பொன் பொருள் பதவி அந்தஸ்து என எதை நீங்கள் இழந்திருந்தாலும் அனைத்தையும் மீண்டும் திரும்ப பெற்று அரசனைப் போல வாழ இந்த அரச மர பரிகாரத்தை செய்தால் போதும்.

lingam arasa ilai
- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு பொருளையும் சம்பாதிப்பது எவ்வளவு கடினம் என்பது அனைவருக்கும் தெரிந்து தான். அப்படி சம்பாதித்த அனைத்தும் நம் கையை விட்டு போனால் அதை விட துயரமான ஒன்று இருக்கவே முடியாது. அதிலும் இந்த பதவி, அந்தஸ்து போன்றவற்றுடன் ஆடம்பரமாக வாழ்ந்தவர்கள் அவையெல்லாம் இழந்து வாழும் வாழ்க்கையை நரக வாழ்க்கை என்றே சொல்லலாம்.

இது போல வாழ்க்கையில் தான் சம்பாதித்த அனைத்தையுமே இழந்து அடுத்து என்ன தான் செய்யப் போகிறோம் என்று திக்கு தெரியாமல் திணறுபவர்கள், தங்களின் வாழ்க்கை பழையபடி ஒளிமயமானதாக மாற்றிக் கொள்ள இந்த அரச மர பரிகாரம் பெரிதும் உதவி செய்யும் என்று சொல்லப்படுகிறது. இந்த பரிகாரத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இழந்தவை எல்லாம் திரும்ப பெற பரிகாரம்
இந்த பரிகாரத்தை செய்ய நாள் கிழமை எதுவும் கிடையாது. எல்லா நாளிலும் செய்யலாம் அதுவும் இன்றி இது மிக மிக எளிமையான பரிகாரம் என்றே சொல்லலாம். இதற்கு நாம் பெரிதாக வேறு ஒன்றும் செய்யப் போவது கிடையாது. அரச மர கன்றை வாங்கி நட்டு வளர்க்க வேண்டும். இவ்வளவு தான் இந்த பரிகாரம்.

உங்கள் வீட்டில் இடமிருந்தால் ஒரு அரச மரக்கன்றை உங்களின் ஜென்ம நட்சத்திர நாளில் வாங்கி அதை நட்டு நல்ல முறையில் வளர்த்து வாருங்கள். இடம் இல்லாதவர்கள் ஏதேனும் ஒரு சிவாலயத்தில் இந்த அரச மரக்கன்று வைத்து அது நன்றாக வளரும் வரை தினமும் தண்ணீர் ஊற்றி வளர்த்து பராமரிக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதை தொடர்ந்து செய்து வரும் போது அரசமரம் எப்படி துளிர்த்து வளர்கிறதோ அது போல உங்களுடைய வாடிய வாழ்க்கையும் துளிர்த்து நல்ல முறையில் மாறும்.

- Advertisement -

அரச மரத்தை பொருத்த வரையில் மரங்களின் அரசன் என்றே சொல்லலாம். அதிக அளவு தெய்வீக சக்திகளை பெற்ற அற்புதமான விருட்சம். இந்த மரத்தை நாம் தினமும் சுற்றி வந்தாலே நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும். ஏனெனில் இந்த மரத்தில் மகாலட்சுமி தாயார் வீற்றிருப்பதாக சொல்லப்படுகிறது.

அது மட்டும் இன்றி விநாயகர் வழிபாட்டிலும் கூட அரச மரத்தடியில் இருக்கும் விநாயகரை வழிபடும் போது அதிக அளவு நமக்கு நன்மைகள் ஏற்படுவதுண்டு. ஆகையால் தான் நாம் எந்த ஒரு காரியத்தை தொடங்கும் போது முதலில் அரசமரத்தடி விநாயகர் தொழுவது சிறப்பானதாக சொல்லப்பட்டிருக்கிறது. பிள்ளை பேறுக்காவும் இந்த அரச மரத்தை வலம் வருவதும் காலம் காலமாக நாம் பின்பற்றும் ஒரு வழக்கமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி இந்த மரத்தில் தேவர்கள் வீற்றிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மரத்தினை நாம் நட்டு வளர்க்கும் போது நம்முடைய துன்பங்கள் அனைத்தும் தூர போகும் என்பதில் சந்தேகம் இல்லை.

இதையும் படிக்கலாமே: நிம்மதியான குடும்பத்தை பெற நிலை வாசலில் இந்த பொருளை வையுங்க. நிம்மதியை நிலை குலைக்கும் அத்தனை கெட்ட சக்திகளையும் இது அழித்துவிடும்.

இழந்தவை யெல்லாம் திரும்பப் பெற நமக்கு பரிகாரங்கள் உதவி புரிந்தாலும் கூட, நம்முடைய செயல்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எந்த ஒரு காரியத்தை செய்யும் போதும் சிந்தித்து செய்வது நல்லது. ஏனெனில் வாழ்க்கையில் எந்த ஒரு பொருளையும் அடைவது எவ்வளவு கடினமோ அதே போல் இழுந்த பொருளை திரும்ப அடைவது அதை விட கடினம். ஒரு வேளை நம்மையும் மீறி இது போன்ற சிக்கலில் நாம் சிக்கிக் கொண்டால் அனைத்தும் நம்மை விட்டு போய் விட்டதே என்று குழம்பிக் கொண்டே இருக்கக் கூடாது. இப்படி புலம்பினாலே நமக்கு எந்த நல்லதும் நடக்காது. மனம் சோர்வு இல்லாமல் அடுத்து முன்னேறுவதற்கான முயற்சிகளை எடுப்பதுடன் இந்த ஒரு எளிமையான பரிகாரத்தையும் செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -