முகப்பொலிவை உடனடியாக பெற ஃபேஸ் பேக்.

glowing face pack
- Advertisement -

கருப்போ, மாநிறமோ, வெள்ளையோ எந்த நிறமாக இருந்தாலும் முகம் பொலிவாக இருந்தால்தான் அதை கலையான முகம் என்று கூறுவோம். கிராமப்புறங்களில் இருப்பவர்கள் கருப்பா இருந்தாலும் கலையா இருக்காங்க என்ற வார்த்தையை உபயோகப்படுத்துவார்கள். அந்த கலையை தான் நாம் முகப்பொலிவு என்று கூறுகிறோம். அப்படிப்பட்ட முகப்பொலிவை பெறுவதற்கும் அதே சமயம் முகத்தில் இருக்கக்கூடிய தேவையற்ற முடிகளை நீக்குவதற்கும் உதவக்கூடிய ஃபேஸ் பேக் பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

அன்றைய காலகட்டத்தில் இயற்கையான பொருட்களை பயன்படுத்தியே முகப்பொலிவுடன் இளமையுடனும் திகழ்ந்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் கெமிக்கல்கள் அதிகம் நிறைந்த பொருட்களை உபயோகப்படுத்துவதால் பல வித பாதிப்பிற்கு ஆளாகிறோம். இந்தப் பகுதியில் இயற்கையான முறையில் செய்யக்கூடிய ஃபேஸ் பேக்கை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இதற்கு முதலில் ஒரு சுத்தமான பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மூன்று ஸ்பூன் அளவிற்கு கோதுமை மாவை சேர்க்க வேண்டும். பிறகு 2 ஸ்பூன் அளவிற்கு கஸ்தூரி மஞ்சள் தூளை சேர்க்க வேண்டும். மூன்றாவதாக 2 ஸ்பூன் அளவிற்கு சுத்தமான நெய்யை சேர்த்து தேவையான அளவு பாலை ஊற்றி நன்றாக பேஸ்ட் பதத்திற்கு கிளர வேண்டும். முகத்தை தண்ணீரை வைத்து சுத்தமாக கழுவிய பிறகு நாம் தயார் செய்து வைத்திருக்கும் இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் கீழிருந்து மேலாக தடவ வேண்டும்.

பத்து நிமிடம் அப்படியே உலர விட்டு பிறகு நம் கைகளை வைத்து நன்றாக ஸ்கிரப் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலமாக முகத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்கள் நீக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் தேவையற்ற முடிகளும் உதிர்வதை நம்மால் கண்கூடாக பார்க்க முடியும். அனைத்தையும் நன்றாக ஸ்கிரப் செய்து உதிர்த்து விட்ட பிறகு முகத்தை சாதாரண தண்ணீரை ஊற்றி கழுவ வேண்டும்.

- Advertisement -

கோதுமை மாவு இயற்கையிலேயே முகத்தில் இருக்கக்கூடிய அழுக்குகளை நீக்க உதவுகிறது. அது மட்டுமல்லாமல் இறந்த செல்கள், மூக்கின் மேல் இருக்கும் கரும்புள்ளிகள், சூரிய கதிர்களால் ஏற்படக்கூடிய கருந்திட்டுகள் போன்றவை அனைத்தும் நீக்க உதவுகிறது. கஸ்தூரி மஞ்சள் ஒரு ஆன்டிபயாட்டிக்காக செயல்படுவது நம் அனைவருக்கும் தெரிந்தது அது மட்டுமல்லாமல் முகத்திற்கு ஒருவித பொலிவை தருவதற்கும் உதிர்ந்த முடிகள் திரும்பவும் முளைக்காமல் இருப்பதற்காக இந்த கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்த வேண்டும்.

நெய் இயற்கையிலேயே மிகவும் அற்புதம் வாய்ந்த பொருளாக திகழ்கிறது. நம் முகத்தில் தடவும் பொழுது நம் முகத்திற்கு தேவையான எண்ணெய் பசையை அது கொடுத்து ஒருவித வளவளப்புத் தன்மையை முகத்திற்கு கொடுக்கிறது. இந்த ஃபேஸ் பேக்கை ரொம்ப உலர விடாமல் லேசாக ஈரப்பதம் இருக்கும் பொழுது தான் ஸ்க்ரப் செய்து உதிர்த்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பாத வெடிப்பை சரி செய்ய சுலபமான வழி

இந்த முறையை பயன்படுத்தி தான் அன்றைய காலத்தில் திருமணம் ஆகப்போகும் பெண்களுக்கு வீட்டிலேயே செய்தார்கள். ஒரு முறை உபயோகப்படுத்தினாலே நல்ல பலன் கிடைக்கும்.

- Advertisement -