பூஜை அறையில் பூஜை செய்யும் போது இந்த பொருட்களெல்லாம் இருக்கிறதா? பூஜை அறையில் இருக்க வேண்டிய முக்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா?

poojai room
- Advertisement -

ஒவ்வொருவரின் வீட்டிலும் பூஜை அறை என்று கட்டாயம் ஒன்று இருக்கும். பூஜையறை இல்லாத வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் என்பது குறையும். பூஜை அறையில் நாம் செய்யக் கூடிய சிறு சிறு விஷயங்கள் கூட வீட்டில் சுபீட்சம் நிலைத்திருக்க காரணமாக அமையும். ஒருவருடைய பூஜை அறை எப்படி இருக்கிறது? என்பதைப் பொறுத்து தான் அவர்களுடைய பக்தியும் வெளிப்படுகிறது. தினமும் விளக்கேற்றும் வீடுகளில் அள்ள அள்ள குறையாத செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் பூஜை அறையில் பூஜை செய்யும் பொழுது இருக்க வேண்டிய பொருட்கள் என்னென்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

mirror

பூஜை அறையில் கட்டாயம் இருக்க வேண்டிய முதல் பொருள் ‘கண்ணாடி’. உங்களுடைய பித்ருக்கள் பூஜை அறையில் இருக்கும் கண்ணாடி வழியே தங்களுடைய முகத்தை பிரதிபலித்து விட்டு செல்வதாக சாஸ்திரம் கூறுகிறது. பித்ருக்கள் மட்டுமல்லாமல் குலதெய்வத்தினுடைய பிம்பமும் நீங்கள் பூஜை செய்யும் பொழுது அந்த கண்ணாடியில் பிரதிபலிக்கும். எனவே கட்டாயம் கண்ணாடியை பூஜை செய்யும் போது வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பூஜை செய்யும் பொழுது நீங்கள் தீர்த்தம் தயாரித்து வைக்காவிட்டாலும் பரவாயில்லை! ஆனால் கட்டாயம் தீர்த்த பாத்திரத்தில் தண்ணீர் மட்டுமாவது வைத்திருக்க வேண்டும். தண்ணீர் இல்லாமல் பூஜை நிறைவு பெறாது. அதே போல நிவேதனத்திற்கு ஏதாவது ஒரு பொருளை கட்டாயம் வைத்து தான் பூஜையை ஆரம்பிக்க வேண்டும். எதுவுமே இல்லை என்றாலும் ஒரு டீஸ்பூன் சர்க்கரை வைத்தாவது நீங்கள் பூஜை செய்ய வேண்டும். பொதுவாக நிவேதனம் வைக்கும் பொழுது தண்ணீர், அரிசி மற்றும் பருப்பு வைத்து வழிபடுவது வறுமையை நீக்கும்.

அது போல் பூஜை அறையில் தெய்வீக சக்தி பெருக பூஜை செய்யும் பொழுது அங்கு பன்னீர் வைத்திருப்பது பெறற்கரிய பலன்களை பெற்றுத் தரும். பன்னீர், அத்தர், ஜவ்வாது போன்ற வாசனை மிக்க பொருட்கள் தெய்வீக ஆற்றலை ஈர்த்து தரும் வலிமை பெற்றுள்ளது. அந்த வகையில் இந்த பொருட்கள் பூஜை அறையில் வைத்து அதன் பின் பூஜையை செய்வது தெய்வீக சிந்தனையைத் தூண்டக் கூடிய நல்ல அற்புத பலன்களை கொடுக்கும்.

- Advertisement -

பூஜை அறையில் நீங்கள் விதவிதமாக எத்தனை விளக்குகளை வைத்திருந்தாலும், அகல் விளக்கிற்கு ஈடு இணை எதுவுமே இல்லை. எனவே பூஜை அறையில் பூஜை செய்யும் பொழுது அகல் விளக்கு ஒன்றையாவது ஏற்றி வைத்து வழிபடுவது நல்ல பலன்களைக் கொடுக்கும். அது போல் நீங்கள் விதவிதமாக எத்தனை சுவாமி படங்களை வைத்து இருந்தாலும் குலதெய்வத்திற்கு ஈடு இணை எதுவுமே இல்லை. உங்களுடைய குல தெய்வம் என்னவென்று அறிந்து, அவருக்குரிய படங்களை வைத்து பூஜை செய்வது இன்னும் நல்ல பலன்களை நமக்கு கொடுக்கும்.

agal-vilakku-deepam

பூஜை அறையில் இருக்க வேண்டிய மிக முக்கிய பொருட்களில் ஒன்று மந்திர புத்தகம். உங்களுக்கு இஷ்டமான தெய்வத்தினுடைய மந்திரங்கள் பதிந்த புத்தகம் ஒன்றையாவது கட்டாயம் பூஜை அறையில் வைத்து அதன் பின் வழிபாடுகளை துவங்குங்கள். பூஜை அறையில் வைக்க வேண்டிய படங்களில் முக்கியமான படம் ‘கோமாதா’. பிறந்த குழந்தை முதல் இறக்கும் தருவாயில் இருக்கும் மனிதன் வரை அத்தனை பேரும் தன் தாய்மார்களிடம் பால் குடித்து இருப்பார்களோ, இல்லையோ! பசு மாட்டிடம் இருந்து பெறக்கூடிய பசும்பாலை கட்டாயம் குடித்திருப்பார்கள். பசு மாட்டை வணங்கும் பொழுது நமக்கு மற்ற அத்தனை தேவர்களும், தெய்வங்களும் சேர்ந்து ஆசீர்வாதம் செய்யும் பலன்கள் கிடைக்கும். எனவே கோமாதா படத்தை கட்டாயம் வைத்து வழிபாடு செய்து பாருங்கள், நிச்சயம் நல்ல ஒரு சுபீட்சம் பெருகும்.

- Advertisement -