இரவு தூங்கும் போது ரொம்ப கெட்ட கனவா வருதா? இந்த 2 இலைகளை தலையணை அடியில் வைத்து தூங்குங்க. தெய்வங்கள் உங்களோடு துணை இருக்கும்.

sleep
- Advertisement -

இரவில் படுத்து தூங்கினால், நல்ல தூக்கம் வருவதே கஷ்டம். அப்படியே கஷ்டப்பட்டு தூங்கினாலும், கெட்ட கனவுகள் வந்து தூக்கத்தை கெடுத்து விடுகிறது. ஆழ்ந்த தூக்கத்தை அனுபவித்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. நல்ல தூக்கம் எப்படி இருக்கும் என்ற சுகமே மறந்து போய் விட்டது என்பவர்களுக்கு தீர்வை தரக்கூடிய பரிகாரம்தான் இது. ஒருவருக்கு இரவில் தூக்கம் வரவில்லை என்றால் அதற்கு முதல் காரணம் மன அழுத்தம். மனதில் நிறைய விஷயங்களை போட்டு குழப்பிக் கொண்டே தூங்கச் சென்றால் நிச்சயமாக இரவு நிம்மதியாக தூங்க முடியாது. விடியும் போது எல்லா பிரச்சனைகளும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையோடு தூங்கச் சொல்லுங்கள். சில பேர் தங்களுடைய வேலையை சரியாக செய்யவில்லை என்றாலும் இரவு நிம்மதியாக தூங்க மாட்டார்கள்.

வயதானவர்களுக்கு உடல் உபாதைகள் மூலமாக தூக்கம் வராமல் போகும். உங்களுக்கு தூக்கம் வராமல் இருக்க எந்த காரணமாக இருந்தாலும் சரி, அதை சரி செய்ய பின் சொல்லக்கூடிய பரிகாரங்களில் உங்களுக்கு எது சரியாக படுகின்றதோ, உங்களுக்கு எது ஏற்றவாறு இருக்கின்றதோ அதை நீங்கள் பின்பற்றுங்கள். நிச்சயமாக இரவு நல்ல தூக்கம் வரும்.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் ஏதோ ஒன்று சரியில்லை. நிம்மதியான தூக்கத்தை வர விட மாட்டேங்குது. கெட்ட கனவு வருகிறது என்றால் முதலில் நீங்கள் உங்களுடைய வீட்டை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும். மழை பெய்யும் போது கொஞ்சமாக மழை தண்ணீரை பிடித்துக் கொள்ளுங்கள். அதில் கல்லுப்பை போட்டு கரைத்து அந்த தண்ணீரை வீட்டின் மூளை முடுக்குகளில் தெளித்து விடுங்கள். கூடுமானவரை கெட்ட கனவு வருகிறது என்றால் நீங்கள் வடக்கு நோக்கி தலை வைத்து படுக்காதீங்க. கிழக்கு பக்கம் தலை வைத்து படுத்துக்கொள்ளுங்கள்.

சாம்பிராணி தூபம் வீடு முழுக்க போட வேண்டும். வீட்டின் மூளை முடுக்குகளில் கோமியம் தெளிக்கலாம். நீங்கள் இரவு தூங்கும் போது உங்களுடைய தலையணைக்கு அடியில் வேப்ப இலை, புளிய மரத்து இலை இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஒரு மஞ்சள் துணியில் கட்டி வைத்துக் கொள்ளலாம். நீங்கள் பெட்டில் படுத்தால் கூட பரவாயில்லை. தலையணைக்கு அடியில் இந்த இரண்டு இலைகளையும் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வாரத்திற்கு ஒரு முறை உள்ளே இருக்கும் இலைகளை மாற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

மேல் சொன்ன குறிப்புகளைப் பின்பற்றி வரும்போது கெட்ட சக்திகள் உங்கள் வீட்டில் இருந்தால் கூட, அது உங்கள் வீட்டை விட்டு ஓடிவிடும். நிம்மதியான தூக்கம் உங்கள் கண்களைத் தழுவும். கெட்ட கனவு வருவது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விடும்.

உடல் உபாதைகள் கொண்டவர்களால் நிச்சயமாக இரவு நன்றாக தூங்க முடியாது. இவர்கள் ஒரு நல்ல மருத்துவரை காண வேண்டும். எவ்வளவுதான் உடல்நிலை சரியில்லை என்றாலும் படுக்கையிலேயே பகல் முழுவதும் படுத்து கிடக்காமல், உங்களால் முடிந்தவரை படுக்கையை விட்டு எழுந்து கொஞ்ச தூரம் வீட்டுக்குள்ளேயே நடக்க வேண்டும். இரவு தூங்குவதற்கு முன்பு உங்களுடைய இரண்டு கால்களையும் சிறிது நேரம் வெதுவெதுப்பான தண்ணீரில் வைத்து விட்டு அதன் பின்பு தூங்கச் செல்லுங்கள்.

இதையும் படிக்கலாமே: மணி பர்ஸில் தப்பி தவறி கூட இந்த 1 பொருளை வைக்காதீங்க. குறிப்பா ஆண்கள் இந்த தவறை செய்வீங்க. பணம் சேருவதற்கு சூட்சமமான ஒரு ரகசிய குறிப்பும் இதோ உங்களுக்காக.

தூங்க செல்வதற்கு முன்பு ஹனுமனை மனதார நினைத்துக் கொள்ளுங்கள். தூங்க செல்வதற்கு முன்பு 5 நிமிடம் ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஸ்ரீ ராம் என்ற மந்திரத்தை உச்சரித்து விட்டு தூங்கச் செல்வது நன்மையை தரும். ரொம்பவும் மனக்குழப்பமாக இருக்கின்ற நேரத்தில் உங்களுக்கு பிடித்த பாடலை குறைவான சத்தத்தோடு, படுக்கும் அறையில் ஒளிக்க விடுங்கள். உங்களுடைய மனதில் லேசாகும். நிச்சயம் நல்ல தூக்கம் வரும். மேல் சொன்ன பரிகாரங்களில் உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயமாக உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்ற கருத்துடன் இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -