இந்த 2 பொருள் மட்டும் உங்கள் வீட்டில் இருந்தால் என்றுமே இளமையாக இருக்கலாமே! முதுமையை தடுக்க 10 நிமிடம் இதை செய்யுங்கள்!

honey-turmeric-face-pack
- Advertisement -

இயற்கை நமக்கு கொடுத்திருக்கும் அழகை தக்க வைத்துக் கொள்ள செயற்கையை நாடி எப்பொழுதும் சென்று விடக்கூடாது. செயற்கையை தேடிச் செல்பவர்கள் தற்காலிகமான நிவாரணத்தை பெறுவதுடன் மட்டுமல்லாமல், வெகு விரைவாகவே இயற்கை தன்மையை இழந்து விடுவது உண்டு. எனவே முதுமையை தடுக்க நம் வீட்டில் இருக்கும் இந்த 2 பொருட்களை பயன்படுத்தி 10 நிமிடம் இதை செய்தாலே போதும்! அது என்னென்ன பொருட்கள்? அதை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

முதலாவது பொருளாக இருக்கக் கூடியது கஸ்தூரி மஞ்சள்! கஸ்தூரி மஞ்சளில் இருக்கும் குணாதிசயங்கள் முக அழகை மேம்படுத்துகிறது. சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும், அதனை ஒழித்துக் கட்டுவதில் முதன்மையாக விளங்கும் இந்த கஸ்தூரி மஞ்சள் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் பயன்படுத்தலாம்.

- Advertisement -

குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படும் சரும பிரச்சனைகள் எளிதாக நீங்குவதற்கு குளிக்கும் பொழுது கொஞ்சம் கஸ்தூரி மஞ்சளுடன், பால் கலந்து குளிக்க வைத்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும். சாதாரண மஞ்சளை காட்டிலும், கஸ்தூரி மஞ்சள் சரும பராமரிப்பிற்கு அதிகம் உதவுகிறது. இது நிறத்தை கொடுக்காமல், அதன் குணத்தை நமக்கு உள்ளூர சென்று வேலை செய்யும் என்பதால் ஆண்களும் எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையில் இருக்கும். கஸ்தூரி மஞ்சளுடன் நாம் பயன்படுத்த இருக்கும் ரெண்டாவது பொருள் சுத்தமான தேன்!

தேனில் இருக்கும் மருத்துவ குணங்கள் உடல் உள்ளுறுப்புகளுக்கு மட்டுமல்லாமல், வெளிப்புற தோற்றத்தையும் அழகுபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. முதுமையான தோற்றத்தை தவிர்ப்பதற்கு தேனை விட சிறந்த ஒரு பொருள் இருக்க முடியாது. தேன் இப்பொழுது கடைகளில் கிடைக்கக் கூடியது எந்த அளவிற்கு சுத்தமானதாக இருக்கிறது? என்பது தெரியாது. எனவே சுத்தமான தேனாக பார்த்து வாங்கிக் கொள்வது நல்லது.

- Advertisement -

கஸ்தூரி மஞ்சள் ஒரு ஸ்பூன் உடன் தேவையான அளவிற்கு தேன் கலந்து குழைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் பூசி நன்கு உலர விட்டு விட வேண்டும். 10 நிமிடத்தில் முகத்துடன் முகத்தோடு ஒட்டிக் கொண்டு விடும். அதன் பிறகு குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தை அழுத்தம் கொடுக்காமல் லேசாக கழுவினால் முகம் பட்டுப் போல பிரகாசிக்க ஆரம்பிக்கும்.

கஸ்தூரி மஞ்சள் மற்றும் தேன் இரண்டு பொருட்களும் சரும துவாரங்களுக்குள் சென்று அழுக்குகளை நீக்கி புதிய செல்களை உத்வேகப்படுத்தும். இதனால் சருமத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் நம்மை நெருங்க கூட செய்யாது. முகப்பருக்கள், கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள், தழும்புகள், சுருக்கங்கள், கருவளையம் போன்றவற்றை எளிதாக நீக்கும். அது மட்டுமல்லாமல் மூக்கின் மேல் சிலருக்கு கருப்பாக இருக்கும். இது நம்முடைய முக அழகை மொத்தமாக கெடுத்துக் கொண்டிருக்கும். அத்தகைய கருமையான திட்டுக்கள் கூட மிக சுலபமாக போக்கக்கூடிய இந்த அற்புதமான இரண்டு பொருட்களை இப்படி தினமும் பயன்படுத்தி பாருங்கள். தொடர்ந்து மூன்று நாட்கள் பயன்படுத்தினால் நம் முகத்தில் நல்ல மாற்றம் தெரியும். அதன் பிறகு வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தினால் போதும், இவ்வகையில் 2 மாதத்திற்குள் உங்களுடைய முதுமையான தோற்றம் போய் இளமையான தோற்றத்துக்கு மாறிவிடுவீர்கள்.

- Advertisement -