வருமானம் அதிகரிக்க சூட்சம பரிகாரம்

narachimmar poojai
- Advertisement -

நம்முடைய ஒவ்வொரு நாளின் உழைப்பும் தேவையும் தேடலும் வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்காக தான். வருமானம் அதிகரித்தால் மட்டுமே நம்முடைய குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் நிலைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியும். இந்த வருமானம் என்பது வேறு ஏதும் இல்லை பணம் தான்.

இந்த பணத்தை அதிகரித்துக் கொள்ளவும் பணம் வருவதற்கான வாய்ப்பை பெருக்கிக் கொள்ளவும் பல சூட்சம பரிகார முறைகள் உண்டு. அதில் ஒரு பரிகார முறையைத் தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

வருமானம் அதிகரிக்க சுவாதி நட்சத்திர பரிகாரம்

இந்த பரிகாரத்தை நாளைய தினம் தான் செய்ய வேண்டும். நாளைய தினம் முழுவதுமாக சுவாதி நட்சத்திரம் உள்ளது. அந்த நேரத்தில் செய்வது சிறந்த பலனை தரும் என்று சொல்லப்படுகிறது. அது மட்டும் இன்றி பெண்கள் கையால் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் அது மிகவும் முக்கியம்.

ஒரு வீட்டில் லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடிய ஆற்றல் பெண்கள் வசம் தான் அதிகம் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆகையால் வருமானம் சார்ந்த இந்த பரிகாரத்தை பெண்கள் செய்வது சிறப்பு. இந்த பரிகாரம் செய்வதற்கு துளசி இலை மாலை கட்டி நாளைய தினம் உங்கள் வீட்டின் பூஜை அறையில் உள்ள சுவாமி படங்களுக்கு மாலலையாக அணிவியுங்கள்.

- Advertisement -

அதே போல் துளசி சேர்த்த தண்ணீரை பூஜை அறையில் வைத்து வணங்கி விட்டு அந்த தண்ணீரை வீடு முழுவதும் பெண்கள் கையால் தெளிக்க வேண்டும். ஒரு வேளை துளசி கிடைக்கவில்லை என்பவர்கள் மஞ்சள் நிற பூக்களால் சுவாமி படங்களுக்கு போட்டு விட்டு மஞ்சள் கலந்த தண்ணீரை இது போல தெளிக்கலாம். ஆனால் துளசி இதில் மிகவும் முக்கியம் கிடைக்காத பட்டத்தில் மட்டும் இதை பயன்படுத்துங்கள்.

இந்த சுவாதி நட்சத்திரமானது நரசிம்மருக்கு உகந்த நட்சத்திரமாக கருதப்படுகிறது. அப்பேற்பட்ட தினத்தில் அவருக்கு உகந்த துளசியை கொண்டு இந்த சூட்சம பரிகாரத்தை செய்யும் போது நம்முடைய வீட்டில் வருமான அதிகரித்து பொருளாதார நிலை உயர்வதற்கான வாய்ப்புகள் பெருகும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: கொடுத்த கடன் தொகை திரும்ப கிடைக்க மந்திரம்

இந்த பரிகார முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் நாளைய தினம் இந்த அற்புதமான சுவாதி நட்சத்திர பரிகாரத்தை செய்து பலன் அடையலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -