மணி பர்ஸில் தப்பி தவறி கூட இந்த 1 பொருளை வைக்காதீங்க. குறிப்பா ஆண்கள் இந்த தவறை செய்வீங்க. பணம் சேருவதற்கு சூட்சமமான ஒரு ரகசிய குறிப்பும் இதோ உங்களுக்காக.

purse-money
- Advertisement -

நாம் பணம் வைக்கும் இடத்திலோ, பணம் வைக்கும் மணி பர்ஸிலோ, பணம் வைக்கும் டப்பாவிலோ, கட்டாயமாக இந்த ஒரு பொருளை வைக்கவே கூடாது. அது எந்த பொருள், அதிலும் ஆண்கள் அதை அதிகமாக பயன்படுத்துவார்களா? அப்படி என்ன அந்த பொருளாக இருக்கும், என்று நிச்சயமாக உங்கள் மனதிற்குள் ஒரு கேள்வி எழும். அதற்கு உண்டான பதிலையும், இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இதோடு சேர்த்து பணம் சேருவதற்கு ஒரு சூட்சமமான முறை உள்ளது. இதை செய்தால் நிச்சயம் உங்களுடைய கையில் வருமானம் அதிகரிக்கும். சேமிப்பு உயரம். அது என்ன சூட்சம முறை. இந்த இரண்டு கேள்விகளுக்கும் சேர்த்து பதிலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.

வெட்டக்கூடிய எந்த ஒரு பொருளையும் பணம் வைக்கும் இடத்தில் வைக்க கூடாது. குறிப்பாக ஆண்கள் சின்ன கத்தரிக்கோல், மடக்கி வைத்திருப்பார்கள் அல்லவா. அதை விரித்தால் கத்திரிக்கோல் போல மாறும். அந்த மாதிரி ஒரு கத்திரிக்கோலை வைத்திருப்பார்கள். சில பேர் சின்ன பாக்கெட் கத்தி என்று சொல்லுவார்கள் அல்லவா. அதை பரிசில் வைத்திருப்பார்கள். சில பேர் பிளேடு வைத்திருப்பார்கள். அவசரத்திற்கு உதவும் என்பதற்காக, இப்படி கூர்மையான அருக்கக் கூடிய, வெட்டக்கூடிய பொருட்களை பணம் வைக்கும் பஸர்ஸில் வைக்கவே கூடாது.

- Advertisement -

வீட்டில் பணம் வைக்கும் பீரோவில், பெண்கள் காசு சேர்த்து வைத்து இருக்கும் டப்பாவில், பர்ஸில் கூட இந்த மாதிரி ஷார்ப்பான பொருளை வைக்கவே கூடாது என்று ஒரு கருத்து உண்டு. ஆகவே இனிமே இப்படிப்பட்ட தவறை நீங்கள் செய்யாதீங்க. ஏற்கனவே இந்த பொருளை பணம் வைக்கும் இடத்தில் வைத்திருந்தாலும் பர்ஸில் வைத்திருந்தாலும் இனி அதை எடுத்து வேறு ஒரு இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

சரி, இப்படி வைத்தால் அந்த எதிர்மறை வைப்ரேஷன் அந்த இடத்தில் இருக்க தானே செய்யும். அதை நீக்குவதற்கு என்ன செய்வது. அந்த இடத்தில் பச்சை கற்பூரத்தை வைக்கலாம். பெருமாள் கோவிலில் இருந்து வாங்கி வந்த துளசியை வைக்கலாம். பணம் சேருவதற்கு உண்டான வாசனை நிறைந்த மல்லிகைப்பூ, கிராம்பு, பட்டை இப்படிப்பட்ட பொருட்களை அந்த இடத்தில் நீங்கள் வைக்கும் போது அந்த பேட் வைப்ரேஷன் நீங்கிவிடும். கவலைப்படாதீங்க.

- Advertisement -

அடுத்து நீங்கள் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, உங்களுடைய பர்ஸில் கிரெடிட் கார்டு டெபிட் கார்ட் என்னென்ன கார்டு இருந்தாலும் சரி, கட்டாயமாக ரூபாய் நோட்டு சில்லறை காசு என்று சிறிதளவு இருக்க வேண்டும். ஒரு நாள் முடியும்போது இரவு தூங்க செல்வதற்கு முன்பு என்று கூட வைத்துக் கொள்ளுங்கள். அன்றைய தினம் நீங்கள் என்ன செலவு செய்தீர்கள் என்பதை ஒரு டைரியில் தினமும் குறித்து வரவேண்டும். கார்ட், கேஷ் எதில் செலவு செய்து இருந்தாலும் சரி அல்லது பணமாக செலவு செய்திருந்தாலும் சரி, நீங்கள் செலவு செய்யக்கூடிய கணக்கை ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி வர வேண்டும். இப்படி செய்தால் உங்களுடைய செலவு பல மடங்கு குறைந்து, வரவு பல மடங்கு அதிகரித்து, சேமிப்பு பல மடங்காக உயரும்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் நீங்கள் செய்யும் இந்த ஒரு தவறு மன்னிக்க முடியாத தவறாக சாஸ்திரம் கூறுகிறது! இந்த தவறை செஞ்சா தரித்திரம் தாண்டவம் ஆடுமாம் தெரியுமா?

கணக்கு எழுதுனா கணக்கு இல்லாம பணம் சேருமா என்ன. என்ற சந்தேகம் உங்களுக்குள் வர வேண்டாம். இதை மட்டும் நீங்கள் பின்பற்றிப் பாருங்கள் நிச்சயமாக உங்களுடைய வாழ்க்கையில் எதிர்பாராத நல்லதொரு மாற்றம் நடக்கும். மேல் சொன்ன குறிப்புகளில் நம்பிக்கை இருந்தால் முயற்சி செய்து பாருங்கள் நல்லது நடக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் குறிப்பை பின்பற்றி பலன் ஸபெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -