ஒரே நாளில் முகம் சிவப்பாக மாற

face beetroot
- Advertisement -

முகம் வெள்ளையாக மாற வேண்டும் என்று பலரும் பல வகையில் மெனக்கெடுக்கிறார்கள். இந்த வரிசையில் முதலிடத்தை பெறுவது அழகு நிலையங்கள் தான். அழகு நிலையம் சென்றால் அழகு தேவதையாக மாறி விடலாம் என்ற ஒரு கருத்து அனைவரிடத்திலும் நிலவுகிறது. அதற்கென அதிக செலவு செய்ய வேண்டும். இதை எல்லோராலும் செய்ய முடியாது அல்லவா?. அதைவிட நம் வீட்டில் சாதாரணமாக சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களை வைத்து கூட அழகு தேவதையாக வலம் வரலாம்.

அது என்ன பொருள் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையெல்லாம் இந்த அழகு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம். இதை விட இதில் முக்கியமான தகவல் என்னவென்றால் இதை பயன்படுத்திய ஒரு நாளிலே முகத்தில் நல்ல ஒரு மாற்றம் தெரியும் என்பது தான். இன்றைய அவசர காலத்திற்கேற்ற அற்புதமான பேஸ் பேக் என்றால் அது இது தான். வாங்க இப்போ அதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

ஒரே நாளில் முகம் சிவப்பாக மாற

இந்தப் பேக்கிற்கு முதலில் ஒரு பீட்ரூட்டை எடுத்து அதில் பாதி அளவை மட்டும் தோல் சீவி எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அந்த பீட்ரூட்டை காய் சீவும் சீவலின் துருவி எடுத்துக் கொள்ளலாம் அல்லது மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொண்டாலும் சரி. அதன் பிறகு பீட்ரூட்டை ஒரு வடிகட்டியில் சேர்த்து இதன் சாறை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து இந்த பீட்ரூட் சாறில் ஒரு டேபிள் ஸ்பூன் கடலை மாவு, ஒரு டேபிள் ஸ்பூன் அதிகம் புளிக்காத கெட்டியான தயிர் இவை மூன்றையும் ஒன்றாக கலந்தால் பேஸ்ட் பதத்திற்கு கிடைத்து விடும். ஒரு வேளை பீட்ரூட் ஜூஸ் அதிகமாக இருக்கிறது இந்த பேஸ்ட் தண்ணீராக இருக்கிறது என்றால் இன்னும் கொஞ்சம் கடலை மாவு தயிர் சேர்த்துக் கொள்ளலாம். இந்த பொருள்களுக்கு அளவு கிடையாது.

- Advertisement -

இந்தப் பேக்கை இரவு உறங்குவதற்கு முன்பு போடுவது நல்லது. அதற்கு முதலில் முகத்தை நன்றாக சுத்தம் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு ஈரம் இல்லாமல் டவல் வைத்து துடைத்த பிறகு, இந்த பேக்கை முகத்தில் போட்டு 15 நிமிடம் வரை அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு லேசான மசாஜ் செய்து சுத்தமான தண்ணீர் கொண்டு முகத்தை அலம்பி விடுங்கள். இந்த சமயத்தில் சோப்பு ஃபேஸ் வாசஸ் எதுவும் பயன்படுத்தக் கூடாது.

அதன் பிறகு நீங்கள் மாஸ்டரைசர் பயன்படுத்துவராக இருந்தால் அதை முகத்தில் அப்ளை செய்து விட்டு இரவு அப்படியே உறங்கி விடுங்கள். அது இல்லை என்றாலும் பரவாயில்லை இந்த பேக்கை உங்களுக்கு நல்ல முகப்பொலிவை தரும். மறுநாள் தூங்கி எழுந்தவுடன் உங்கள் முகத்தை பார்த்தால் உங்களுக்கே வித்தியாசம் நன்றாகத் தெரியும். முகம் அத்தனை நிறமாக மாறி பொலிவாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: நரை முடி கருப்பாகி அடர்த்தியாக வளர்வதற்கு உதவும் தேங்காய் எண்ணெய்.

இந்த பேக்கை ஒரு வாரம் தொடர்ந்து பயன்படுத்தும் போதே உங்கள் முகம் சிகப்பாக மாறி இருக்கும் அதிசயத்தை காணலாம். அது மட்டும் இன்றி திடீர் பங்க்ஷன் அல்லது ஏதேனும் வெளியில் கிளம்ப வேண்டும் என்றால் இந்த பேக்கை போட்ட பிறகு தயாராகுங்கள். பார்லர் சென்று வந்தால் கூட உங்கள் முகம் இத்தனை சிகப்பாக இருக்காது. அந்த அளவிற்கு முகம் பொலிவாக இருக்கும். எளிமையான இந்த பேக் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -