சமையலறையில் இந்த இடத்தில் மட்டும் ஒரு காப்பர் சொம்பு வைத்தால், காசு கைநிறைய சேரும்.

sembu-sombu-salt
- Advertisement -

கையில் வருமானம் இல்லை, விலைவாசி ஏற்றம், பண பற்றாக்குறை, இதெல்லாம் போதாத குறைக்கு மருத்துவ செலவு, கையில் காசு பணமே நிற்பது கிடையாது. எவ்வளவோ கஷ்டப்பட்டு உழைக்கின்றோம். உழைத்த உழைப்புக்கு சரியான ஊதியம் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும், பாதி பணம் வீண்விரயம் ஆகிறது. வருமானத்தை பெருக்கிக் கொள்ள, செலவுகளை குறைக்க, சேமிப்பை இரட்டிப்பாக்க பொருளாதார பிரச்சனையில் இருந்து வெளிவர என்னதான் செய்வது என்றே புரியவில்லை என்பவர்களுக்கு, ஒரு எளிமையான ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த பதிவை மூலம் தெரிந்து கொள்ள போகின்றேன். இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்பவர்களுக்கு நிச்சயமாக பண பிரச்சனை தீரும்.

காசு சேர சமையலறையில் செய்ய வேண்டியது:
பெரும்பாலும் நம் வீட்டு சமையலறை கிழக்கு பார்த்தவாறு தான் இருக்கும். அதாவது வீட்டில் இருக்கும் பெண்கள், கிழக்கு பார்த்தவாறு நின்றுதான் சமைப்பார்கள். அதுதான் சரியான வாஸ்துவும் கூட. நீங்கள் கிழக்கை பார்த்து, அடுப்பை பார்த்து நிற்கும் போது, உங்களுடைய வலது கை பக்கம் உப்பு ஜாடி இருக்க வேண்டும். உப்பு ஜாடி நிரம்ப, கல் உப்பு இருக்க வேண்டும். இந்த கல்லுப்புக்கு பக்கத்திலேயே ஒரு செம்பு சொம்பு வைக்க வேண்டும். அதுதான் காப்பர் சொம்பு.

- Advertisement -

இந்த செம்பு சொம்பில் ஒரே ஒரு விரலி மஞ்சள் போட்டு விட்டு தினமும் அதில் சில்லரை காசுகளை சேர்த்து வாருங்கள். இந்த சொம்பில் சில்லறை காசுகள் சேர சேர உங்களுடைய வீட்டில் செல்வ செழிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கும். அந்த சொம்பு முழுவதும் சில்லறை காசு நிரம்பியதும் அதை பூரட்டாதி நட்சத்திரத்தன்று எடுத்து செலவு செய்ய வேண்டும். அதாவது கலச சொம்பில் இருக்கும் சில்லரை காசுகளை பூரட்டாதி நட்சத்திரத்தன்று எடுத்து செலவு செய்ய வேண்டும். இடையே வேற எந்த நாளில் இருந்தும் அந்த சொம்பிலிருந்து காசை எடுக்க கூடாது.

இந்த பைசாவை எந்த சுப செலவுக்கு வேண்டும் என்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுடைய தேவைக்கு அல்லது, கோவிலுக்கு பூ வாங்கி கொடுப்பது, அபிஷேக பொருட்கள் வாங்கி கொடுப்பது, மங்களப் பொருட்கள் வாங்கிக் கொடுப்பது, என்று எந்த தேவைக்காக வேண்டும் என்றாலும் இந்த பணத்தை எடுத்து செலவு செய்யலாம். இந்த பணத்திலிருந்து ஒரு சின்ன தொகையை அன்னதானம் செய்யுங்கள். 20 ரூபாய்க்கு 4 இட்லி வாங்கி ஒரு ஏழைக்கு தானம் செய்தாலும் நல்ல பலன் தரும்.

- Advertisement -

சொம்பிலிருந்து எடுத்து செலவு செய்யக்கூடிய நாள் பூரட்டாதி நட்சத்திரமாக இருக்க வேண்டும். நன்றாக கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். சொம்பில் காசு போட தொடங்கக் கூடிய நாள் எந்த நாளாக இருந்தாலும் சரி. ஆனால் அதிலிருந்து எடுத்து செலவு செய்யக்கூடிய நட்சத்திரத்தை மட்டும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: வீடு, வியாபாரம்,அலுவலகம் என அனைத்து இடத்திலும் உங்களின் தேவைக்கு பணம் உங்களை தேடி வர அரிசியில் இதை ஒளித்து வைத்து விடுங்கள் போதும். வற்றாத பண வரவிற்கு எளிய வழி.

இப்படி பூரட்டாதி நட்சத்திரத்தன்று சொம்பில் இருக்கும் காசை செலவு செய்து விட்டு, சொம்பை ஒரு முறை கழுவி விட்டு, அதே விரலி மஞ்சளை அந்த சொம்புகுள்ளே போட்டு, மீண்டும் காசு சேர்க்க தொடங்கலாம். இப்படியே தொடர்ந்து செய்து வந்தால் நிச்சயமாக உங்களுடைய வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிக்கும். பண வரவு அதிகரிக்கும். கையில் பணம் தங்கும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த சின்ன பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -