நிம்மதியான குடும்பத்தை பெற நிலை வாசலில் இந்த பொருளை வையுங்க. நிம்மதியை நிலை குலைக்கும் அத்தனை கெட்ட சக்திகளையும் இது அழித்துவிடும்.

vasal
- Advertisement -

குடும்பத்தில் சந்தோஷம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகிறது. நிம்மதி இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டது. இது எல்லாம் எதனால் நடக்கிறது என்றே தெரியவில்லை. புரியாத புதிராக கஷ்டங்கள் வரும்போதே நாம் கொஞ்சம் சுதாரித்துக் கொள்ள வேண்டும். ஏதோ கெட்ட நேரம் நம்மை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. அதை சரி கட்ட நம்மளால் முடிந்த சில முயற்சிகளை மேற்கொள்ளலாம். நம் வீட்டிற்கு நல்லது நுழையக்கூடிய இடம் நிலை வாசல், கெட்டது வரக்கூடிய இடமும் நிலை வாசல் தான். வாஸ்து தேவதைகள் குலதெய்வம் வாழக்கூடிய இடமும் நிலை வாசல் தான்.

நம்முடைய வீடு சந்தோஷமாக இருந்தால் நிலை வாசலில் தெய்வங்கள் வாழ்வதாக அர்த்தம். வீட்டில் சந்தோஷம் நிலை குலைந்து போகிறது என்றால், நிலை வாசலில் இருக்கும் தெய்வங்கள் அந்த இடத்தில் வசிக்கவில்லை என்று தான் அர்த்தம். உங்கள் குடும்பத்தின் நிலைமையை வைத்து உங்கள் நிலை வாசல் படியில் தெய்வங்கள் இருக்கிறதா இல்லையா என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

குடும்ப நிம்மதிக்கு நிலை வாசலில் வைக்க வேண்டிய பொருள்:
உங்களுடைய வீட்டில் கஷ்டம் இருக்கிறது நிம்மதி இல்லை என்னும் பட்சத்தில், நிலை வாசலில் குலதெய்வத்தை கொண்டு வந்து அமர வைக்க வேண்டும். அதற்கு என்ன செய்வது. தினமும் நிலை வாசல் கதவுக்கு முன்பாக நின்று குல தெய்வத்தின் பெயரை 27 முறை உச்சரித்து குலதெய்வத்தை வீட்டிற்கு அழைக்க வேண்டும்.

முதலில் நிலை வாசல் கதவு, நிலை வாசல் படி எல்லாவற்றையும் ஒரு ஈரத்துணி போட்டு துடைத்து விட்டு, நிலை வாசலுக்கு மணக்க மணக்க மஞ்சள் குங்குமம் சந்தனம் வைக்க வேண்டும். உங்கள் வீட்டு முறைப்படி பொட்டு வைத்துவிட்டு நிலை வாசலுக்கு இரண்டு பக்கமும் மண் அகல் விளக்கில், விளக்கு ஏற்றி வைத்துவிட்டு தினமும் குல தெய்வத்ன் நாமத்தை சொல்லி வீட்டிற்குள் அழைத்தால் குலதெய்வம் வீட்டிற்குள் குடியேறி விடும்.

- Advertisement -

குலதெய்வத்தை நினைத்து ஒரு கைப்பிடி நெல், பச்சரிசி நெல்லாக கிடைத்தால் இன்னும் சிறப்பு. அதை ஒரு மஞ்சள் துணியில் வைத்து முடிச்சாக கட்டி குலதெய்வத்தை நாமத்தை சொல்லிக் கொண்டே இந்த முடிச்சை நிலை வாசலில் கட்டி தொங்க விடுங்கள். வீட்டிற்குள் எந்த கெட்ட சக்தியும் நுழையாது. வீட்டிற்குள் இருக்கும் நிம்மதி நிச்சயம் கெட்டுப் போகாது.

இதையும் படிக்கலாமே: பர்ஸில் பணம் இல்லாமல் காலியாக இருக்கிறதே என்று புலம்புவோர் ஸ்வஸ்திக் சின்னத்தை இதில் வரைந்து பர்ஸில் வைத்து பாருங்கள். பணம் இல்லை என்ற வார்த்தை கூட உங்களிடமிருந்து வரவே வராது.

நிலைவாசலுக்கு செய்யக்கூடிய பூஜை வாரம் தோறும் செவ்வாய் வெள்ளி என்று செய்யலாம். இந்த நெல் முடிச்சை அடிக்கடி மாற்ற வேண்டாம். வருடத்திற்கு ஒருமுறை மட்டும் மாற்றினால் போதும். தினமும் பூஜை செய்யும்போது ஊதுவத்தியை இந்த முடிச்சுக் காட்டுங்கள். இந்த நெல் முடிச்சை நிலை வாசலில் கட்டி விட்டால் குலதெய்வம் நிலை வாசல் கதவில் வந்து குடியேறி விடும் என்பது நம்பிக்கை. எளிமையான இந்த சின்ன ஆன்மீகம் பரிகாரத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -