இழந்ததை எல்லாம் திரும்பவும் மீட்டு தரும் இலந்தை பழம்! இனிமேலாவது உங்கள் கையில் இருக்கும் பணம், நகை, சொத்து சுகம், இவைகளை எல்லாம் இழக்காமல் இருக்க இதை மட்டும் செய்யுங்கள் போதும்.

cash4
- Advertisement -

ஏதோ ஒரு சூழ்நிலையில், ஒரு தருணத்தில் நம் கையில் இருந்ததை எல்லாம் இழந்து நிற்போம். கணக்கில் அடங்காத சொத்து இருந்திருக்கும். கணக்கில் அடங்காத நகை பணம் இருந்திருக்கும். ஆனால் நம்முடைய கெட்ட நேரம், ஏதோ ஒரு வகையில் எல்லாவற்றையும் அடமானம் வைக்க சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருப்போம். சில பேருக்கு பொன், பொருள், சொத்து, பணம், மட்டும்தான் இழப்பு இருக்கும். ஆனால் ஒரு சில பேருக்கு நல்ல பெயரை இழந்து, கௌரவத்தை இழந்து கூட தலைகுனிவோடு வாழக்கூடிய சூழ்நிலை இருக்கும். நீங்கள் அடுத்தவர்களை நம்பி கொடுத்து கொடுத்து ஏமாந்து இருந்தாலும் சரி, அல்லது கெட்ட நேரத்தில் உங்கள் சொத்து சுகங்களை இழந்திருந்தாலும் சரி, அதை மீட்டெடுக்க இந்த பரிகாரத்தை செய்யலாம். பிறருக்கு உதவிக்காக கொடுத்து இழந்த சொத்து நகைகளை மீட்டு எடுக்கவும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

இழந்ததை மீட்டெடுக்க இலந்தை பழம் பரிகாரம்:
இந்த பரிகாரம் செய்வதற்கு நீங்கள் ஒரு இலந்தை பழம் மரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். இலந்தை பழம் மரம் வைத்து தான் இந்த பரிகாரத்தை செய்ய முடியும். எந்த இடத்தில் இலந்தை பழம் மரம் இருந்தாலும், அந்த மரத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். நேரம் காலம் கிழமை எதுவுமே பார்க்க வேண்டாம். மாலை 5 மணிக்கு முன்பாக எப்போது வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். மதியம் உச்சிப் பொழுதில் மரத்துக்கு பக்கத்தில் செல்ல வேண்டாம்.

- Advertisement -

மரத்திற்கு அருகில் நின்று நீங்கள் எதை இழந்தீர்களோ, அதை மனதில் நினைத்துக் கொண்டு, அது மீண்டும் உங்கள் கைக்கு கிடைக்க வேண்டும் என்று குலதெய்வத்தை நினைத்து, இலந்தை பழ மரத்திடம் பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் கஷ்டத்தை இலந்தை பழம் மரத்திடம் சொல்லுங்கள். மனம் உருகி நம்பிக்கையோடு அந்த மரத்திடம் இரண்டு நிமிடம் பேசுங்கள். அதன் பின்பு ஏழு முறை அந்த மரத்தை சுற்றிவர வேண்டும்.

பிறகு உங்களுடைய வீட்டிற்கு திரும்பலாம். இந்த பரிகாரத்தை எப்போதெல்லாம் உங்களால் செய்ய முடியுமோ, அப்போதெல்லாம் செய்யுங்கள். இலந்தை பழ மரத்திடம் உங்களுடைய பிரச்சனைகளை சொன்னால் கூடிய சீக்கிரத்தில் இழந்த பொருட்களை எல்லாம் மீட்டு எடுத்து விட முடியும்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செய்து விட்டு வாரம் ஒரு நாள் தயிர் சாதம் வாங்கி உங்கள் கையால் 7 ஏழைகளுக்கு மதிய பசி நேரத்தில் அன்னதானம் செய்ய வேண்டும். கூடவே குடிக்க தண்ணீரும் வாங்கி கொடுங்கள். பரிகாரம் இவ்வளவு தான். நம்பிக்கையோடு இதை தொடர்ந்து செய்து வந்தாலே, நிச்சயம் நீங்கள் இழந்தது எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும், அது ஒரு சில நாட்களில் திரும்பவும் உங்களுக்கு கிடைத்துவிடும்.

இதையும் படிக்கலாமே: சமையலறையில் இந்த இடத்தில் மட்டும் ஒரு காப்பர் சொம்பு வைத்தால், காசு கைநிறைய சேரும்.

கையில் இருப்பதை இழக்காமல் இருக்க:
சரி இழந்ததை எல்லாம் எழுந்து விட்டோம். மீதம் கையில் இருப்பதையாவது இழக்கக்கூடாது. இதற்கு என்ன செய்வது இலந்தை பழத்தின் கொட்டையை நன்றாக காய வைத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். இந்த இலந்தை பழ கொட்டை எந்த இடத்தில் எல்லாம் இருக்கிறதோ, அந்த இடத்தில் இருக்கும் பொருட்கள் எல்லாம் உங்களை விட்டு இழக்காமல் இருக்கும். பணம், சொத்து பத்திரம், நகை இருக்கக்கூடிய இடத்தில் இந்த கொட்டையை போட்டு வையுங்கள். வண்டு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். பழைய கொட்டை வண்டு வருவது போல ஆனால், மீண்டும் புதிய கொட்டையை வைத்துக் கொள்ளவும். இது ஒரு எளிமையான ஆன்மீகம் சொல்லும் தாந்திரீக பரிகாரம். நம்பிக்கையோடு செய்தால் நல்ல பலன் உண்டு என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -