இளமை பொலிவைத் தரும் கிரீம்

young look
- Advertisement -

ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி அவர்களின் வயதை கேட்டால் கண்டிப்பான முறையில் இரண்டிலிருந்து ஐந்து வருடங்கள் குறைத்து தான் சொல்வார்கள். காரணம் அவர்களுக்கு வயதாகிவிட்டது என்பதை பிறர் அறியக்கூடாது என்பதற்காகத்தான். இப்படி வயதை குறைத்து விட்டு தோற்றத்தை இளமையாக வைத்துக் கொள்ளவில்லை என்றால் யாரும் அவர்கள் கூறும் வயதை நம்ப மாட்டார்கள் அல்லவா? எந்த அளவிற்கு நாம் வயதை குறைத்து கூறுகிறோமோ அதே அளவிற்கு தோற்றத்திலும் இளமையாக இருக்க வேண்டும் அல்லவா? அந்த இளமையை பெறுவதற்காக செய்யக்கூடிய ஒரு எளிய கிரீமை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

முதலில் இளமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் ஆவது அருந்த வேண்டும். மேலும் இயற்கையான சத்து மிகுந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் உடற்பயிற்சி மற்றும் தியானம் இவற்றில் ஈடுபட வேண்டும். மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் தினசரி செய்பவர்கள் என்றும் இளமையாகவே திகழ்வார்கள். இதோடு மட்டுமல்லாமல் நாம் வீட்டிலேயே தயார் செய்யும் கிரீமையும் முகத்திற்கு தடவுவதன் மூலம் என்றும் இளமையாக இருக்க முடியும்.

- Advertisement -

முதலில் அரைக்கப் அரிசியை எடுத்து அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். சாதம் ஆறிய பிறகு அதை மிக்ஸி ஜாரில் போட்டு கூலாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது இதிலிருந்து மூன்று ஸ்பூன் அளவிற்கு எடுத்து ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் முட்டையின் மஞ்சள் கரு ஒன்றை சேர்க்க வேண்டும். இவை இரண்டையும் நன்றாக அடித்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு இதில் ஒரு ஸ்பூன் தேனை கலந்து அதையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ஒரு ஸ்பூன் பால் பவுடர் சேர்த்து அதையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அதற்கு அடுத்தார் போல் பாதாம் எண்ணெய் ஒரு ஸ்பூன் மற்றும் கற்றாழை ஜெல் ஒரு ஸ்பூன் இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இளமையை தக்க வைத்துக் கொள்ள உதவும் க்ரீம் தயாராகிவிட்டது. இந்த கிரீமை வாரத்திற்கு மூன்று நாட்கள் என்ற வீதம் முகத்தில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடம் அப்படியே விட்டுவிட வேண்டும்.

- Advertisement -

20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவிக் கொள்ளலாம். முகத்தை ஈரம் இல்லாமல் துடைத்துவிட்டு மாஸ்டரை கிரீம் இருப்பவர்கள் அதை தடவிக் கொள்ளலாம் இல்லாதவர்கள் தேங்காய் எண்ணெயை தடவிக் கொள்ளலாம். இப்படி செய்வதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய இளமை என்றும் குறையாமல் இருக்கும். மேலும் இந்த அழகு குறிப்பானது வறண்ட மற்றும் சென்சிட்டிவ் சருமம் இருப்பவர்களுக்கு பொருந்தக்கூடிய ஒன்றாக திகழ்கிறது.

இதையும் படிக்கலாமே: கருமையான கூந்தலை பெற உதவும் எண்ணெய்

அன்றாடம் நாம் உணவாக எடுத்துக் கொள்ளும் முட்டை மற்றும் சாதத்தை வைத்து நம் அழகையும் நம்மால் அதிகரித்துக் கொள்ள முடியும். அதே சமயம் இளமையாகவும் இருக்க முடியும்.

- Advertisement -