பார்லருக்கு போகாமல், பல ஆயிரம் செலவு செய்யாமல் வெறும் 10 நிமிடத்தில் வெள்ளையாக இதோ ஒரு சூப்பரான ஐடியா. இதற்கு சமையலறையில் இருக்கக்கூடிய இந்த 3 பொருட்களே போதும்.

face8
- Advertisement -

பார்லருக்கு போய் நிறைய காசு செலவு செய்து முகத்தை ஃபேசியல் செய்து கொண்டால் எந்த அளவுக்கு பளபளப்பும் அழகும் கிடைக்குமோ, அதே அழகை நம் வீட்டிலேயே பெற முடியும். அதுவும் மிக மிக எளிமையான முறையில், நம் சமையல் அறையில் இருக்கும் மூன்று பொருட்களை வைத்தே. எங்கேயாவது அவசரமாக திடீரென்று வெளியே கிளம்ப வேண்டிய சூழ்நிலை. முகத்தைப் பார்த்தால் ரொம்பவும் டல்லடிக்குது. உடனடியாக முகத்தை பளிச்சென்று மாற்ற என்ன செய்யலாம். யோசிக்காம இந்த அழகு குறிப்பை முயற்சி செய்து பார்க்கலாம். பிறகு அடுத்த 10 நிமிடத்தில் உங்களுடைய முகத்தில் அவ்வளவு ஒரு பிரகாசம் இருக்கும். அவ்வளவு ஒரு ஜொளிப்பு தெரியும். அழகின் மீது அதிக அக்கரையும் ஆர்வமும் உள்ளவர்கள் குறிப்பை தொடர்ந்து படியுங்கள். குறிப்பு பிடித்தவர்கள் முயற்சி செய்து பாருங்கள்.

பத்து நிமிடத்தில் முகத்தை வெள்ளையாக மாற்ற அழகு குறிப்பு:
ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் பச்சரிசி 2 ஸ்பூன், உளுந்தம் பருப்பு 2 ஸ்பூன், போட்டு நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை சலித்து எடுத்து வைத்துக் கொண்டாலும் நல்லது தான். சலித்த நைசான பொடியோடு 2 ஸ்பூன் கோதுமை மாவை போட்டு, நன்றாக கலந்து ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்தால் நம்முடைய பேசியல் பவுடர் தயார். (பச்சரிசி, உளுந்து, கோதுமை மாவு, இந்த மூன்று பொருட்கள் சேர்த்த ஃபேசியல் பவுடர் தயார்.)

- Advertisement -

இந்த மாவு கெட்டுப் போகாது. பாட்டிலில் போட்டு எடுத்து வைத்துவிட்டு தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்தலாம். அதை எப்படி பயன்படுத்தலாம். ஒரு சிறிய கிண்ணத்தில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் பவுடரில் இருந்து தேவையான அளவு எடுத்து போட்டுக் கொள்ளுங்கள். இந்த பவுடரை பேக்காக மாற்ற தயிர், பால், இரண்டையும் சரிசமமாக சேர்க்கலாம்.

காய்ச்சிய பால் அல்லது காய்ச்சாத பால் எதுவாக இருந்தாலும் சேர்த்துக் கொள்ளுங்கள். காய்ச்சியபாலாக இருந்தால் ஆற வைத்து சேர்த்துக் கொள்ளவும். இப்போது நமக்கு ஒரு பேக் கிடைத்திருக்கும் அல்லவா. இதில் முகத்தில் அப்ளை செய்து கொள்ள வேண்டும். அப்படியே ஃபேஸ் பேக் போல போட்டு பத்து நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். மசாஜ் செய்தபடி கழுவி விடுங்கள். அவ்வளவுதான்.

- Advertisement -

உங்களுடைய சருமம் இன்ஸ்டன்ட் ஆக வெள்ளையாக மாறி இருக்கும். தொடர்ந்து இதை வாரத்தில் இரண்டு நாட்கள் பின்பற்றி வர உங்களுடைய சருமம் நிரந்தரமாக வெள்ளையாக மாறிவிடும். சன்டேன் மூலமாக ஏற்பட்ட கருமை நிறத்தை கூட உடனடியாக போக்க இந்த குறிப்பு உதவியாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: தேங்காய் எண்ணெயை தலைக்கு இப்படி வைப்பதன் மூலம் தலைமுடி இரண்டு மடங்கு அதி வேகமாக வளரும். முடி வளர்ச்சியை பிறகு நீங்களே நினைத்தால் கூட, தடுத்து நிறுத்த முடியாது.

இதே பேக்கை உங்கள் உடம்பில் வேறு எந்த இடத்தில் வேண்டுமென்றாலும் பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு கை, கால், அக்குள் பகுதி, கைமுட்டி, கால் முட்டி, போன்ற கருமை நிறம் படிந்த இடத்திலும் இந்த பேக்கை போடுவதன் மூலம் அந்த கருமை நிறம் படிப்படியாக குறைவதை உணர முடியும். அழகு குறிப்பு பிடிச்சவங்க முயற்சி செஞ்சு பாருங்க.

- Advertisement -