வீட்டின் இறை சக்தியை அதிகரிக்க

varahi amman dhevatharu kattai
- Advertisement -

நாம் செய்யும் ஒவ்வொரு வழிபாடுகளின் மூலமும் தெய்வம் நம் வீட்டில் நிரந்தரமாக தங்கும் என்பது ஐதீகம். ஒவ்வொருவரும் அனுதினமும் வீட்டில் பூஜை செய்வதும் விரதங்கள் அனுஷ்டிப்பதும் தெய்வம் நம்முடன் இருந்து நம்மை என்றும் காக்க வேண்டும் என்று தான். இந்த வழிபாடுகளின் மூலம் தெய்வம் நம் வீட்டில் நிரந்தரமாக தங்கி விட்டால் போதும் நம் வாழ்க்கை பிரகாசமாக மாறி விடும்.

அப்படி பூஜை செய்வதன் மூலம் கிடைக்கும் பலனுடன் இந்த ஒரு பொருள் உங்கள் பூஜை அறையில் இருந்தால் இறை சக்தி முழுவதுமாக பெறலாம் என்று சொல்லப்படுகிறது அது என்ன பொருள் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இறை சக்தி அதிகரிக்க பூஜையறையில் வைக்க வேண்டிய பொருள்

ஒரு வீட்டின் முக்கியமான இடம் என்றால் முதலாவதாக பூஜை அறையை சொல்லலாம். ஏனெனில் இது தான் நாம் இறைவனின் சரணாகதி அடையும் இடம். எல்லோராலும் தினமும் கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட முடியாது ஆகையால் தான் ஒவ்வொருவரும் வீட்டில் பூஜைக்கென தனியாக ஒரு இடத்தை ஒதுக்கி இறைவனை வணங்குகிறோம்.

அப்படி வணங்கும் வேளையில் நாம் தெய்வத்திற்குகென செய்யும் ஒவ்வொரு காரியமும் முக்கியத்துவம் வாய்ந்தது தான். தெய்வத்தை நினைத்து நாம் ஏற்றக் கூடிய ஒரு தீபம் கூட இறையருளை பெறக் கூடியது தான். ஒரு சிலர் இல்லங்களில் எத்தனை பூஜை புனஸ்காரங்கள் செய்தாலும் இறை சக்தியானது அங்கு இருக்காது. அந்த வீட்டில் எப்பொழுதும் எதிர்மறை எண்ணங்களும் யாரேனும் ஒருவருக்கு உடல் நலக் கோளாறும் தொழில் நஷ்டம் இப்படியானவை ஏற்படும்.

- Advertisement -

இதற்கு கிரக கோளாறு கண் திருஷ்டி என எத்தனை சொன்னாலும் கூட தெய்வத்தின் அனுகிரகம் இருந்தால் இவற்றில் இருந்து எல்லாம் நிச்சயம் நம்மை காத்துக் கொள்ளலாம். ஏன் இவையெல்லாம் நெருங்காமலே நம்மை தெய்வம் காத்து விடும். அப்படியான தெய்வம் நம்மை நெருங்காமல் இருக்கவும் சில தடைகள் நம் வாழ்க்கையில் இருக்க தானே செய்கிறது.

அவற்றை எல்லாம் தகர்த்தெரிக்க கூடிய பொருள் தான் தேவதாரு கட்டை. இந்த பொருளுக்கு இறையருளை பெற்று தரக் கூடிய சக்தி அதிகம் உண்டு. எப்படி கருங்காலி கட்டை நம் இல்லத்தில் இருக்கும் போது இறையருள் அதில் வீற்றிருக்குமோ, அதே போல இந்த தேவதாரு கட்டை இருக்கும் போது இறையருளை ஈர்த்து நமக்கு தரும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

அதுவும் நாளைய தினம் வளர்பிறை அஷ்டமி இந்த தினம் பைரவருக்கு உரியதாக சொல்லப்பட்டாலும் வாராகி அம்மன் வழிபாட்டிற்கும் இந்த நாள் உரியது. இந்த நாளில் வாராகி அம்மனை நினைத்து இந்த தேவதாரு கட்டையில் வாங்கி வைக்க வேண்டும். ஏன் வாராகி அம்மனை நினைக்க வேண்டும் என்ற கேள்வி எழலாம். ஒருவருக்கு ஆபத்து வரும் வேளையில் உடனே வந்து நிற்கக் கூடிய காவல் தெய்வம் வராகி அம்மன்.

அதே போல் இந்த அஷ்டமி நாளில் பைரவரை அஷ்ட லட்சுமிகளும் சரணடைவார்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. நாளை வியாழக்கிழமை வந்திருக்கக் கூடிய அஷ்டமி குபேர அஷ்டமி என்றும் சொல்வார்கள். நாளை இத்தனை சிறப்பு அம்சங்கள் சூழ்ந்து இருக்கக்கூடிய இந்த நாளில் இந்த தேவதாரு கட்டை உங்கள் வீட்டிற்குள் வந்து விட்டால் போதும். அத்தனை தெய்வங்களும் உங்கள் பூஜை அறையில் வந்து குடியேறி விடும்.

இதையும் படிக்கலாமே: சிக்கல்கள் நீங்க விநாயகர் வழிபாடு

இந்த வழிபாட்டு முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் வாராகி அம்மனின் மனதில் நினைத்து இந்த ஒரு தேவதாரு கட்டை நாளை உங்கள் இல்லத்தில் கொண்டு வந்து வைத்து விடுங்கள்.

- Advertisement -