இறைவனின் காதுகளுக்கே நேரடியாக உங்களுடைய வேண்டுதல் கேட்கும். இந்த இலையிடம் உங்களுடைய வேண்டுதலை ஒரு முறை சொல்லித்தான் பாருங்களேன்.

pray
- Advertisement -

என்னுடைய வேண்டுதல் அந்த  இறைவனின் செவிகளில் எப்போதுதான் விழும். என்னுடைய கஷ்டங்கள் எப்போதுதான் தீரும். என் வேண்டுதலுக்கு அந்த இறைவன் எப்போது தான் செவி சாய்ப்பான். என்று நிச்சயமாக நம்மில் எல்லோரும் புலம்பி இருப்போம். அந்த இறைவனுக்கு காது இருக்கிறதா? இல்லையா? என்று கூட ஒரு படி மேலே திட்டி இருப்பவர்கள் நிச்சயமாக உண்டு. இறைவனிடம் இதுவரைக்கும் நீங்க வேண்டிய வேண்டுதல் எதுவுமே படித்ததில்லையா. ஒரு முறை, இந்த முறை படி இறைவனிடம் உங்களுடைய கோரிக்கைகளை வைத்து பாருங்கள். நிச்சயமாக உங்களுடைய வேண்டுதலுக்கு அந்த இறைவன் செவி சாய்ப்பார். அதுவும் கூடிய சீக்கிரத்திலேயே.

vinayagar-pray

பொதுவாகவே இயற்கையாக நம் பூமியில் விளையக்கூடிய மூலிகை பொருட்களுக்கு இறை சக்தி அதிகம் உண்டு. அந்த வரிசையில், இறைவனுக்கே தூது செல்லக் கூடிய சக்தி வாய்ந்த தூதுவளைக் கீரையை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதிகாசங்களில் புராணக்கதைகளில் இந்த தூதுவளையை வைத்து தெய்வத்திற்கே தூது சொன்ன கதைகள் நிறைய உள்ளது. இதனடிப்படையில் சொல்லப்பட்டுள்ள ஒரு சிறிய பரிகார முறை உங்களுக்காக.

- Advertisement -

தூதுவளைக் கீரைக்கு, இறைவனுக்கு தூது செல்லக்கூடிய சக்தி உண்டு என்று சொல்லப்பட்டுள்ளது. தினமும் காலையில் எழுந்ததும் குளித்து விட வேண்டும். பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு, அந்த தீபத்திற்க்கு அருகில் ஒரு தூதுவளைக் கீரையை வைத்து விடுங்கள். பூஜை அறையில் நீங்களும் அமர்ந்து கொள்ளுங்கள். தூதுவளைக் கீரையை உங்களுடைய கையில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

thuthuvalai

உங்களுக்கு இருக்கக்கூடிய நிறைவேறாத வேண்டுதல் ஆசை, கனவு தேவை எது இருந்தாலும், உங்களுடைய கைகளில் தூதுவளை இலையை வைத்துக் கொண்டு உங்களுடைய வேண்டுதலை அந்த இறைவனிடம் தினமும் சொல்லி வர வேண்டும். வேண்டுதலை முடித்துவிட்டு உங்கள் கையில் இருக்கும் தூதுவளைக் கீரையை இறைவனின் பாதங்களில் வைத்து விடுங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் எந்த திருவுருவப் படத்தின் பாதத்தில் வைத்தாலும் சரி தான். உங்களுடைய இஷ்ட தெய்வம் குல தெய்வம் இப்படி உங்களுக்கு விருப்பமான தெய்வத்திடம் இந்த தூதுவளை கீரையிடம், உங்கள் செய்தியை வேண்டுதலாக சொல்லி அனுப்புங்கள்.

- Advertisement -

இப்படி தினம் தோறும் உங்கள் பூஜையறையில் இந்த தூதுவளைக் கீரையை வைத்து இறைவனிடம் வேண்டுதல் வைத்து கொண்டே வரவேண்டும். தொடர்ந்து இத்தனை நாட்கள்தான், அத்தனை நாட்கள் என்ற கணக்கு வைத்துக் கொள்ளாதீர்கள். உங்களுடைய வேண்டுதல்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும் வரை இறைவனின் பாதங்களில் பற்றிக்கொள்ளுங்கள். குறைந்தது 48 நாட்களுக்குள் உங்களுடைய ஆசை நிறைவேறுவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. நாற்பத்தி எட்டு நாட்களும் ஒரே கோரிக்கையை வைக்க வேண்டும்.

தினமும் ஒரு புதிய கீரையை தான் நீங்கள் இந்த பூஜைக்கு பயன் படுத்த வேண்டும். முதல் நாள் பூஜை செய்து இறைவனின் பாதங்களில் வைத்த இலையை மறுநாள் பூஜை தொடங்குவதற்கு முன்பு எடுத்து கால் படாத இடங்களில் போட்டு விட வேண்டும்.

thuthuvalai

வேண்டுதல் நிறைவேற ஆசைகள் நிறைவேற எவ்வளவோ கஷ்டப்பட்டு இருக்கின்றோம். ஒரே ஒரு தூதுவளைக் கீரை தானே. இந்த முறையை ஒரு முறை முயற்சி செய்து தான் பாருங்களேன். நடக்காத காரியம் நடந்து விட்டால் எத்தனை சந்தோஷம். நம்பிக்கையோடு முயற்சி செய்பவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -