இன்ஸ்டன்டாக ஃபேஷியல் செய்த முகம் வேண்டுமா? வெளியே கிளம்புவதற்கு 10 நிமிஷத்துக்கு முன்னாடி இப்படி செஞ்சு பாருங்க உடனடி பொலிவு நிச்சயம் கிடைக்கும்!

facial-tea-kadalai-maavu
- Advertisement -

ஏதாவது ஒரு விசேஷம், விழா என்று வரும் பொழுது முன்கூட்டியே நம்முடைய முகத்தை ஃபேசியல் செய்து கொள்வோம். இதனால் விசேஷங்களின் பொழுது நம்முடைய முகம் பொலிவான மற்றும் ஜொலிஜொலிப்புடன் காணப்படும். ஆனால் சில சமயங்களில் நமக்கு இதற்கெல்லாம் நேரமே இருக்காது. அப்படிப்பட்டவர்கள் இன்ஸ்டன்ட் ஆக பேஷியல் செய்த ஒரு பொலிவை பெறுவதற்கு என்ன செய்யலாம்? என்கிற அழகு குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நீங்கள் இனி தெரிந்து கொள்ள இருக்கிறீர்கள்.

இன்ஸ்டண்டாக ஒருவருடைய முகம் ஜொலிப்பு தன்மை பெறுவதற்கு அதிக அளவு பணம் செலவு செய்து பேசியல் செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. நம் வீட்டில் கிடைக்க கூடிய சின்ன சின்ன சாதாரண பொருட்களை வைத்தே எப்படி ஆச்சரியத்தகும் வகையில் நம்முடைய முகத்தை பொலிவுடன் வைத்துக் கொள்ள முடியும்?

- Advertisement -

முதலில் நம் வீட்டில் இருக்கும் கடலை மாவை எடுத்துக் கொள்ளுங்கள். கடலை மாவுக்கு ஈடு இணையான சரும பராமரிப்பு எதுவுமே இருக்க முடியாது. கடலை மாவு அரை ஸ்பூன் மட்டும் எடுத்து ஒரு பவுலில் போட்டுக் கொள்ளுங்கள். அதுபோல எல்லோருடைய வீட்டிலும் முல்தானி மெட்டி இருக்கும். இந்த முல்தானி மெட்டி முகப்பொலிவை அதிகரித்து எண்ணெய் பசையை இன்ஸ்டன்ட் ஆக நீக்கக்கூடிய ஆற்றல் கொண்டுள்ளது எனவே முல்தானிமட்டி அரை ஸ்பூன் அளவிற்கு பவுலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கடலை மாவு மற்றும் முல்தானி மெட்டியுடன் இப்பொழுது நாம் சேர்க்க இருக்கும் பொருள் சுத்தமான தேன் ஆகும். தேன் இல்லை என்றால் கற்றாழை ஜெல் பயன்படுத்துங்கள். தேன் அல்லது கற்றாழை ஜெல் ஒரு ஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் அரை ஸ்பூன் அளவிற்கு தேயிலை தூள் சேர்க்க வேண்டும். பச்சை தேயிலை தூள் அல்லது நீங்கள் சாதாரணமாக டீ போட பயன்படுத்தும் தேயிலை தூள் எது உங்களிடம் இருக்கிறதோ, அதை பயன்படுத்திக் கொள்ளலாம். பச்சை தேயிலை பயன்படுத்தினால் அதில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உடனடியாக நம்முடைய சருமத்திற்கு ஒரு க்லோ கொடுக்கும். இல்லாதவர்கள் டீத்தூளை பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போது இதை ஒரு பேஸ்ட் போல நன்கு ஸ்பூன் வைத்து அடித்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு ரெண்டு நிமிடம் அப்படியே ஊறவிட்டு விடுங்கள். அதன் பிறகு உங்களுடைய முகத்தை ஒருமுறை சாதாரண தண்ணீரால் கழுவி துடைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இந்த பேஸ்ட்டை முகம், கழுத்து போன்ற பகுதிகளில் நன்கு மசாஜ் செய்வது போல மசாஜ் செய்து பூசிக் கொள்ளுங்கள். உங்கள் உதட்டிற்கு கீழே இருக்கும் பள்ளமான பகுதி மற்றும் மூக்கிற்கு இரு புறங்களிலும் இருக்கும் இடுக்குகள் ஆகியவற்றில் அழுத்தம் கொடுக்காமல் பரபரவென தேய்க்க வேண்டும். இதனால் அந்த இடங்களில் இருக்கக்கூடிய அழுக்குகள் மற்றும் கருமை நீங்கும்.

இதையும் படிக்கலாமே:
முடி உதிர்வதை உடனடியாக தடுத்து நிறுத்தும் சக்தி இந்த 2 பொருளுக்கும் உண்டு. இதை மழைக்காலத்திலும் நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.

மூக்கிற்கு மேலேயும் அது போல தேயுங்கள். இதனால் கரும்புள்ளி, சொரசொரப்பு தன்மை, வெண்புள்ளி போன்றவை இருந்தாலும் அவை நீங்கும். கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையம் போன்ற பகுதிகளிலும் லேசாக நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இப்படி ஒரு ஐந்து நிமிடம் செய்த பிறகு சில நிமிடம் உலற விட்டு விடுங்கள். நன்கு உலர்ந்ததும் முகத்தை வெதுவெதுப்பான தண்ணீரால் மெல்லத் துடைத்து எடுத்து விடுங்கள். அவ்வளவுதான் ஃபேசியல் செய்தது போன்ற இன்ஸ்டன்ட் பொலிவு உடனே கிடைக்கும். இதன் மீது நீங்கள் எப்பொழுதும் போல மாய்ஸ்ரைஸ் செய்து உங்களுடைய மேக்கப் செய்து கொண்டால் போதும் விசேஷத்திற்கு நீங்கள் ரெடி!

- Advertisement -