தேவைகள் நிறைவேற ஜாதிக்காய் பரிகாரம்

jathikai pariharam
- Advertisement -

ஒருவர் உயிருடன் வாழ வேண்டும் என்றால் அவருக்கு அடிப்படையாக சில தேவைகள் இருக்கும். அந்த தேவைகள் பூர்த்தி அடைந்தால் தான் அவரால் நல்ல முறையில் வாழ முடியும். அப்படி அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அந்த முயற்சிகள் வெற்றி பெறுவதற்கு ஜாதிக்காயை வைத்து செய்யக்கூடிய ஒரு தாந்திரீக பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வசியம் மிகுந்த பொருட்கள் என்று சில பொருட்கள் இருக்கின்றன. அவற்றுள் மிகவும் குறிப்பிடத்தக்கதாக கூறப்படுவது பச்சை கற்பூரம், ஏலக்காய், கிராம்பு, கல்லுப்பு போன்றவை இந்த வரிசையில் ஜாதிக்காயும் வசிய தன்மை மிக்க ஒன்றாக திகழ்கிறது. ஜாதிக்காயில் பல மருத்துவ குணங்கள் இருக்கிறது. பல நோய்களுக்கு மருந்தாகவும், அழகை மேம்படுத்த கூடிய ஒரு அற்புதமான பொருளாக ஜாதிக்காய் திகழ்கிறது. அந்த ஜாதிக்காயை நாம் எந்த முறையில் பயன்படுத்தினால் நம்முடைய தேவைகள் பூர்த்தியடையும் என்று பார்ப்போம்.

- Advertisement -

ஜாதிக்காயை சிறிது பன்னீர் ஊற்றி கல்லில் உரசி அதிலிருந்து வரும் விழுதை நம்முடைய நெற்றியில் தினமும் திலகமாக வைத்துக் கொள்வதன் மூலம் முக வசியம் ஏற்படும். நாம் எந்த ஒரு காரியத்திற்காக வெளியில் செல்கிறோமோ அந்த காரியத்தில் எந்தவித தடைகளும் இல்லாமல் நிறைவேறும். நம்முடைய தேவைகள் பூர்த்தியடிவதற்கு நமக்கு சுத்தமான நல்ல ஜாதிக்காய் மூன்று வேண்டும்.

அடுத்ததாக சதுர வடிவில் இருக்கக்கூடிய மஞ்சள் நிற துணி வேண்டும். ஒரு சிலருக்கு வீட்டில் உணவு பற்றாக்குறை இருக்கும். அப்படிப்பட்டவர்கள் இந்த மஞ்சள் நிற துணியில் மூன்று ஜாதிக்காயை வைத்து சிறிதளவு பச்சரிசியை அதனுடன் சேர்த்து மூட்டையாக கட்டி அவர்கள் வீட்டில் இருக்கும் அரிசி பாத்திரத்திற்குள் வைத்து விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் அவர்கள் வீட்டில் உணவு பஞ்சமே ஏற்படாது.

- Advertisement -

பணம் சேர வேண்டும் என்று ஆசை படுபவர்கள் மஞ்சள் நிற துணியில் மூன்று ஜாதிக்காயை வைத்து அதனுடன் சில்லறை காசுகளையும் ரூபாய் நோட்டுகளையும் வைத்து மூட்டையாக கட்டி பணம் சேமித்து வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு போதுமான அளவு பணவரவு ஏற்படுவதற்குரிய வழிகள் கிடைக்கும்.

ஒரு சிலர் தங்களுடைய பிள்ளைகளின் திருமணத்திற்காக நகைகளை சேர்க்க வேண்டும் என்று நினைத்திருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் மஞ்சள் நிற துணியில் மூன்று ஜாதிக்காயை வைத்து அதனுடன் சிறிய அளவில் ஏதாவது ஒரு தங்க நகையை வைத்து மூட்டையாக கட்டி நகைகள் வைத்திருக்கும் இடத்துடன் சேர்த்து வைக்கும் பொழுது அவர்களை அறியாமலேயே தங்க நகைகள் சேருவதற்குரிய வாய்ப்புகள் ஏற்படும்.

- Advertisement -

பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்கவில்லை படிப்பில் ஆர்வமில்லாமல் இருக்கிறார்கள் என்னும் பட்சத்தில் இதே மஞ்சள் நிற துணியில் மூன்று ஜாதிக்காய் வைத்து மூட்டையாக கட்டி, பிள்ளைகளின் புத்தகம் வைத்திருக்கும் பையில் போட்டு விட வேண்டும். அதே போல் அவர்கள் புத்தகம் வைத்திருக்கும் அலமாரியில் வைக்கலாம். இப்படி செய்வதன் மூலம் பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரித்து நன்றாக படித்து நல்ல மதிப்பெண்கள் எடுப்பார்கள்.

ஜாதிக்காயை நாம் எந்த பொருளுடன் சேர்த்து வைக்கிறோமோ அந்த பொருள் நமக்கு பன்மடங்கு பெருகும் என்று கூறப்படுகிறது. வீட்டு பூஜை அறையில் மஞ்சள் நிற துணியில் மூன்று ஜாதிக்காய் வைத்து மூட்டையாக கட்டி ஒரு இடத்தில் வைத்து விடுங்கள். இப்படி நாம் பூஜை அறையில் இந்த மூட்டையை வைப்பதன் மூலம் தெய்வீக வசியம் ஏற்படும். நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை தரும் வாராகி தீப வழிபாடு

அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் எளிதில் கிடைக்கக்கூடிய இந்த ஜாதிக்காயை நம்பிக்கையுடன் நாமும் பயன்படுத்தி நன்மைகளை பெறுவோம்.

- Advertisement -