முகம் பளிச்சென்று மாற ஃபேஸ் பேக்

lady coffee face pack
- Advertisement -

முகம் பளிச்சென்று அழகாக மாற வேண்டும் என்றாலே உடனே நமக்கு ஞாபகத்திற்கு வருவது பியூட்டி பார்லர் தான். அடுத்தது கடைகளில் விற்கும் கெமிக்கல் கலந்த கிரீம்கள். இவை இரண்டையும் பயன்படுத்தியே நம்முடைய நிறத்தை அதிகப்படுத்தி அழகாக மாறலாம் என்ற ஒரு கருத்து நிலவி வருகிறது. இதில் பலவிதமான பக்க விளைவுகள் இருந்தாலும் பணவிரயமும் ஒரு பக்கம். அது மட்டும் இன்றி இது நிரந்தரமான தீர்வும் கிடையாது.

இந்த அழகு குறிப்பு பதிவில் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே மிக எளிமையான முறையில் முகத்தை பளிச்சென்று மாற்றுவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம். இதை தொடர்ந்து பயன்படுத்தும் போது முகம் நிரந்தரமாகவே கலராக மாறுவதுடன், நல்ல பொலிவாகவும் இருக்கும் இது எல்லோரும் செய்யக் கூடிய எளிமையான முறையும் கூட.

- Advertisement -

முகம் பளிச்சென்று மாற ஃபேஸ் பேக்

இதற்கு முதலில் ஒரு ஸ்கிரப் செய்ய வேண்டும். அதற்கு ஒரு பௌலில் ஒரு ஸ்பூன் காபித்தூள், எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் வெள்ளை சர்க்கரை ஒரு ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் இவை நான்கையும் ஒன்றாக கலந்து பேஸ்ட் போல குழைத்துக் கொள்ளுங்கள்.

இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் தேய்த்து இரண்டு நிமிடம் வரை ஸ்க்ரப் செய்து கொடுக்க வேண்டும். இதன் மூலம் முகத்தில் இருக்கும் தேவையற்ற இறந்த செல்கள் அனைத்தும் வெளியேறி, அடுத்து நாம் போடப்போகும் பேக் நேரடியாக நம் முகத்தினில் செல்ல வழி வகுக்கும் இதன் மூலம் உடனடியாக நம்முடைய நிறம் மாறும்.

- Advertisement -

இந்த முறையை செய்த பிறகு ஒரு காட்டன் துணி அல்லது டிஷ்யூ பேப்பர் வைத்து முகத்தை துடைத்து விடுங்கள். அப்படி இல்லை என்றால் சுத்தமான தண்ணீர் கொண்டு முகத்தை அலங்கிய பின்பு முகத்தை ஈரம் இல்லாமல் துடைத்து விடுங்கள். இப்போது முகத்திற்கான பேஸ் பேக் தயார் செய்து விடுவோம்.

அதற்கு ஒரு பௌலில் ஒரு ஸ்பூன் கடலை மாவு, ஒரு ஸ்பூன் அரிசி மாவு, ஒரு ஸ்பூன் காபித்தூள், தயிர் இரண்டு ஸ்பூன், தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன், லெமன் சாறு ஒரு ஸ்பூன், ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து குழைத்துக் கொள்ளுங்கள். இதுவும் நல்ல ஒரு பேஸ்ட் பதத்திற்கு வந்து விடும்.

- Advertisement -

இதை உங்கள் முகத்தில் தேய்த்து 20 நிமிடம் வரை அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு லேசாக தண்ணீர் தொட்டு மசாஜ் செய்த பின்பு முகத்தை அலம்பி விட்டு பாருங்கள் முகம் அத்தனை பளபளப்பாக மாறி இருக்கும். இந்த பேக்கை இரவு உறங்கும் போது போடுவது மிகவும் நல்ல பலனை கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: முடி கொட்டுவதை தடுத்து நிறுத்தும் குமட்டிக்காய் அழகு குறிப்பு

வாரத்தில் இரண்டு முறை மட்டும் இந்த பேக்கை பயன்படுத்தி வந்தால் போதும். உங்களின் நிறம் நிரந்தரமாகவே கலராக மாறி முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும். இதற்கென நீங்கள் கடைகளில் அதிக விலை கொடுத்து எந்த பொருளையும் வாங்க வேண்டியது இல்லை. நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து நாம் அழகாக மாறலாம். இந்த குறிப்பு உங்களுக்கும் பிடித்திருந்தால் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -