ஜாதகத்தில் சுக்கிரன் பலம் பெற இதை செய்தாலே போதும்

sukura jathagam
- Advertisement -

ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் பலம் இழந்து இருந்தால் அந்த ஜாதகக்காரர்கள் பொருளாதார ரீதியிலும் சரி மற்ற விஷயத்திலும் சரி மிகவும் பின்தங்கி தான் இருப்பார்கள். சுக்கிர பலன் என்பது வெறும் பணம் மட்டும் கிடையாது நாம் செய்யும் தொழில் அந்தஸ்து இப்படி சுற்றியுள்ள அனைத்தும் சரியாக கிடைக்க இது மிகவும் முக்கியம்.

அப்படி ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் பலமிழந்து இருக்கும் பொழுது நாம் செய்ய வேண்டிய ஒரு சில வாழ்வியல் முறைகள் உண்டு. அதை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நம் தெரிந்து கொள்ள போகிறோம். இதை அனைவருமே செய்வது நல்லது.

- Advertisement -

ஜாதகத்தில் சுக்கிரன் பலம் பெற

இதற்கு முதலில் நாம் ஆடையில் இருந்து தொடங்கலாம். சுக்கிரன் நம்முடைய ஜாதகத்தில் வளமாக இருக்க நாம் அரை வெள்ளை அதாவது ஆப் ஒயிட் என்று சொல்வார்கள் அல்லவா அந்த நிறத்திலான ஆடைகளை அணிய வேண்டும் அல்லது பிங்க் நிறத்திலான ஆடைகளை உடுத்த வேண்டும்.

குறிப்பாக வெள்ளிக்கிழமையில் இந்த நிற ஆடைகளை அணிவது நல்லது அது மட்டுமின்றி ஏதேனும் முக்கியமான காரியமாக செல்லும் போது இந்த நிற ஆடையை அணிந்து செல்லுங்கள். அதே போல் இந்த கிழமையில் வெள்ளை நிற இனிப்பை மற்றவர்களுக்கு வாங்கி கொடுங்கள். வெள்ளிக்கிழமை பூஜையிலும் இதே போல வெள்ளை நிற பிரசாதத்தை நெய்வேத்தியமாக வைக்கலாம்.

- Advertisement -

அதே போல் நீங்கள் குளிக்கும் தண்ணீரில் ஏலக்காய் அல்லது ரோஸ் எசன்ஸ் ஆயிலை கலந்து குளிக்கலாம். இது நம் உடலை நல்ல நறுமணத்துடன் வைப்பதுடன் புத்துணர்ச்சியும் ஏற்படுத்தும். இந்த ஆயில் கிடைக்கப் பெறாதவர்கள் ஏலக்காயை தட்டி அதை தண்ணீரில் சேர்த்து குளிக்கலாம். இந்த நறுமணங்கள் வீசும் இடத்தில் சுக்கிர வாசம் இருக்கும் .

அடுத்து நீங்கள் எப்போது பூஜை செய்தாலும் ஸ்ரீம் என்ற இந்த மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். இதை மற்ற நாட்களில் சொல்ல தவறினாலும் வெள்ளிக்கிழமையில் இதை கட்டாயமாக சொல்வதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். இதை அனைத்திலும் விட உங்களை எப்போதும் அழகாக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

சுக்கிர பகவான் எப்போதும் அழகு நிறைந்த பொருட்களில் அதிகம் வசியம் ஆவார். ஆகையால் உங்களை எப்போதும் அழகாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். அடிக்கடி முகத்தை கழுவி அழகாக பொட்டு பூ வைத்து பார்க்க மங்கல கரமாக இருங்கள். இத்துடன் நல்ல வாசம் மிக்க திரவியங்களை போட்டுக் கொண்டிருந்தால் சுக்கிர வாசம் நிச்சயம் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: உங்க வீட்டின் தென்கிழக்கு மூலையில் இந்த ஒரு பொருள் இருந்தால் போதும் பணம் தானாக வீடு தேடி வரும்.

சுக்கிர வாசம் கிடைக்க மேல் சொன்ன இந்த எளிய வாழ்வியல் பரிகாரங்களை கடைபிடித்தாலே போதும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த தகவல் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையலாம்.

- Advertisement -