பார்ட்டி பங்க்ஷன் போகணும்மா முகம் பளிச்ன்னு இருக்க இனி பார்லர் போகாதீங்க. இந்த பேக்கை மட்டும் ட்ரை பண்ணி பாருங்க. இதுக்கு அப்புறம் எப்பவுமே பார்லர் இருக்க பக்கம் கூட போக மாட்டீங்க.

beauty tips
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் எல்லோருமே மாதம் ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ பார்லர் சென்று முகத்தை பளபளப்பாக மாற்றிக் கொள்வதை ஒரு வழக்கமாகவே வைத்துக் இருக்கிறார்கள். அதிலும் ஏதாவது பார்ட்டி ஃபங்ஷன் என்று வந்து விட்டால் நிச்சயமாக பார்லர் சென்று தான் ஆக வேண்டும் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் ஆழமாக பதிந்து விட்டது. இனி எதற்கெடுத்தாலும் பார்லர் நோக்கி ஓடாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து பார்லர் சென்று வந்ததை விடவும் முகம் பளிச்சென்று மாற இந்த ஒரு பேக் போதும்.

முகம் வெள்ளையாக மாற காபி பொடி பேக்:
இந்த பேக்கை தயாரிக்க முதலில் ஒரு பவுலில் ஒரு டீஸ்பூன் இன்ஸ்டன்ட் காபி பவுடர் எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து நன்றாக கலந்த பிறகு ஒரு ஸ்பூன் அதிகம் புளிக்காத தயிரையும் சேர்த்து நல்ல பேஸ்ட் பதத்திற்கு குழைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த பேக்கை இரவு உறங்குவதற்கு முன்பாக அதாவது நாளை நீங்கள் ஏதேனும் பங்க்ஷனுக்கு செல்ல வேண்டும் என்றால் முதல் நாள் இரவே உங்கள் முகத்தை சுத்தமாக துடைத்த பிறகு இந்த பேக்கை உங்கள் முகத்தில் அப்ளை செய்து ஐந்து நிமிடம் வரை மசாஜ் செய்த பின் பத்து நிமிடம் இதை உங்கள் முகத்தில் அப்படியே விட்டு விடுங்கள்.

அதன் பிறகு சுத்தமான தண்ணீர் கொண்டு முகத்தை அலம்பி விட்டு இரவு அப்படியே உறங்கி சென்று விடுங்கள். இப்படி செய்வதன் மூலம் இரவில் உங்கள் முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரித்து முகம் நல்ல பளபளப்பாக மாற இந்த பேக் உதவி புரியும். ஒரு வேளை இதை இரவு செய்ய முடியவில்லை பங்க்ஷன் போவதற்கு முன்பாக செய்ய வேண்டும் என்றாலும் போட்டுக் கொள்ளலாம். இதிலும் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

- Advertisement -

பொதுவாகவே காபி பவுடர் நம் முகத்தை சுத்தம் செய்ய ஒரு ஸ்க்ரப்பிங் போல பயன்படும். இத்துடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து முகத்தை தேய்த்தாலே போதும் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் அனைத்தும் வெளியேறி முகம் பளிச்சென்று மாறி விடும்.

இத்துடன் சேர்க்கும் கடலைமாவிற்கு இயற்கையாகவே நிறத்தை அதிகரிக்க கூடிய தன்மை உண்டு. மேலும் இதனுடன் தயிரும் சேர்த்து போடும் போது முகம் வறட்சி அடையாமல் முகம் எப்பொழுதும் ஈரத்தன்மையுடன் நல்ல மிருதுவாக இருக்கும். இந்தப் பேக்கை ஒரே ஒரு முறை பயன்படுத்தினாலே போதும் உங்கள் முகம் அவ்வளவு பளிச்சென்று மாறி விடும். இதை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தி வந்தால் உங்கள் முகம் நிரந்தரமாகவே நல்ல நிறத்திற்கு மாறி விடும்.

இதையும் படிக்கலாமே: தல முடி வேகமாக வளரவும், முடி கொட்டுவது நிற்கவும், செம்பருத்தி பூவை கொண்டு இதை எல்லாம் செய்யலாம்.

இதை செய்த பிறகு உங்களிடம் இருக்கும் ஏதாவது ஒரு மாஸ்டரைசர் அல்லது ஆலுவேரா ஜெல்லை கொண்டு முகத்தை லேசாக மசாஜ் செய்து கொள்ளுங்கள். இது முகத்திற்கு மிகவும் நல்லது. இந்த அழகு குறிப்பு பதிவில் உள்ள இந்த டிப்ஸ் உங்களுக்கு பிடிச்சிருந்தா கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -