உளுந்தே இல்லாமல் மெது வடை செய்ய முடியுமா? அதுவும் 15 நிமிடத்தில்! அது எப்படி?

vadai1
- Advertisement -

மெதுவடை செய்ய வேண்டுமென்றால் உளுந்தை ஊறவைத்து, ஆட்டி, அதன் பின்பு வடை செய்ய வேண்டும். இவ்வளவு நேரம் எல்லாம் காத்திருக்க முடியாது. வெறும் 15 நிமிடத்திலிருந்து 20 நிமிடத்திற்குள் ஒரு மெதுவடை தயார் செய்ய வேண்டு மென்றால் என்ன செய்ய வேண்டும். இன்ஸ்டன்ட் மெது வடை ரெசிபி உங்களுக்காக! ரொம்ப ரொம்ப சுலபமான முறையில் இந்த வடையை சுட்டு எடுத்து விடலாம். சட்டுன்னு போய், சட்டுன்னு செய்யக்கூடிய மெதுவடை ரெசிபியை பார்த்திடலாம்.

vadai

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதில் பச்சரிசி மாவு – 1 கப் (250 கிராம்), மோர் – 1 கப், உப்பு – தேவையான அளவு, தண்ணீர் – 1 கப். எல்லா பொருட்களையும் அந்த பாத்திரத்தில் போட்டு கட்டியில்லாமல் முதலில் கரைத்துக் கொள்ளவேண்டும். அரிசி மாவு தண்ணீர் பதில் தான் இருக்கும்.

- Advertisement -

உங்களிடம் மோர் இல்லை என்றால், கெட்டித் தயிரில், தண்ணீர் ஊற்றி, கரைத்து எந்த கப்பில் பச்சரிசி மாவை அளந்து எடுத்தீர்களோ, அதே கப்பில் மோரையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதே கப்பில் தண்ணீரையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

vadai2

அடுத்தபடியாக அடுப்பில் ஒரு கடாயை வைத்து கரைத்து வைத்திருக்கும் அரிசி மாவு கலவையை அந்த கடாயில் ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறி விட வேண்டும். அரிசி மாவு என்பதால் கொஞ்சம் கட்டி பிடிக்க ஆரம்பிக்கும். கட்டி படாமல் கரண்டியை வைத்து நன்றாக கிளறி விடவேண்டும். 2 லிருந்து 3 நிமிடத்திற்குள் அரிசிமாவு கட்டிப்பதற்கு வரத்தொடங்கும். அதாவது மாவு வெந்துவிடும்.

- Advertisement -

இந்த மாவு ரோம்பவும் கட்டியாகி விடவும் கூடாது. ரொம்பவும் தளதளவெனவும் போய்விடக்கூடாது. கொழுக்கட்டை மாவை விட கொஞ்சம் தள தள பக்கத்தில் இருக்க வேண்டும். அவ்வளவு தான். உளுந்த மாவை வடைக்காக அரைத்தால் எப்படி அரைப்பீர்களோ, அதேபோல் பக்குவத்தில் இந்த மாவை கிளறி கொள்ளுங்கள். இந்த மாவை அடுப்பில் இருந்து இறக்குவதற்கு கொஞ்சம் முன்பாக பொடியாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சீரகம், மிளகு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை இவைகளை அந்த மாவோடு சேர்த்து ஒருமுறை கிளறி அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்து விடவும்.

vadai3

அடுப்பில் இருந்து இறக்கிய பின்பு, இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையையும், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தையும் போட்டு, நன்றாக கிளறி, மாவு கை பொறுக்கும் சூடு வரும் வரை காத்திருங்கள். அதன் பின்பு கையில் லேசாக எண்ணெயைத் தொட்டு, மாவை எடுத்து மெது வடை போல தட்டி  எண்ணெயில் விட வேண்டும்.

- Advertisement -

vadai4

எண்ணெய் நன்றாக சூடு ஆன பின்பு அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு, அதன் பின்பு வடையை போடுங்கள். வடை போட்ட உடனேயே கருதிவிடக்கூடாது. மிதமான தீயில் வேகும் போது தான் அரிசிமாவில் இருக்கும் உள் பக்கமும் வெந்து, வடை சுவையாக இருக்கும். மேலே பொன்னிறம் வந்தவுடன், வடை இலேசாக மிதக்க ஆரம்பிக்கும். அப்போது வடையை எடுத்து சுடச்சுட பரிமாறுங்கள். அரிசி மாவு மெதுவடை தயார். கொஞ்சம் தேங்காய் சட்னியோடு பரிமாறலாம்.  சுவையாக இருக்கும். முயற்சி செய்து பாருங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் மீண்டும் மீண்டும் செய்து சாப்பிடலாம்.

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டு சமையலறையில் சிறிய ஈக்கள், குட்டி குட்டி பறக்கும் பூச்சிகளின் தொல்லை அதிகமாக இருக்கிறதா? இத மட்டும் வச்சு பாருங்க அப்புறமும் ஒரு பூச்சி கூட உயிரோட தம்பிக்காது.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -