தினமும் இறைவனை வணங்கினாலும் பிரச்சனை தீரவில்லையா? இதை ஒருமுறை செய்து பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

Manjal pillayar
- Advertisement -

சில நேரங்களில் நாம் என்னதான் வேண்டி வேண்டி இறைவனை வணங்கினாலும் நமது வீட்டில் எப்போதும் உள்ள துன்பம் தொல்லைகள் எல்லாம் தொடர்ந்து இருந்துகொண்டே தான் இருக்கும். இறைவனே கதி என்று நாம் இருந்தாலும் நமக்கு ஏன் இந்த நிலை என்று பலரும் எண்ணுவதுண்டு. அதற்க்கு மிக முக்கிய காரணமாக இருப்பது நம் வீட்டில் நாம் செய்யும் சிறு சிறு தவறுகள் தான். நாம் என்னவெல்லாம் செய்தால் நமது பிரச்சனைகள் தீர்ந்து சந்தோசமாக வாழலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

pachai-amman

முதலாவதாக, நமது பூஜை அறையில் எத்தனையோ படங்கள் இருந்தாலும், வாரம் ஒருமுறை நமது கையாலேயே மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, அந்த பிள்ளையாருக்கு தீப தூபம் காட்டி, நம்மால் முடிந்த நிவேதியம் வைத்து வழிபட்டு வந்தால் துன்பங்களில் இருந்து விடுபட விரைவில் வழி பிறக்கும்.

- Advertisement -

அடுத்ததாக, பிறர் உடுத்திய துணிமணிகளை நாம் நிச்சயம் நம் வீட்டிற்கு கொண்டு வந்து உடுத்திக்கொள்ள கூடாது. சில குடும்பத்தில் அக்கா, தங்கை என இருவரும் திருமணம் ஆகி வெவ்வேறு வீடுகளில் வசிப்பார்கள். திருமணத்திற்கு முன்பு வரை இருவரும் ஆடைகளை மாற்றி மாற்றி உடுத்திக்கொள்வார்கள். திருமணமான பின்பும் அதே பழக்கத்தை தொடர்வார்கள். ஆனால் நிச்சயம் அப்படி இருக்க கூடாது. திருமணம் ஆனாலே இருவரும் வெவ்வேறு குடும்பத்தை சேர்ந்தவர்களாக ஆகி விடுகிறார்கள். திருமணமான ஒரு அக்கா தனது ஆடையை தன் தங்கைக்கு கொடுக்கும்போது அந்த ஆடையோடு சில நன்மை தீமைகளும் கலந்து வரும். அதை நாம் உடுத்தும்போது நமக்கு சில நேரங்களில் அதனால் பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உண்டு. ஆகையால் பிறர் உடுத்திய ஆடைகளை உடுத்தாமல் இருப்பது நல்லது.

silk-saree

அடுத்ததாக, நமது மூதாதையர்களின் சாபத்தை பெரும் வகையில் நமது வீட்டில் எந்த ஒரு செயலையும் செய்ய கூடாது. உதாரணமாக ஒரு அப்பா தன் மகனிடம் இந்த குறிப்பிட்ட பொருளை பத்திரமாக வைத்துக்கொள் இதை என் அப்பா எனக்கு கொடுத்தார் என்று கூறி கொடுத்த பொருளை, அந்த மகன் அப்பாவின் மறைவிற்கு பிறகும் அதை பாதுகாக்க வேண்டும். அப்படி பாதுகாக்க மறந்தால் மூதாதையரின் சாபம் சில நேரங்களில் வர வாய்ப்புகள் உண்டு.

- Advertisement -

அடுத்ததாக, வீட்டில் அமைதியான சூழலில் இருக்கும் சமயத்தில் முடிந்த வரை “ஓம்” எனும் பிரணவ மந்திரத்தை ஒலிக்க செய்யுங்கள். வீட்டில் கலகலவென்று பேசிக்கொண்டிருக்கும் சமயத்தில் எல்லாம் இதை ஒலிக்க செய்துகொண்டு இருக்க கூடாது. அதே போல நாம் தூங்கும்போதோ அல்லது பிற வேலைகள் செய்துகொண்டிருக்கும்போதோ இதை ஒலிக்க செய்ய கூடாது. இந்த மந்திரம் ஒலிக்கும் நேரத்தில் அமைதியும் சாந்தமும் குடிகொண்டிருக்க வேண்டும். இப்படி இந்த மந்திரத்தை ஒலிக்க செய்வதன் மூலம் குலதெய்வ அருள் கிடைக்கும். வீட்டில் ஏதேனும் எதிர் மறை ஆற்றல் இருந்தால் விலகும்.

om

மேலே கூறிய குறிப்புகளை முறையாக பின்பற்றி வாருங்கள். நிச்சயம் நல்ல பலன்களை நீங்கள் விரைவில் அடைவீர்கள். இறை அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

- Advertisement -