உங்க வீட்டின் தென்கிழக்கு மூலையில் இந்த ஒரு பொருள் இருந்தால் போதும் பணம் தானாக வீடு தேடி வரும்.

vasthu
- Advertisement -

வீட்டில் மகாலட்சுமியின் அம்சம் நிறைவாக இருக்க வேண்டும் என்றால், அதற்கு நாம் செய்ய வேண்டிய ஒரு சுலபமான பரிகாரத்தை பற்றி இன்று பார்க்கப் போகின்றோம். வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, மகாலட்சுமிக்கு சின்னதாக வழக்கம் போல பூஜை செய்துவிட்டு, இந்த ஒரு பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயம் உங்கள் வீட்டில் இருக்கும் பணகஷ்டம் தீரும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. எளிமையான செலவில்லாத இந்த பரிகாரத்தை தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து பலன் அடையலாம்.

செல்வம் பெருக தென்கிழக்கு மூலை பரிகாரம்

இதற்கு உங்களுக்கு தேவையான பொருள் ஒரு சோளம். மக்காச்சோளம் கடைகளில் விற்கும் அல்லவா. 10 ரூபாயிலிருந்து 20 ரூபாய் இருக்கும். அதை வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு மஞ்சள் நிற துணியை எடுத்து அந்த சோளத்தை, அந்த மஞ்சள் நிற துணியில் வைத்து நன்றாக கட்டி, வீட்டின் தென்கிழக்கு மூலையில் ஒரு ஆணியில் மாட்டி வையுங்கள்.

- Advertisement -

அப்படி இல்லை என்றால் தென்கிழக்கு மூலையிலேயே ஒரு அலமாரியில் வைத்து விடுங்கள். சோளத்தின் மேலே இருக்கும் அந்த தழைகளை எல்லாம் பிரித்து எடுத்து விட்டு, மஞ்சள் நிற சோளத்தை அந்த மஞ்சள் துணியில் வைத்து கட்ட வேண்டும்  என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு இந்த பரிகாரத்தை செய்யுங்கள். அவ்வளவுதான். அது அந்த மூலையில் அப்படியே இருக்கட்டும்.

தினமும் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யும்போது ஊதுவத்தியை அந்த முடிச்சுக்கும் காண்பித்து பணக்கஷ்டம் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். ஆறு மாதம் கழியட்டும். அந்த முடிச்சுக்கு உள்ளே இருக்கும் சோளத்தை எடுத்து காக்கை குருவிகளுக்கு இரையாக போட்டுவிட்டு, மீண்டும் ஒரு புதிய சோளத்தை, புது துணியில் வைத்து கட்டி வைக்க வேண்டும்.

- Advertisement -

இப்படியே தொடர்ந்து தென்கிழக்கு மூலையில் சோளம் இருந்தால் உங்களுடைய வீட்டில் பணக்கஷ்டம் வராது என்பது ஒரு நம்பிக்கை இருக்கிறது. இதை எத்தனை நாள் தொடர்ந்து அந்த இடத்தில் வைப்பது. உங்களுக்கே தெரியும் அல்லவா. உங்கள் வீட்டில் பணக்கஷ்டம் சரியாகிவிட்டது. இருந்த பெரிய கடன் தொல்லையிலிருந்து வெளியில் வந்து விட்டோம்.

இனிமே எங்களுக்கு பிரச்சனையே இல்லை, என்ற மனநிறைவு வரும் வரை இந்த சோளத்தை அந்த திசையில் வைத்திருக்கலாம். ஆனால் ஆறு மாதத்திற்கு ஒரு முறை புதிய சோளத்தை நீங்கள் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். பழைய சோளம் பூச்சி அரித்துவிடும். பூச்சி அரித்த சோளத்தை பரிகாரத்திற்கு நாம் பயன்படுத்தக் கூடாது.

இதையும் படிக்கலாமே: நாளை மாஹாளய அமாவாசை. பித்ரு தோஷம் நீங்க 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய பரிகாரம்.

இந்த பரிகாரத்தை எல்லாம் கேட்பதற்கு பைத்தியக்காரத்தனமாக இருக்கலாம். ஆனால் போன போக்கில் இப்படி நாம் செய்யும் சில பரிகாரங்கள் நம்மை வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லவும் செய்யும். லால் கிதாப் என்று சொல்லப்படும் புத்தகத்தில் இப்படிப்பட்ட பரிகாரங்கள் நிறைய கொடுக்கப்பட்டிருக்கிறது. அதிலிருந்து எடுக்கப்பட்ட பரிகாரங்களில் ஒன்றுதான் இதுவும். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த தாந்திரீக பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -