நல்ல வேலை, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம் இவை அனைத்தும் கிடைத்து பணம் பல வழிகளில் உங்களை தேடி வர ஒரே ஒரு தாமரை மலரை இப்படி செய்த பிறகு பீரோவில் வைத்து விடுங்கள்.

lakshmi lotus
- Advertisement -

இந்த உலகமே பணம் என்ற அந்த ஒற்றை காகிதத்தை சுற்றியே சுழன்று கொண்டிருக்கிறது. இந்த சூழலில் பணத்தை அதிகமாக சம்பாதிக்க இரவும் பகலும் அயராது பாடுபட தான் வேண்டும். அப்படி பாடுபட்டு உழைத்தாலும் கூட குறிப்பிட்ட அளவிற்கு மேல் நம்மால் பணத்தை சம்பாதிக்க முடியவில்லை. அப்படி சம்பாதித்தாலும் அதை தக்க முறையில் சேமித்து வைக்க முடிவதில்லை. இந்த சூழ்நிலை மாறி பணம் அதிக அளவு நம்மை தேடி வர ஒரு சில தாந்த்ரீக வழிமுறைகளை உள்ளது. அதில் ஒரு எளிமையான பரிகார முறையை பற்றி தான் இப்போது இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

பண வரவு அதிகரிக்க பரிகாரம்
இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி இந்த இரண்டு தினங்களில் மட்டும் தான் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை செய்யும் முன் காலையில் எழுந்து தலை ஸ்தானம் செய்த பிறகு தான் செய்ய வேண்டும். அதே போல் இந்த பரிகாரம் செய்யும் நாளில் அசைவத்தை தவிர்க்க வேண்டும். இந்த பரிகாரம் செய்வதற்கு நமக்கு ஒரு தாமரை மலர் இதற்கு எந்த தாமரை மலரை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அடுத்து பச்சை நிற துண்டு இதை முதல் நாளே வாங்கி வைத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செய்யும் நாளில் காலையில் எழுந்து குளித்து முடித்து தாமரை மலரை அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு கொண்டு சென்று அங்கிருக்கும் மகாலட்சுமி தாயாரின் பாதத்தில் வைத்து வணங்க வேண்டும். இந்த மலர் தாயாரின் உடலில் பட வேண்டும் அது போல வைத்து வணங்க வேண்டும். அதன் பிறகு அங்கேயே உங்கள் பெயருக்கு ஒரு அர்ச்சனை செய்து பிறகு இந்த தாமரை மலரை நீங்கள் வீட்டிற்கு கொண்டு வந்து விடுங்கள்.

அதன் பிறகு ஒரு பச்சை நிற துணியை துணியை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த துணியில் நீங்கள் கொண்டு வந்திருக்கும் தாமரை மலரை வைத்து மூட்டையாக கட்டி வீட்டில் மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக வைத்து தீபம் ஏற்றி வழிபட்ட பிறகு இதை நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். இதை பீரோவில் வைக்கலாம் அல்லது வியாபாரம் செய்யும் இடத்தில் வைக்கலாம். இப்படி நீங்கள் எங்கு பணம் வைத்து புழங்குவீர்களோ அந்த இடத்தில் இந்த மூட்டையை வைத்து விடுங்கள்.

- Advertisement -

ஒரு மாதம் வரை இது அப்படியே இருக்க வேண்டும். அதன் பிறகு இந்த தாமரை மலர் மூட்டையை பிரிக்காமல் கொண்டு நீர் நிலைகளில் விட்டு விட வேண்டும். மீண்டும் இதே போல ஒரு மலரை வாங்கி கோவிலில் வைத்து அர்ச்சனை செய்த பின்பு வீட்டில் வைத்து வணங்கி மறுபடியும் மூட்டை போல கட்டி வைத்து விடுங்கள். இதை மூன்று மாதம் வரை தொடர்ந்து செய்ய வேண்டும்.

இந்த பரிகாரத்தை நீங்கள் செய்ய ஆரம்பிக்கும் போது உங்களுக்கு பணவரவு அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும் என்றால் அது தானாக வராது. நீங்கள் வேலை செய்யும் இடத்தில் அதிக ஊதியம் பெறலாம். புதிதாக வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரம் செய்வார்களாக இருந்தால் தொழிலில் லாபம் அதிகரிக்கும். இப்படி உங்களுக்கு பண வரக்கூடிய வாய்ப்புகளை இந்த பரிகாரம் ஏற்படுத்திக் கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: தினமும் பெண்கள் இந்த மந்திரத்தை சொன்னால் குடும்பத்தில் பணக்கஷ்டம் இருக்காது. குடும்பம் செல்வ செழிப்போடு ஓஹோ என வாழ்வாங்கு வாழும்.

இந்த பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இதை செய்து உங்கள் வருமானத்திற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்ற இந்த தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -