இறந்தவர்கள் உங்கள் கனவில் வருவதற்கு இது கூட ஒரு காரணம் தான். இந்தக் காரணத்தை தவறாமல் நீங்களும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

sleep
- Advertisement -

நிறைய பேருக்கு, இறந்தவர்கள் கனவில் வந்தால் கண்விழித்ததும் பயந்து விடுவார்கள். இறந்து போனவர்கள் கனவில் வந்ததற்கு என்ன காரணமாக இருக்கும். இறந்தவர்கள் ஆத்மா சாந்தி அடைய வில்லையா? இறந்து போனவர்கள் மனக்குறையோடு இறந்து விட்டார்களா, அல்லது இறந்து போன அந்த ஆத்மா நம்மிடம் எதையாவது சொல்ல வருகின்றதா? நமக்கு இது நன்மை தரக் கூடியதா, தீமைகள் தரக்கூடியதா, என்ற குழப்பம் நமக்கு உடனே வந்துவிடுகின்றது.

Dream

இறந்து போனவர்கள் கனவில் வருவதற்கு எத்தனையோ காரணங்கள் சொல்லப்பட்டாலும் இன்று நாம் தெரிந்து கொள்ளக்கூடிய காரணம் மிக மிக முக்கியமானது. அது என்ன காரணம் என்பதைப் பற்றியும், இறந்தவர்கள் நம்முடைய கனவில் வராமல் இருக்க என்ன செய்யலாம் என்பதை பற்றியும் தான் இன்று நாம் சில விஷயங்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

முதலில் இறந்து போனவர்கள் உங்களுடைய கனவில் வருவதற்கு காரணம், அந்த இறந்தவர்களின் ஆத்மாவில் மனக்குறை இருப்பதனால் மட்டுமல்ல. உங்களுடைய மனதில் ஏதேனும் மன சஞ்சலம் இருந்தால் கூட, அந்த குறிப்பிட்ட நபர் உங்களுடைய கனவில் வருவார்கள். தெளிவாக சொல்லப் போனால் உங்களுடைய அம்மாவோ அப்பாவோ யாரோ தவறிவிட்டார்கள்.

Dream

அவர்கள் தவறிய பின்பு, நீங்கள் சில விஷயங்களை சிந்திக்கலாம். உயிருடன் இருக்கும்போதே நம்முடைய தாய் தந்தையரை,  சரியாக பார்த்துக் கொண்டிருக்கலாம். அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நாம் சரியாக செய்யாமல் விட்டுவிட்டோமே, இப்படி உங்களுடைய மனதில் இறந்தவர்களை நினைத்து ஏதேனும் நீங்கள் குறை பட்டுக் கொண்டிருந்தாலும் இறந்தவர்கள் உங்களுடைய கனவில் வருவார்கள்.

- Advertisement -

இருந்தவர்கள் உங்களுடைய கனவில் வருவதற்கு இறந்து போன ஆத்மாக்கள் என்றுமே காரணம் கிடையாது. இறந்தவர்கள் உங்களுடைய கனவில் வருவதற்கு உங்களுடைய மனதும் ஒரு காரணம் தான். சில பேர் சொல்லுவார்கள் இறந்து போன ஆத்மாக்கள் சாந்தி அடைய வில்லை என்றாலும், அவர்களுக்கு செய்யக்கூடிய சடங்குகளை சரியான முறையில் செய்ய வில்லை என்றாலும் அந்த ஆத்மா நம்மை சுற்றி வரும் என்று. இது பெரும்பாலும் எல்லோருக்கும் நடந்துவிடாது. அதாவது லட்சத்தில் ஓரிரு ஆத்மாக்களுக்கு தான் இப்படிப்பட்ட பிரச்சினைகள் வரும் என்பது சில சாஸ்திர குறிப்புகள் சொல்லப்பட்டுள்ளது.

sleep1

சரி, கனவில் இறந்தவர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். இறந்தவர்களை நினைத்து உங்களுக்கு ஏதோ ஒரு மனக்குறை உள்ளது. அதை எப்படி சரி செய்வது? உங்களுடைய மனது திருப்தி அடையும் வகையில் ஆத்மார்த்தமாக தை அமாவாசை, மஹாலய அமாவாசை, இறந்தவர்களுடைய திதி வரக்கூடிய சமயம் இப்படி முன்னோர்களுக்கு உரியதான தினங்கள் வரும் சமயத்தில், சாஸ்திரப்படி அவர்களுக்கு கொடுக்க வேண்டிய திதி தர்ப்பணங்களை முறையோடு செய்து விடுங்கள்‌.

tharpanam

முடிந்தவரை உயிரோடு இருக்கும் முதியவர்களுக்கு உதவி செய்து வரும் பட்சத்தில் உங்களுடைய மனது திருப்தி அடைந்து விடும். மனது திருப்தி அடைந்து விட்டாலே, இறந்தவர்கள் கனவில் வருவது குறைந்து விடும். இறந்தவர்கள் கனவில் வருவதை நினைத்து இனி யாரும் பயப்பட தேவையில்லை என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -