எப்பேற்பட்ட கறுத்த முகமும் செக்க செவேரென்னு சிவப்பாக மாற, அழகை அள்ளி அள்ளி கொடுக்கக் கூடிய இந்த ஆயிலை தினமும் ஒரு சொட்டு உங்கள் முகத்தில் தேய்த்தாலே போதும்.

face beauty
- Advertisement -

இன்றைய கால இளம் தலைய முறையினருக்கு மத்தியில் முகம் சிவப்பாக இருந்தால் தான் அழகு என்று ஒரு கருத்து நிலவுகிறது. கருப்பாக இருந்தாலும் கலையாகவும், அதே நேரத்தில் அது ஒரு விதமான அழகாகவும் இருக்கும். ஆனாலும் இப்போதெல்லாம் முகம் நிறமாக வேண்டும் என்பது மட்டும் தான் பலருடைய ஆசையாக இருக்கிறது. இதில் தவறு என்றும் சொல்ல முடியாது. இதில் ஆண் பெண் என்ற எந்த பேதமும் கிடையாது.

ஒரு சிலர் நல்ல நிறமாக இருப்பார்கள். வெயில் அல்லது வேறு பல காரணங்களால் முகத்தில் நிறம் மாறி பொலிவிழந்து இருக்கும். அப்படியானவர்கள் இந்த ஒரு ஆயிலை தினமும் பயன்படுத்தி வரலாம். அது மட்டும் இன்றி நல்ல கருமை நிறத்துடனே இருப்பவர்கள் கூட தொடர்ந்து இந்த எண்ணையை பயன்படுத்தி வரும் போது அவர்களுடைய நிறமும் மேம்பட்டு சிகப்பாக மாறும். அத்தகைய அற்புதமான இந்த எண்ணெய் எப்படி தயார் செய்வது என்று இந்த அழகு குறிப்பு பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

கருப்பான முகமும் வெள்ளையாக மாற
இந்த எண்ணெய்யை தயாரிக்க நமக்கு இரண்டே பொருள்கள் தான் தேவை. ஒன்று நல்ல பழுத்த நிலையில் உள்ள பப்பாளி பழம். அடுத்து செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய். பப்பாளி பழத்தை தோல் உரித்து அதில் உள்ள விதைகள் எல்லாம் நீக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளுங்கள்.பப்பாளி பழத்தை எந்த அளவு எடுத்துக் கொள்கிறீர்களோ அதை விட ஒரு பங்கு அதிகமாக தேங்காய் எண்ணெய் வாங்கிக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் அடி கனமான ஒரு பாத்திரத்தை வைத்து அரைத்து வைத்த பப்பாளி விழுதை அதில் சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் நீங்கள் எடுத்து வைத்திருக்கும் தேங்காய் எண்ணெய்யை ஊற்றி கொதிக்க விட வேண்டும். இதை செய்யும் போது அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளுங்கள்.

தேங்காய் எண்ணெயில் இந்த பப்பாளி சாறு எல்லாம் முழுவதுமாக இறங்கி பப்பாளி ஒரு சக்கை போல மாறி எண்ணெய் சிகப்பாக நிறம் மாறி வரும் வரை கொதிக்க வேண்டும். இது குறைந்தது ஒரு 20 நிமிடமாவது இப்படி மிதமான பொதுநிலையில் இருக்க வேண்டியது அவசியம். அதன் பிறகு அடுப்பை அணைத்து விட்டு எண்ணெய்யை நன்றாக ஆற விடுங்கள். எண்ணெய் நன்றாக ஆறிய பிறகு வடிகட்டி ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

தினமும் இரவு உறங்க செல்வதற்கு முன்பாக முகத்தை நன்றாக சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் துடைத்த பிறகு இந்த எண்ணெயில் இருந்து சிறிதளவு எடுத்து உங்கள் முகத்தில் தேய்த்து விட்டு அப்படியே உறங்கி விடுங்கள். மறுநாள் காலையில் முகத்தை சுத்தம் செய்தால் போதும். ஒரு வேளை உங்களுடைய சருமம் எண்ணெய் பசை உள்ளதாக இருந்தால் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக இதை முகத்தில் தேய்த்து அதன் பிறகு குளித்து விடுங்கள். இரவு முழுவதும் ஊற விட வேண்டாம்.

இந்த எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் கருமையான தோற்றம் உடையவர்கள் கூட நிறமாக மாறி விடுவார்கள் என்பதோடு முகத்தில் இருக்கும் முகப்பருவும் நீங்கி விடும். முகப்பரு வந்த தழும்புகளும் மறைந்து விடும் . இத்துடன் முதுமை தோற்றம் விரைவில் வராமல் தடுப்பதோடு சிலருக்கு இளம் வயதிலேயே முகச்சுருக்கங்கள் வந்திருக்கும் அது போன்ற பிரச்சனைகளும் சரியாகும்.

இதையும் படிக்கலாமே: உடல் முழுவதும் தங்கம் போல தகதகன்னு மின்ன தினமும் இதில் ஒரு ஸ்பூன் மட்டும் போட்டு தேய்த்து குளித்தால் போதும். அழகே பார்த்து பொறாமைப்படும் பேரழகியாக மாறி விடுவீர்கள்.

பப்பாளி பழத்திற்கு பொதுவாகவே நம்முடைய நிறத்தை அதிகரித்து தரக்கூடிய தன்மை உண்டு. அதை இப்படி தயாரித்து நாம் தினமும் பயன்படுத்தும் போது நிச்சயம் நம்முடைய நிறம் கூடி பார்க்க அழகான தோற்றத்தை பெறுவோம் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் இதை பயன்படுத்தி பாருங்கள்.

- Advertisement -