாயில் காய்ந்த மிளகாயை போட்டு அதை சற்று நேரம் வதக்கி, பிறகு பருப்புகளோடு சேர்த்துவிட வேண்டும். அடுத்ததாக தேவையான அளவு கல் உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும். பிறகு இவை அனைத்தையும் மிக்சி ஜாரில் சேர்த்து கொரகொரவென்று அரைக்க வேண்டும்.

podi

அவ்வளவு தான், அருமையான இட்லி போடி தயாராகிவிட்டது. சாப்பிடும்போது நல்லெண்ணெய் சேர்த்து இதை சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். சற்று வேறு விதமான சுவை தேவை பட்டால் இதில் சிறிதளவு எல் சேர்த்து கூட அரைக்கலாம். இனிப்பு விரும்பிகள் இதில் வெல்லம் சேர்த்தும் அரைக்கலாம்.

- Advertisement -